Rudraprarthana
Well-Known Member
"அப்போ உங்களுக்கு என் மேல நம்பிக்கை வந்துடுச்சாண்ணா" என்று உற்சாக குரலில் வர்ஷினி கேட்க,
குளிரூட்டப்பட்ட அறையில் அவனிடம் பேசுவதற்காகவே பிரத்யேகமாக அமைக்க பட்டிருந்த பெரிய திரையில் தங்கையின் கேள்விக்கு அதரங்களை அளவாக விரித்த விஷ்வா, "உன் மேல இல்ல உன்னோட டீச்சர் மேல இருக்க நம்பிக்கையால உன்னை பர்மிட் பண்றேன்" என்றவனின் பார்வை கணப்பொழுதில் ப்ரீத்தி மீது பதித்து மீள வர்ஷினியிடம் தன் சம்மதத்தை அளித்தான்.
எங்கே தமையன் சம்மதிக்காமல் போய் விடுவானோ என்று இத்தனை நேரம் ஒரு வித பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளோ இப்போது துள்ளி குதிக்காத குறையாக நாற்காலியில் இருந்து எழுந்தவள் திரையின் முன்னே சென்று, "தேங்க்ஸ்ண்ணா..!! தேங்க்ஸ்..!! தேங்க் யூ வெரி மச்..!!" என்று குதுகலத்துடன் கூறியவள் இதை மற்றவர்களிடம் பகிர வேண்டி அறையில் இருந்து வேகமாக சென்றாள்.
தன்னை மட்டும் தனியே விட்டுவிட்டு செல்லும் அவளையே பார்த்து கொண்டிருந்த ப்ரீத்தி தானும் எழுந்து அவள் பின்னே செல்ல முனைய அவளை திசை திருப்பியது விஷ்வாவின் பாடல்,
"ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு..
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு.."
என்று இப்போது அமர்ந்திருந்த நாற்காலியின் கைபிடியில் ஒரு கரம் பதித்து அதில் முகத்தை தாங்கி அவளை பார்த்து ரசனையுடன் பாடிக்கொண்டிருந்தான் விஷ்வதேவ்.
வெளியே செல்ல போனவளுக்கு அவன் பாடலில் அகமெல்லாம் தீப்பற்றி எரிந்தாலும் அவனை கண்டுகொள்ளாமல் ப்ரீத்தி வெளியேற முயல அதற்குள்,
"நீ சைவமா..?? அசைவமா..?? டார்லிங்" என்று கேட்டு அவள் நடையை விஷ்வா தடை செய்திருந்தான்.
கண்களை மூடி இருகரங்களையும் அழுத்தமாக சேர்த்து உடல் இறுக ப்ரீத்தி நின்றிருந்த கோலமே அவள் கோபத்தை கட்டுபடுத்த போராடுகிறாள் என்பது புரிபட அதில் விஷ்வாவின் அதரங்கள் மேலும் அழகாய் விரிந்தது..
"என்ன பேபி அமைதியா இருக்க நான் கேட்ட கேள்வி புரியலையா..?? இல்ல உனக்கே பதில் தெரியலையா..??" என்று இன்னுமே அவள் பொறுமையை அவன் சோதிக்க,
இதழ்களை அழுந்த மூடி அவன் புறம் திரும்பியவள், 'உனக்கு என்ன ப்ராப்ளம் தேவ் இவ்ளோ நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்த..!! ஏன் திடீர்ன்னு இப்படி பண்ற' என்று நிதானமாக கேட்க
"பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?"
என்று அவன் தன் பாடலை தொடர எதிரே இருந்த நாற்காலில் இருகரங்களையும் பதித்து அழுத்தமாக கால்களை ஊன்றி நின்றவள், "இப்போ என்ன வேணும் உனக்கு" என்று கேட்க
"அதான் பேபி நீ...?? என்று ஆரம்பித்தவன் இரு உனக்கு புரியற மாதிரி சொல்றேன் "அதாவது நான் பியூர்.." என்று அவன் தொடங்கவும் அதற்குள் அவன் பேச்சை கரம் நீட்டி தடை செய்திருந்தாள் ப்ரீத்தி.
ஹாய் செல்லகுட்டீஸ் ...
"சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" இது தான் விஷ்வா - ப்ரீத்தி கதையின் பெயர் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க... நாளைக்கு பதிவு வரும்.
Last edited: