HI malli sis
சுந்தரி உணர்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க...
பெண் மனம் பலதையும் ஆராயும்... முரண்பாடு மூட்டை..
சுந்தரி அந்த நிலைல இருக்கா .... Point point ah pesuringale ji
அடடா துரை கண்ணா ... ஏன்டா பிடிச்சத விட்டுடு .. இப்போ ஆசைபடுற..
பிடிக்காமா செய்துட்டு அப்புறம் பிடிகுதுனா....Manufacturing defect... பட்டு தான் திருதுனும்
hi friend MM,
பாவம் பேதை அவளை உள்ளுக்குள் ஒடுங்க செய்யறான்
பளிச் பளிச்ன்னு பேசறா முகத்து நேரா உண்மையை அப்பவும் அவனுக்கு சொரணை வரவில்லை முடிவு எடுக்க
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை னு இருக்கான்
அவனுக்கும் விவசாயம் அதை சார்ந்த வேலைகள் பிடிக்கும்னு காண்பித்தாள் அவள் கொஞ்சம் சீக்கிரம் மாற வாய்ப்பு இருக்கிறது போல் உள்ளது
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ
அதன் சொல்லிட்டாங்க இல்லை....இது என்ன புது techniqueஆ பாராட்ட...
அப்ப பாராட்டவே தெரியலைனா என்னபா பண்ணனும்?
ஹாய் மல்லி
நீங்க உருவாக்கற ஹூரோயின் கேரக்டர் எல்லாமே ரொம்ப அருமை பா.திமிர் பேச்சு, தெளிவான சிந்தனைணு ,அளவான அழகுனு கலக்கறாங்க போங்க மல்லி.ஆனா ஹூரோவ எப்படியும் அடிவாங்க வெக்கறீங்க அது இன்னும் சூப்பர்.
Here comes the Nee Enbathu Yaathenil 9
EPISODE 9