uyirai tholaithaen UD 4

Advertisement

preethi sri

Well-Known Member
hi makkalae vandhutaen padinga comments pannunga ... netru padhivukku comments potta anaivarukkum nanri ........:):):):):)

தனது செல்போனில் சேவ் செய்யப்பட்ட தன்னவளின் முகம் பார்த்தவுடன் மனம் இரண்டு ஆண்டுகள் முன் நடந்த நிகழ்வை நினைத்தது


சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ



சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்




சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று.......


அப்பொழுது GV SOLUTIONS ஆரம்பித்த புதிது அஜய் மீட்டிங்கிற்காக பரபரப்பாக கிளம்பினான் கார் அலுவலகம் நோக்கி விரைந்தது .கார் பார்க் செய்து விட்டு லிப்ட்டில் ஏறும் பொழுது தான் நினைவு வந்தது முக்கியமான பைலை காரிலேயே வைத்து விட்டான் என்று திரும்பி எடுக்க வந்த பொது தான் அவளை பார்த்தான் தான் ஸ்கூட்டியை பார்க் செய்து திரும்பிய பொது தான் காலில் தெரியாமல் இடித்து கொண்டு சற்று கத்தியும் விட்டால் அருகில் இருந்த அஜய் திரும்பி பார்த்தான் முதலில் அவள் கண்கள் தான் அவன் கண்ணில் பட்டது உள்ளம் நினைப்பதை கண்ணாடி போல் பிரதிபலிக்கும் கண்கள் நேர்த்தியை கட்டிய புடவை 5.5அடி உயரம் வெண்ணை போன்ற நிறம் இடையை தாண்டிய கூந்தல் அதை ஒரு சிறிய கிளிப்பில் அடக்கியிருந்தால் குழந்தை தனமும் கம்பிரமும் நிறைந்த முகம் மெல்லிய இடை மாதுளை போன்ற செவந்த இதழ்கள் அறிவு அழகு திறமை பெண்மை என்ற அணைத்து குணங்களின் கலவையாக இருந்தால் அபிஜித்ரா……



பல்லவ நாட்டு சிற்பம் போல் அழகு பதுமையாக காட்சியளித்தாள் பார்ப்போரை மீண்டும் திரும்பி என்னை ஒரு முறை பார் என்று கூறும் அழகு யாராலும் அசைக்க முடியாத அஜய்யும் ஒரு நிமிடம் அசந்து தான் போனான் பின்னாலிருந்து குட் மோர்னிங் என்ற குரல் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பியவன் டேய் சீ

நீயா ஏன்டா இப்டி என்று தன் கனவு களைந்த கடுப்பில் கேட்க என்னடா ஏதோ யோசனைஅங்க பாத்துட்டு இருக்க என்று கேட்க டேய் விக்ரம் உன் வாய உடைக்க போரேன் என்று கையை மடக்க…. சேரி ட நோ வன்முறை வா போகலாம் என்று குறி இருவரும் லிப்ட்டில் ஏறி அவர்களது அறையை அடைந்தனர் .

விக்ரம் அஜயின் ஆருயிர் நண்பன் தன்னுடன் பள்ளியில் இருந்து கல்லூரி படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள் இவர்கள் நட்பு பிசினஸ் வட்டாரத்திலும் மிக பிரசித்தம்



காலை வரை ஸ்டாப் மெம்பெர்ஸ்வுடன் ஒரு புது ப்ராஜெக்ட் பற்றிய விவரத்தை கூறிவிட்டு கரண்ட் ஸ்டேட்டஸ் ஐ பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டான் இங்கு அபி அவள் வந்த விவரத்தை கூற reception உள்ள அப்பெண் அஜய்யின் பி எ விடம் தொடர்பு கொண்ட பின் கெஸ்ட் ரூம் இல் அவளை காத்திருக்க வைத்தால் ஒரு மணி நேரம் காத்திருந்த அபிக்கு பொறுமை சுத்தமாக பறந்து போயிற்று



இவன்லாம் பிசினஸ் மேன் ஆ கொஞ்சம் கூடpunctuality ஏ இல்ல என்று சரமாரியாக மனதினுள் பொரிந்து தள்ளினாள் இவனுக்காக பல வருடம் தான் காத்திருக்க போவதை அவள் அன்று அறிந்திருக்கவில்லை.

மீட்டிங் முடிந்து தன்னுடைய காபின்க்கு வந்தவுடன் பி எ விவரம் கூறினான் ஓகே அவங்கள என்னோட காபின்க்கு வர சொல்லுங்க என்று கூறிவிட்டு தன் வேளையில் ஆழ்ந்தான் மே ஐ கம் இன் சார் என்று உள்லே வர அனுமதி கேட்ட போது எஸ் என்று ஒற்றை வார்த்தை கூறி லப்டோபில் இருந்து தன் கண்ணை நிமிர்த்தினான்



ஓ மை கோட் வாட் எ வுமன் என்று கூற எழுந்த நாக்கை அடக்கி எழுந்து நின்று அழகான புன்னகையுடன் ஹாய் ஐ அம் அஜய் என்று கூறினான் கிளாட் டு மீட் யு மிஸ்டர் அஜய்

ஐ அம் அபிஜித்ரா என்று கூறி சினேகமாக புன்னகைத்தாள் அதில் மயங்கியவன் வெளியில் தெரியாமல் மைண்டைன் செய்து சாரி போர் தி டிலே மிஸ் or மிஸ்ஸஸ் என்ற வார்த்தையில் அழுத்தத்தை கூட்ட மிஸ் அபிஜித்ரா என்றால் நிமிர்வுடன் அப்பா இன்னும் கல்யாணம் அகல ட சாமி என்று இறைவனுக்கு மானசீகமாக தன் நன்றியை தெரிவித்தான் சாரி மிஸ் அபிஜித்ரா என்றான் இட்ஸ் ஓகே நோ ப்ரோப்லேம் மிஸ்டர் அஜய் என்றால் நீங்க எங்க காலேஜ்க்கு chief கெஸ்ட் ஆஹ் வரமுடியுமா சார் நாங்க முன்னாடியே உங்க பி எ கிட்ட கேட்டு appointment வாங்கிட்டோம் சார் ஐ hope தட் அவர் உங்க கிட்ட கேட்டு கான்போர்ம் பண்ணிடாத சொன்னாரு சோ தங்கியூ சார் ஐ ஜஸ்ட் வாண்ட் டு remind யு என்று




அவள் பேசும் போது அஜய் அவளை மட்டும் தான் பார்த்தான் அவள் பேசியது எதுவுமே அவன் காதில் விழவில்லை ஐ மஸ்ட் லீவ் நொவ் என்று கூறி அவள் எலும்போதுதான் அவன் சுயநினைவை அடைந்தான் முதல்வேலையாக தன் பி எ விடம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த தேதியையும் நேரத்தையும் குறித்து கேட்டான் பின் அவளை மீண்டும் பார்ப்பதற்காக காத்திருந்தான் எனோ அவன் மனம் வேளையில் இடுபடவில்லை மனம் முழுதும் அபியே நிறைந்திருந்தால் .



ஒரு நிமிடத்தில் ஒரு பெண்ணால் தன்னை முழுமையாக வீழ்த்த முடியும் என்று இதற்கு முன் கூறியிருந்தால் அவன் நிச்சயம் நம்பி இருக்கமாட்டான் அனல் இன்று அதில் அனுபவமும் பெற்று விட்டான் காதல் எந்த நொடி யார் மீது வரும் என்று யாரும் அறியார்.

உயிர் தொலையும்......
 

banumathi jayaraman

Well-Known Member
"ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை........"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top