அருமையான பதிவு மிலா.இப்படியெல்லாமா மனுஷங்க இருக்காங்க,தன்னோட வீட்டுல ஆயிரம் பிரச்சனையை வச்சுட்டு அடுத்த வீட்டுல கண்ணை வச்சுட்டு இருக்காங்க.
வாசுகியின் அம்மா தப்பு செஞ்சாங்களா இல்லையான்னு கூட இவங்களுக்கு தெரியாது என
நினைப்பதை பார்த்தால் ரோஹனுக்கு,வாசுகி அம்மாவை தெரிந்திருக்குமோ, ரோஹனுக்கும்,
வாசுகியின் அம்மாவுக்கும் என்ன சம்மந்தம்.
ரோஹன் பேசிப்பேசியே வாசனை வீடு வாங்க சம்மதிக்க வைத்ததோடு,வீட்டை வாசு,வாசுகியின் பெயருக்கு வாங்க வைத்து விட்டான்.ரோஹன் என்ன எதிர்பார்த்து இவ்வளவும்
செய்கிறான் என்பது புரியவில்லை.
பூர்ணா பொண்ணுக்கு நல்லா சொல்லிக் கொடுக்குறே, நிச்சயம் ஆகறதுக்கு முன்னாடியே பொண்ணு பேர்ல வீட்ட மாத்தியிருக்கனும்னு சொல்லுது,வாழ்ற புள்ள தாயாலே கெடறது இதுபோல உள்ளவங்களால தான்.இது வாய அடக்கறவங்க யாரும் இல்லையா.
ரோஹன் நல்லவனா,கெட்டவனானு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்,இதுலே ரோஹன், மந்த்ராவை கட்டுவானா,மகாலஷ்மிய கட்டுவானான்னு பீதிய கிளப்பி விடறீங்களே மிலா.