ஆனி முத்து வாங்கி
வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஆனி முத்து வாங்கி
வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
ராஜலஷ்மி: நூலை எடுக்கவும்
மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ .. அடியோ
all: ஆனி முத்து வாங்கி
வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே
சுசீலா: எண்ணி வைத்தேன்
ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
சுசீலா: எண்ணி வைத்தேன்
ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்தக் கள்ளத்தனத்தினில் வந்ததடி
சுசீலா: வாங்கிக் கொடுத்ததும்
தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி
ஒரு முத்து இரு முத்து மும் முத்து
நால் முத்து ... அம்மம்மா
ராஜலஷ்மி: பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: மாமன் மக்கள்
தேடிய செல்வங்கள் யாருக்கடி
சுசீலா: ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி
ஈஸ்வரி: கையில் உள்ளதைக்
கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
சுசீலா: வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு ... பிள்ளைக்கு
... ஊருக்கு .. நாட்டுக்கு...
all: பங்கிட்டு வாழ்வது
என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஓஓஓஓஓஓஓஓஓஓ ....ஓஓஓஓஓஓஓஓஓ ...
ஆஆஆஆஆஆஆஆஆஆ
Report this content
Recordings