Saveetha Murugesan's Viswakarma 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தேவி சகுந்தலா தேவி??? செந்தில்வேலுக்கு ரெண்டாவதா கல்யாணம் பண்ணிவந்தவங்க.......
அவங்க கிட்ட ஏன் க்ஞானக்கு இவ்ளோ கோபம்??? இது வரை நல்ல தானே போயிருக்கு........ அவங்க தப்பு ஏதும் இல்லையே......
கல்யாணத்தோட தான் சொத்தையும் மாத்திக்கிட்டாங்களா???

அம்மா காஞ்சு நீ தான் சரியான ஆளு இந்த கூட்டத்துக்கு......
ஓரோருத்தரும் எப்படி பேசுறாங்க......
காசுக்கு முன்னாடி உறவெல்லாம் தூசு தான்......
விஸ்வா ரொம்பவே பாவம்...... எதுவுமே தெரியலை அவனுக்கு.....
*******
20.1....... என்று எகிறினாள் விஸ்வா........ அது காஞ்சனா தானே????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடுத்த பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு
விஸ்வாவின் அப்பா வேலுதான்னு தேவி
@ சகுந்தலா தேவியே சொல்லிட்டாங்க

ஒரு மனிதாபிமானத்தில் தாயை இழந்த செந்திலின் குழந்தைக்கு சகுந்தலா தாய்ப்பால் கொடுத்ததெல்லாம் சரிதான்
ஆனால் அதுக்காகவா வேலுவை லாரி ஏற்றிக் கொன்று சகுந்தலாதேவியை செந்திலுக்கு கல்யாணம் செய்தாங்க?

இல்லையே எங்கேயோ இடிக்குதே
சொத்துக்காகத்தான் தேவியை மகனுக்கு கல்யாணம் செய்ததாக சூனியக் கிழவன் சொல்லுறானே

என்ன காரணமாக இருந்தாலும் செந்திலுடன் மறு கல்யாணத்துக்கு தேவி ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது
காஞ்ச்சுவின் கோபம் நியாயமானதே

குகனுக்கு வேறு பால் ஒத்துக் கொள்ளவில்லைன்னு நீலிக்கண்ணீர் வடித்த மாதிரி இதிலும் தெய்வானை கிழவி ஏதாவது திரிசமன் செய்து விட்டாளோ?

விஸ்வாவுக்கு கல்யாணம் செய்யக் கூடாதுன்னு கொலைகாரங்க நினைத்த அடுத்த பூனைக்குட்டியும் வந்து விட்டது
இதுக்கு ஒரு அம்மாவா தேவி எதுவும் பேசாமல் எப்படி சும்மா இருந்தாள்?
காஞ்சனா கேட்டதில் தப்பேயில்லை

கனகு கிழவன் விஷத்தை கக்கிட்டான்
அது சரி
விஷ்வா பிறந்தப்பவே ஹாஸ்பிடல் வந்தும் அவனைப் பார்க்கக் கூட செய்யாத சுயநலம் பிடிச்ச கேப்மாறி
இவன் எப்படி விஸ்வாவுக்கு கல்யாணம் செய்ய நினைப்பான்?

சொத்து பூராவும் பேரன் விஸ்வகர்மாவின் பேரில் குமரன் தாத்தா எழுதி வைச்சுட்டாரா?
அதனாலதான் காஞ்சனாவின் அப்பா சங்கரனுக்கு சொத்து ஒண்ணும் கிடைக்கலையா?

தங்கச்சிக்குத்தானே சொத்து போகுதுன்னு சங்கரன் இதற்கு ஒத்துக் கொண்டாரா?
ஆனால் இந்த திருட்டு நாய்ங்க சங்கரனுக்கும் பெப்பே சொல்லிட்டாங்களா?

வேலுவை மோதிய லாரி பிரேக் பிடிக்காததில் கனகுவுக்கும் அவன் மகன்களுக்கும் பங்கு இருக்கா?

இத்தனை விஷயங்களும் விஸ்வாவுக்கு பலத்த அதிர்ச்சிதான்
இனி விஸ்வா என்ன ஆக்க்ஷன் எடுக்கப் போகிறான்?
சொத்துக்களை மீட்பானா?
இல்லை இவனுங்களுக்கே விட்டுக் கொடுத்துடுவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top