சரசு உள்ளே சென்று ஆரத்தி கரைத்து ஆலம் சுற்றவும் அனைவரும் உள்ளே போனார்கள்.வீட்டின் வெளிப்புறத்தை விட உட்புறம் கண்ணைப் பறித்தது என்றே சொல்லலாம்.
இன்டிரியர் டிசைன் மிகவும் அருமையாக இருக்க,எந்தவொரு இடத்திலிருந்தும் கண்ணை எடுக்க முடியவில்லை.
மாடிக்கு செல்லும் வளைவு கூட,வித்தியாசமாய்,பின்பக்க வாசலை பார்த்தவாறு அழகாய் இருக்க,வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளுமே செல்வ செழிப்பை அப்பட்டமாய்க் காட்டியது.
பிரபாகரனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்த கவலை போய்,இத்தனை வசதியானவர்கள் எதற்காக எங்கள் வீட்டில் சம்பந்தம் பேச வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் துளிர்விட,அமைதியாகவே இருந்தார்.வசந்தியின் நிலையும் அப்படியே!!
வாழ்வில் படிப்படியாக முன்னேறியவர்கள்.யாரையும் ஏமாற்ற தெரியாதவர்கள்.அடுத்தவர்களின் உழைப்பில் வாழ்ந்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் அற்றவர்கள் என்பதினாலையே இந்த கலக்கம்.
மகேன் ஏற்கனவே இதெல்லாம் விசாரித்திருந்ததினால்,அவனுக்கு அவ்வளவாய் கவலை இல்லை.தற்போதைய கவலை எல்லாம் அனுவைப்பற்றி தான்.
நாளை காலையில் அனுவின் சந்தோஷ முகத்தைப் பார்த்தால் தான் அவனுக்கு திருப்தி.மயூவை பற்றி எதுவும் கவலைப்படுவதற்கு இருப்பது போல அவனுக்கு தோன்றவில்லை.
தங்கையை பற்றி நன்கறிவான்.அவளாய் வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்தால்,நிச்சயம் சந்தோஷமாய் வாழ்வாள்.இல்லையென்றால் தன்னைத்தானே கெடுத்துக்கொள்வாள். அவளின் டிசைன் அப்படி..அவள் வாழ்க்கை அவள் கையில்!!
அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு மட்டும் வந்திருந்ததால்,”நாங்க கிளம்பறோம் அத்தை.எல்லாம் அப்படியே போட்டுட்டு வந்தாச்சு.சொந்தக்காரவங்களுக்கு எல்லாம் நாளைக்கு விருந்து கொடுக்கறதா சொல்லியிருக்கோம்.மாப்பிள்ளையும் அங்க இருந்திருந்தா,ஒண்ணாவே முடிச்சிருக்கலாம்”அரவிந்திற்கு குட்டும் மறைமுகமாய் வைத்துவிட்டு,
“இன்னொரு நாள் விருந்து வைக்கிறேன்.உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்கும்னு சொல்லுங்க”என்றான்.
அரவிந்த் தன் தப்பை சரி செய்யும் விதமாய்,”ஒருவாரம் போகட்டும்.வர்றோம்”எனவும்,அப்போதே கிளம்புகிறோம் என்றவர்களை உண்ண வைத்துவிட்டு,கிளம்பும் வரை உடனிருந்து எல்லாம் பார்த்துக் கொண்டார்கள் தாயும்,மகனும்.
தன் வீட்டினர் சென்றுவிட்டவுடன்,அதுவரை அமைதியாக இருந்தவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.கட்டுப்படுத்திக் கொண்டாள்.
இதுநாள் வரை தனித்து இருந்ததேயில்லை..யாராவது உடனிருப்பார்கள்.காயத்ரியாவது அவளுடன் இருப்பாள்.இன்று அப்படியில்லை.நேற்று அறிமுகமான இருவருடன் தனித்து விட்டிருக்கிறார்கள் என்றெண்ணும் போதே வீம்பும் பிறந்தது.
‘என்னால தனியா இருக்க முடியும்.தனியா வாழவும் முடியும்’முடிவெடுத்துக் கொண்டவள் திரும்ப,வேதா அவளையே யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தவர்,
கீழிருந்த ஒரு அறையை சுட்டிக்காட்டி,”நான் இருக்க சமயங்கள்ல அரவிந்த் இங்க தான் இருப்பான்.நான் ஊருக்கு போயிட்டா மேல இருக்க ரூம்ல தங்கிப்பான்..நான் தனியா இருக்கேன் இல்லையா? அதுக்குதான் இந்த ஏற்பாடு.ரொம்ப கேர் எடுத்துப்பான்..உன்னையும் தான்!!”இறுதியில் அழுத்தி சொன்னவர்,
“அந்த ரூம் தான்.போ.போய் ரெஸ்ட் எடு! நாளைக்கு உன் துணியெல்லாம் எடுத்து வைச்சுக்கலாம்”அனுப்பிவிட்டு தூங்கபோய்விட்டார்.
கடந்த இரண்டு நாட்கள் மிகவும் நீண்டுகொண்டு முடிவேயில்லாமல் செல்வது போல பிரம்மையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அறைக்குள் நுழைந்தால் கட்டிலில் அரவிந்த் அமர்ந்திருந்தான்.இங்கு வந்ததிலிருந்து தன்னை நேரடியாக பார்க்கவில்லை என்பது அவளுக்கும் தெரியும் தானே!!
‘இவனோடு...இல்ல இவங்களோட சுமூகமா போவோமா? இல்ல நம்ம விருப்பப்படி இருப்போமா?”யோசித்துக்கொண்டே விடை கிடைக்காமல் அங்கிருந்த சோபாவில் அமர,
“வெல்,கரெக்டான இடத்தில தான் செட்டில் ஆகியிருக்க”என்றான்.
ஒன்றும் புரியவில்லை அவளுக்கு!!
“இது என்னோட வீடு.இங்க நான் உனக்கு அலாட் பண்ணியிருக்க இடம் அந்த சோபா தான்.வேறெங்கேயும் உனக்கு தூங்க அனுமதியில்ல.புரிஞ்சுதா?”என்றான்.
அரவிந்த் வில்லன் போல அவளுக்கு காட்சியளித்தாலும்,”சரி”என்றாள்.
அந்த ரியாக்ஷன் அவனுக்கு பிடிக்கவில்லை.இன்னும் எதையோ எதிர்பார்த்தான்.
“ஈவன் நமக்குள்ள பெட் ஷேரிங்கும் கிடையாது”அவளின் முகபாவனைகளை அவதானித்துக்கொண்டே சொல்ல,
அவனின் பொறுமையை மேலும் சோதித்தவளாய்,பதில் சொல்லாமல்,தன் பேகிலிருந்து புத்தம்புது பெட்ஷீட்டை எடுத்து கீழே விரிக்கப் போக,அந்த நீள் சோபாவை சரி செய்து,”இதுல ரெண்டு ஆளே படுக்கலாம்.கீழ படுக்கணும்னு அவசியமில்ல”எனவும்,மறுக்காமல் மேலேயே படுத்துக்கொள்ள,படுக்கையில் சாய்ந்தவன் திரும்பி படுத்தான்.
இன்று எனக்கு எப்படிப்பட்ட இரவு!! ஒரு பெண்ணுடன் தனித்து நான்!! அதுவும் பிடிக்காத பெண்ணோடு ஒரே அறையில்!!!-விரக்தியாய் சிரித்துக்கொண்டாலும் ஆண் மனம் பெண்ணின் அனுமதியின்றி அவளை ரசிக்க செய்தது..
கூடவே..’இன்னொருத்தர் கூட அவ பக்கத்துல படுத்துக்கலாம்..இடமிருக்கு..ம்ம்ம்..அது நானாக இருந்தால்!!”கற்பனை தறிகெட்டுப் பறக்க,திரும்பி படுத்துக்கொண்டான்.
கல்யாணமாகியும் நான் பிரம்மச்சாரி தான்டா-சத்தமாகவே சொல்லிவிட்டான்.அவளுக்கும் கேட்டது தான்.கண் திறந்து அவனை பார்க்க,அவனும் பார்த்தான்.
இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டது...பெண்ணின் பேராயுதம் கண்கள் தான்!! வீழாமல் மீண்டது யார்?
அரவிந்த் மதியம் அவள் வினோதனுக்காய் அழுததை எண்ணியவன் ,அந்த கண்ணிலிருந்து மீண்டு,அகக்கண்ணை அடக்கி,புறக்கண்ணையும் இறுக்கி மூடிக்கொண்டான்.
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்...