மிகவும் அருமையான பதிவு சவீதா
.மனபாரத்தை இறக்கி வைக்க கோவிலுக்கு சென்று வேண்டிய ஆருத்ரனின் வேண்டுதல் பலித்து விடும் என்பது போல மணியோசை கேட்க,அதுவே தான் வேண்டியது நிறைவேறும் என்ற எண்ணத்தை கொடுத்து ருத்ரனின் மனபாரமும் குறைந்தது
என்னது...அஞ்சனாவை உயிரா விரும்பறேன் எங்களை வாழ விடுங்கன்னு விக்னேஷ்,ருத்ரனிடம் கெஞ்சினானா
.விக்னேஷ்காக அவளை கண்டுக்காம இருந்தவன்,இன்னைக்கு பொருத்தது போதும்னு பொங்கி,பேருக்கு ஏற்றார் போல ருத்ரதாண்டவம் ஆடிட்டான்
.
ஒழுக்கங்கெட்டவ எப்படி என் பொண்டாட்டிய பத்தி பேசலாம்னு அவ கழுத்த பிடிச்சுட்டான்
.
என்னோட வாழ்ந்து பார்த்தியான்னு கேட்டவன்,பணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிட்டவ, என் தோற்றம் புடிக்காம உன் தோற்றத்தை பார்த்து வந்திருக்கா,இவ எப்படிபட்டவன்னு தெரிஞ்சுக்க இவளை நம்பாதே என விக்னேஷிடம் நல்லா போட்டு கொடுத்துட்டான்
.
இன்னமும் நாங்க அவளுக்கு போட்ட நகையை தான் போட்டுட்டு சுத்தறா,இதிலேயே தெரியலையா அவளோட லட்சணம்னு ருத்ரன் சொல்லியும்
,நகைய கழட்டி கொடுக்கலையே
. இதுல இவ அம்மாவும் கூட்டு சேர்ந்திருக்கா என்ன ஜென்மங்களோ
.
இருக்கற கவலையில இவட்ட பேசி நிம்மதிய கெடுத்துக்கனுமா என ருத்ரன் அமைதியாக போக
பேசாம போனவன்ட்ட அஞ்சனா வீண்வம்பிழுத்து நல்லா வாங்கி கட்டிக்கிட்டா
.
விக்னேஷ்,அஞ்சனாவ பார்த்த பார்வையும்,பேசிய விதமும் பார்த்தா,இனி வரும் காலம் முழுதும் விக்னேஷ் பேச்சை கேட்டு வாழ வேண்டிய நிலை.செய்த பாவத்துக்கு கை மேல் பலன்
.
எல்லாம் சரி அருள் எப்படி இருக்கா,எங்கே இருக்கா,அவ புருசன் சொன்னது யாருனு சொல்லலை..