Ramadan 2020 Prophet Dawood- Day 24

Advertisement

fathima.ar

Well-Known Member
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும்> சிறு வயது முதல் கல்வி>கேள்விகளில் அபாரத் திறமை கொண்டிருந்தார்கள். அரண்மனையிலேயே அவர்கள் ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆலோசனைக் கூறுபவர்களாக இருந்தார்கள். பல்வேறு சிக்கலான பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் சில:
இரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய் ஒன்று! தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒரு குழந்தையை அது கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக் காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும் சற்று நேரத்தில் அதன் உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப் பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள். அருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டதே!’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது? உன் குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா?’ என்று குமுறினாள். விவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக இருந்தவருக்கே அந்த குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண் வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டாள். வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு விளங்கிக் கொண்ட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் இக்குழந்தையை இரு கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்’ என்றார்களே பார்க்கலாம்! தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம் வைத்திருந்த பெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே சொன்னாள், ‘அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின் பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய்!’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)
நீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி நுட்பத்தினாலும் பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை வழங்கி விட்டார்கள்.

ஒருவரின் நிலத்தில் விளைந்த பயிரை இன்னொருவரின் ஆடு தின்று விட்டது. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து நீதி கேட்டனர். நிலத்தில் மேய்ந்தபயிருக்குப் பதிலாக அந்த ஆட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்i. உடனே அங்கிருந்த சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு தீர்ப்பு வழங்கினர்:’பயிரிழந்தவர் அந்தப் பயிர் பழைய நிலைக்கு வளரும்வரை அந்த ஆட்டை அவரே வைத்துக் கொண்டு> அந்த ஆட்டிலிருந்து பால் கநற்து, தாமே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் அது ஈன்றெடுக்கும் குட்டிகள் கூட நிலத்துக்காரருக்கே சொந்தமாகும். பயிர் பழைய நிலைக்கு வந்ததும் ஆட்டை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியதை அல்லாஹ் தனது திருமறையில்: இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடகள் இரவில் இறங்கி மேய்ந்த போதுஇ அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, வர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக்கொண்டிருந்தோம். 21:79அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும்இ அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
இத்தீர்ப்பு வழங்கும்போது சுலைமான் நபிக்கு வயது 11.
ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாளுக்கு நாள் பலஹீனமாகிக் கொண்டிருந்தார்கள். தமது அரசப் பதவியை 19ஆண்மக்களில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சங்கடப்பட்டார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்கு 11கேள்விகளை அறிவித்து> இதற்கு யார் சரியான பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு அரச பட்டம் சூட்டி விடுங்கள் என்று யோசனை கூறினான். அந்த 11கேள்விகள் வருமாறு:

உலகில் அதிக கசப்பானது எது?

மறு உலகில் மிகவும் இனிப்பானது எது?

தீமைகளில் மிகப்பெரிய தீமை எது?

வானம், பூமி ஆகியவற்றi விட மிகப் பெரியது எது?

உலகில் உயர்ந்த செல்வம் கொண்டு வாழ்பவன் யார்?

கருங்கல்லை விட மிகக் கடினமான பொருள் எது?

நெருப்பை விட மிகச் சூடானது எது?

உலகில் மக்கள் அதிக உள்ள இடம் அதிகமா? குறைவாக உள்ள இடம் அதிகமா?

இறப்பை விட மிகப் பயங்கரமானது எது?

ஆதமின் மக்களை வெற்றி கொண்டது எது?

உலகில் வாழ்ந்து வருபவர்களில் பெண்கள் அதிகமா?ஆண்கள் அதிகமா?

இக்கேள்விகளை தம் மக்கள் முன் கேட்டதும் அனைவரும் தயங்கி நின்றனர். நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் கீழ்வருமாறு பதில் கூறினார்கள்:

உலகில் அதிகம் கசப்பானது வறுமையாகும்

மறு உலகில் அதிக இனிப்பானது சுவர்க்க வாழ்வாகும்.

தீமைகளில் பெரிய தீமை பிறரின் மனதை நோக வைப்பதாகும்.

வானம், பூமியை விட மிகப் பெரியது நீதி தவறாமையும், உண்மை உரைப்பதுமாகும்.

உலகில் உயர்ந்த செல்வம் கொண்டு வாழ்பவன் பிறரிடம் அடக்கமாக நடந்து கொள்பவனே.

கருங்கல்லை விட மிகக் கடினமானது இறை மறுப்பாளனின் இதயம் ஆகும்.

நெருப்பை விட மிகச் சூடானது நிராசை கொள்வதாகும்.

உலகில் மக்கள் குறைவாக உள்ள இடம்தான் அதிகம். காரணம், மக்கள் மரித்து மரித்து தாங்கள் வாழ்ந்து வரும் இடத்தை காலி செய்து விடுகிறார்கள்.

இறப்பை விட மிகப் பயங்கரமானது பொய் கூறுவதாகும்.

ஆதமின் மக்களை வெற்றி கொண்டது அவர்களது வயிறுதான்

உலகில் வாழ்ந்து வருபவர்களில் எப்பொழுதும் பெண்கள்தான் அதிகம் இருப்பார்கள்.

இப்பதிலைக் கேட்டு தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்து அரசப் பட்டம் அவர்களுக்கே சூட்டினார்கள்.
ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸாம் அவர்கள் 170 ஆம் வயதில் இவ்வுலகை நீத்ததாக வரலாறு கூறுகிறது. பைத்துல் முகத்தஸில் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.


 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
உலகில் அதிக கசப்பானது எது? - புறம் பேசுதல்

மறு உலகில் மிகவும் இனிப்பானது எது? - இறையோடு இருத்தல்

தீமைகளில் மிகப்பெரிய தீமை எது? - துரோகம்

வானம், பூமி ஆகியவற்றi விட மிகப் பெரியது எது? - அன்பு

உலகில் உயர்ந்த செல்வம் கொண்டு வாழ்பவன் யார்? - போதும் என்ற மனம் உடையவன்.

கருங்கல்லை விட மிகக் கடினமான பொருள் எது? - முட்டாளின் அறிவு.

நெருப்பை விட மிகச் சூடானது எது? - நல்ல பெண்ணின் கோபம்

உலகில் மக்கள் அதிக உள்ள இடம் அதிகமா? குறைவாக உள்ள இடம் அதிகமா? - குறைவாக உள்ள இடம் அதிகம். ஆழி, மேரு, எரிமலை இவற்றில் எல்லாம் மனிதன் வாழ இயலாது. தவிரவும், பூமியில் கடலின் பரப்பு அதிகம்.

இறப்பை விட மிகப் பயங்கரமானது எது? - அன்புடையவரின் / துணையின் மரணம் [அல்லது] பிரிவு.

ஆதமின் மக்களை வெற்றி கொண்டது எது? - தெரில. :LOL::LOL:

உலகில் வாழ்ந்து வருபவர்களில் பெண்கள் அதிகமா?ஆண்கள் அதிகமா? - பெண்களே. இறைவன் ஒருவனே ஆண், அவன் படைத்த அனைத்துமே பெண் தன்மையுடையவையே. மக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதன் நோக்கம் முடிவில் அவனை [இறையை] அடைவதே.

இது எனக்கு தோன்றின பதில்கள் ஃபாத்திமா.

பதில் சொன்னது [சொல்ல நினைச்சது ] தப்பா இருந்தா சொல்லுங்கப்பா.

மாத்திக்கறேன் .

நன்றி ஃபாத்திமா.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
கேள்விகளுக்கான சுலைமான் பதில்கள் அருமை....உலகின் 3 முக்கிய பள்ளி வாசல்கள் தெரிந்து கொண்டேன்...
Super
வாழ்க வளமுடன்
 

Mage

Well-Known Member
Fathima sis ஆதமின் மக்களை வெற்றி கொண்டது _ஆசை
அப்படினு நினைக்கிறேன் எனக்கு புரிந்த வகையில் தவறா இருந்தா மன்னிக்கவும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top