உங்களிடம் கேட்பதற்கு
கேள்வியெல்லாம் நிறைய
இருக்கு, ஷோபா டியர்
காலைச் சுற்றிய இந்த தீபக்
பாம்பை சொந்தம்ன்னு பாவம்
பார்த்து அஷோக் அடித்துக்
கொல்லாமல் விட்டதால்
இவர்களை அவன் என்ன
செய்தான்?
அந்த வீணாப் போன தீபக்கின்
பேச்சை மட்டும் நம்பி "அவன்
தொட்டான் இவள் கெட்டாள்"-ங்கிற
சினிமாவில் வரும் வசனம் போல
சுதா கெட்டேப் போயிட்டாள்ன்னு
முடிவே செஞ்சு தீபக்கைத்தான்
சுதா கல்யாணம் செய்யணும்
அஷோக் கண்ணனுக்கு இவள்
லாயக்கில்லைன்னு தானே
முடிவு செஞ்ச அந்த ராமாயணக்
கூனியையே மிஞ்சும் மெண்டல்
மீனாட்சிக் கிழவி மூதேவி
இப்போ என்ன செய்வாள்?
இப்போ என்ன செய்வாள்?
தன்னோட கல்யாணத்துக்கு
அம்மா ஒண்ணும் தடா போட
மாட்டாள்ன்னு நினைக்கும்
அஷோக்கின் எண்ணம்
நிலைக்குமா?
இல்லை அந்த கூனிக் கிழவி
மீனாட்சியின் பேச்சைக் கேட்டு
சுதாவை மணமுடித்ததற்கு
சுசீலா ஏதாவது சொல்லுவாரா?
அந்த எடுபட்ட பேய் குணா
என்ன ஆனான்?
நிறையப் பணம் காசு
சம்பாதிக்கணுமுன்னு பாரீன்
போன சுதாவின் அருமைத்
தோழன் அன்பான கார்த்திக்
இனிமேல் இங்கு வருவானா?
மாட்டானா?
இல்லை அவனை ரீ என்ட்ரி
கொடுக்க வைப்பீங்களா?
அந்த அழகிய மஞ்சள் கொன்றைப்
பூக்கள் பாய் விரித்த வெளிச்சம்
பரவிய வெட்ட விடிகாலையில்
இறந்து போன ஜோடி யாரு?
இவ்வளவு நாளா சுதா அஷோக் கண்ணன்னுதான் நான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
அப்படி இல்லையோ?
ஒருவேளை அந்த ஜோடி
டேனியல் ஜான்சிராணியா?
ஆனால் இந்த ஜோடிக்கு
எதிரின்னு யாருமில்லையே
ஒரே குழப்பமாயிருக்கே,
ஷோபா டியர்