விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம்.
குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக இந்நாளைக் கொண்டாடுவார்கள்.
நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.
பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும்.
தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் அனைவருக்கும் அம்பிகையின் திருவருள் கிடைக்கட்டும். வெற்றிகள் வந்து குவியட்டும்..
தோழமைகள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்