ரொம்பவும் கனமான
மனசுக்கு வருத்தமான
அப்டேட், விஜி டியர்
மஞ்சுளாவின் தந்தையின்
இறப்பு, ரொம்பவே மனசுக்கு
கஷ்டமாக இருக்குப்பா
பெண்ணுக்கு பெண்ணே
எதிரியா இருக்கும் நிலைமை
எப்பொழுதுதான் மாறுமோ?
தன் மகனின் மகள், தன்னோட
இரத்தம்-ன்னு பேத்தி மதியை
கொண்டாடி மகிழும்
விதவையாக இருந்தாலும்
அழகானவள்-ன்னு, மருமகள்
மகியை கொண்டாடும்
அகிலாண்ட நாயகி, எவனோ
ஒருவனின் மகள்-ன்னு பால்குடி
கூட மறக்காத ஒன்றரை வயதுக்
குழந்தையை, தாயை விட்டுப்
பிரித்தது ரொம்பவே
கொடுமை, விஜி டியர்
மஞ்சுளாவைப் பிரிந்ததில்
மகேஸ்வரியின் மீது எந்தத்
தப்பும் இருந்திருக்க
வாய்ப்பில்லை
19 வயதில் இளம் விதவையான
சின்னப் பெண்ணான தங்கள்
மகளுக்கு மறுபடியும் ஒரு
வாழ்க்கை கிடைக்குதே-ங்கிற
சந்தோஷத்தில், மகியின்
பெற்றோர், அகிலாண்டத்தின்
நிபந்தனைக்கு, ஒத்துக்
கொண்டிருக்கலாம்
தயாநிதியும் பாவம்-தான்
அவருக்கு தாயை எதிர்க்க
முடியாத சூழல் போல
ஆனால், இவ்வளவு நாள்
இல்லாமல் இப்போ மட்டும்
ஏன், மஞ்சுவை தன்னோட
வீட்டுக்கு தயாநிதி அழைத்து
வந்தார்?
மகியின் பெற்றோர் எங்கே?
இல்லையா, விஜி டியர்?
இறந்து விட்டார்களாப்பா?