Hi shoba sis!
நான் எபியெல்லாம் ஸ்கிப் பண்ணேல்லை. நான் கதைக்குள் நுளைந்து கண்ணன் லட்டுக் காதலில் மெய்சிலிர்த்து மெய்மறந்து போகேக்கை அவர்களுக்கு விபத்து நடந்தது தாங்க முடியாத அதிர்ச்சி கவலை. ஐயையோ பிரிய்பபோகின்றார்கள் என்ற தவிப்பில் இரண்டாவது பாகம் படிக்கத் தயங்கினேன். மற்றும்படி இன்றைய எபிதான் படிக்கவேணும். அறுபத்தி மூணாவது எபியில அழுகையே வந்துவிட்டது. எங்க நாமதான் கதையைப் படிக்கும் போது புத்தர், ஞானி, சாமியாரைப் போல உணர்வுகளை அடக்கவேண்டியதா இருக்கு. அம்மா கதை படிக்கும் போது அழுகுது சிரிக்குது என்று குழந்தைகள் ஒரு பக்கம். ஏன்டி உனக்கு வீட்டில வேற வேலையில்லையா எப்ப பார்த்தாலும் அத(லாப்டொப்) கட்டிப்பிடிச்சிருக்கியே என்று புருசன் ஒரு பக்கம். நீங்கள் எல்லாம் அருமையாகக் கதை எழுதுகின்றீர்கள். கதையைப் படிக்கும் போது குபீரென்று சிரிப்பு வந்தாலோ, திடிரென்று அழுகை வந்தாலோ சூழ்நிலையை உணர்ந்து உணர்வுகளை அடக்க வேண்டியதாயுள்ளது. வீட்டில் ஒருவரும் இல்லையென்றால் உணர்வுகள் சுதந்திரமா வெளிப்படும். உங்கள் எழுத்துகளால் சமையைல், சாப்பாடு, குளியல், தூக்கம் எல்லாவற்றையும் எங்களை மறக்கப் பண்ணுகின்றீர்கள் அனைவரும். இன்றைய எபி படிக்கப்போகின்றேன். நன்றி.