tharshini
Active Member
உன்னில் இடம் கொடுப்பாயா?? - 5
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
நன்றி சகோNice
கண்டிப்பா சகோ… உங்க கருத்தும் மிக மிக சரியே…கீர்த்தி குடும்பம் இப்படி பிறந்த நாளுக்கு கூட ஒரு வாழ்த்து சொல்லாமல் ஒதுக்கி வைக்கிற அளவுக்கு என்ன நடந்து இருக்கும்????
ஆசிரமங்களுக்கு உதவி செய்வதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து ....
மிதுன் மாதிரி எனக்கும் கீர்த்தி கருத்துல உடன்பாடு இல்லை....
நாமும் தினமும் வித விதமாவா சாப்பிடுறோம்..
ஏதாவது விஷேஷம் வந்தால் அன்னைக்கு மட்டும் சாப்பாடு ஸ்பெஷலா இருக்கும்.... மத்த நாளில் சாதாரணமா சாப்பாடு தான .....
அதே மாதிரி தான் அவங்களுக்கும் விஷேஷம் வந்தால் மட்டும் விதவிதமா
சாப்பிடணும் என்ற புரிதல் இருக்கும்....
நம்ம வீட்டு பிள்ளைங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுப்போம் அதனால் அடம் பிடிப்பாங்க ... ஆனால் அந்த குழந்தைகள் எல்லாம் சின்ன வயசில் இருந்தே கட்டுபாடுக்கு பழகி தான் வளருவாங்க....
ஒரு நாள் நல்லா சாப்பிட்டால் தினமும் அது வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவங்களுக்கு இருக்காது ....
அதுக்கு பேர் மறைமுக பிச்சை இல்லை நம்மால் முடியும் போது அவங்களோடு பகிர்ந்து சாப்பிடுறது....
கீர்த்தி மாதிரி தான் நிறைய பேர் ஆசிரமத்து பிள்ளைங்க என்றாலே நல்ல துணிமணி , சாப்பாடுக்காக மட்டுமே ஏங்குற மாதிரி ஒரு எண்ணம் வச்சிருக்காங்க...
அப்படியே சாப்பாடு போடுறது பிச்சை மாதிரி தெரிஞ்சால் படிப்புக்கு தேவையான நோட்டு புக் பேனா பென்சில் ஏதாவது கூட வாங்கி கொடுக்கலாம்..... ஆனால் ஏதோ ஒரு வகையில் அந்த மாதிரி பிள்ளைங்களுக்கு உதவி செய்தால் அவங்களுக்கும் ஆதரவா தான் இருக்கும்......
அவங்க ஏங்கி போயிடுவாங்க என்று சொல்லி நாமே ஒரு காரணத்தை உருவாக்கி அவங்களை ஒதுக்கி வைப்பதை விட நம்மால் முடிஞ்சதை செஞ்சு அவங்களுக்கு துணையா இருக்கலாம்......
நன்றி சகோNice