மெத்தையில் வந்து படுத்து விட்டாலும், உறக்கம் வர வேண்டும் அல்லவா, அரவிந்தனின் மனம் அலைபாயும் போது, உறக்கம் எங்கிருந்து வரும்.
இத்தனை நாள் முயன்று மனதின் ஆழத்திற்குள் தள்ளியது எல்லாம், மனக் கண்ணில் தோன்றி அவனை வதைக்க ஆரம்பித்தது.
அர்ச்சனாவும் அவனும் கல்லூரியில் படிக்கும் போதே நல்ல நண்பர்கள். பொது மருத்துவம் முடித்து, வெவ்வேறு பாதையில் சென்றாலும், இருவருக்கும் இடையேயான நட்பு அப்படியே இருந்தது.
அதுவும் அர்ச்சனா திருமணம் முடித்துச் சென்னையில் இருக்க, அரவிந்தனும் சென்னையில் தான் மேற்படிப்புப் படித்தான். அதனால் அடிக்கடி இல்லையென்றாலும், எப்போதோ ஒருமுறை சந்தித்துக் கொள்வார்கள்.
அர்ச்சனா அரவிந்தனை வீட்டிற்குதான் அழைப்பாள். முகிலனும் அரவிந்தனிடம் நன்றாகப் பழகுவான். அவர்கள் வீட்டிற்குச் சென்றால், அவனைச் சாப்பிடாமல் விடவே மாட்டார்கள்.
அங்கே செல்லும் சமயங்களில் மாலினியையும் பார்த்து, பேசி, பழகி இருக்கிறான். அப்போது அவள் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருந்தாள்.
********************************************************************************************************************
திருமணம் ஆன புதிதில் இருப்பது போல, எப்போதும் இருக்க முடியாது இல்லையா... அதோடு அரவிந்தனின் வேலையும் அப்படி, அவனால் மாலினியோடு அதிக நேரம் செலவழிக்கவும் முடியவில்லை.
இதனால் அவனுக்கும் மாலினிக்கும் இடையே சண்டை வர ஆரம்பித்தது.
“எவ்வளவு நேரம் வீட்டில் தனியாக இருப்பது.” எனச் சண்டை பிடித்தாள்.
“ஏன் வீட்ல இருக்க, வேலைக்குப் போ.” என்றான்.
“வேலைக்குப் போற அளவுக்கு நான் ஒன்னும் வக்கில்லாத குடும்பத்தில இருந்து வரலை. ஏன் உங்க சம்பளம் பத்தாதா, என்னை வேலைக்குப் போகச் சொல்றீங்க?” என அவள் நக்கலாகக் கேட்க,
“எல்லோரும் பணத்துக்காகத்தான் வேலைக்குப் போறாங்கன்னு உனக்கு யார் சொன்னது? இவ்வளவு தூரம் படிச்சுப் படிப்பை ஏன் வீணாக்கிற? வேலைக்குப் போறது உன் திறமையைக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம். அதனால தான் சொன்னேன். உனக்கு விருப்பம் இருந்தா போ.. இல்லைனா போகாத.” என்றான் அரவிந்தன் கோபத்தை அடக்கிக் கொண்டு.
*********************************************************************************************************************
“ஐயோ ! பாவி படுபாவி, அந்த நேரத்தில் அவன் வீட்ல என்ன டி வேலை உனக்கு.” என மாலினியை அவள் அம்மா அடிக்க, மாலினி மறுத்து எதுவும் பேசவே இல்லை.
அரவிந்தன் மனதளவில் நொறுங்கியே போனான். அர்ச்சனாவிற்கு அவனைப் பார்க்க பார்க்க தாளவே இல்லை. ஐயோ ! இவனுக்கு நல்லது செய்வதாக நினைத்து, எப்படிப்பட்ட நிலையில் தான் அவனை நிறுத்தி விட்டோம் எனத் துடித்தே போனாள்.
இத்தனை நாள் முயன்று மனதின் ஆழத்திற்குள் தள்ளியது எல்லாம், மனக் கண்ணில் தோன்றி அவனை வதைக்க ஆரம்பித்தது.
அர்ச்சனாவும் அவனும் கல்லூரியில் படிக்கும் போதே நல்ல நண்பர்கள். பொது மருத்துவம் முடித்து, வெவ்வேறு பாதையில் சென்றாலும், இருவருக்கும் இடையேயான நட்பு அப்படியே இருந்தது.
அதுவும் அர்ச்சனா திருமணம் முடித்துச் சென்னையில் இருக்க, அரவிந்தனும் சென்னையில் தான் மேற்படிப்புப் படித்தான். அதனால் அடிக்கடி இல்லையென்றாலும், எப்போதோ ஒருமுறை சந்தித்துக் கொள்வார்கள்.
அர்ச்சனா அரவிந்தனை வீட்டிற்குதான் அழைப்பாள். முகிலனும் அரவிந்தனிடம் நன்றாகப் பழகுவான். அவர்கள் வீட்டிற்குச் சென்றால், அவனைச் சாப்பிடாமல் விடவே மாட்டார்கள்.
அங்கே செல்லும் சமயங்களில் மாலினியையும் பார்த்து, பேசி, பழகி இருக்கிறான். அப்போது அவள் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருந்தாள்.
********************************************************************************************************************
திருமணம் ஆன புதிதில் இருப்பது போல, எப்போதும் இருக்க முடியாது இல்லையா... அதோடு அரவிந்தனின் வேலையும் அப்படி, அவனால் மாலினியோடு அதிக நேரம் செலவழிக்கவும் முடியவில்லை.
இதனால் அவனுக்கும் மாலினிக்கும் இடையே சண்டை வர ஆரம்பித்தது.
“எவ்வளவு நேரம் வீட்டில் தனியாக இருப்பது.” எனச் சண்டை பிடித்தாள்.
“ஏன் வீட்ல இருக்க, வேலைக்குப் போ.” என்றான்.
“வேலைக்குப் போற அளவுக்கு நான் ஒன்னும் வக்கில்லாத குடும்பத்தில இருந்து வரலை. ஏன் உங்க சம்பளம் பத்தாதா, என்னை வேலைக்குப் போகச் சொல்றீங்க?” என அவள் நக்கலாகக் கேட்க,
“எல்லோரும் பணத்துக்காகத்தான் வேலைக்குப் போறாங்கன்னு உனக்கு யார் சொன்னது? இவ்வளவு தூரம் படிச்சுப் படிப்பை ஏன் வீணாக்கிற? வேலைக்குப் போறது உன் திறமையைக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம். அதனால தான் சொன்னேன். உனக்கு விருப்பம் இருந்தா போ.. இல்லைனா போகாத.” என்றான் அரவிந்தன் கோபத்தை அடக்கிக் கொண்டு.
*********************************************************************************************************************
“ஐயோ ! பாவி படுபாவி, அந்த நேரத்தில் அவன் வீட்ல என்ன டி வேலை உனக்கு.” என மாலினியை அவள் அம்மா அடிக்க, மாலினி மறுத்து எதுவும் பேசவே இல்லை.
அரவிந்தன் மனதளவில் நொறுங்கியே போனான். அர்ச்சனாவிற்கு அவனைப் பார்க்க பார்க்க தாளவே இல்லை. ஐயோ ! இவனுக்கு நல்லது செய்வதாக நினைத்து, எப்படிப்பட்ட நிலையில் தான் அவனை நிறுத்தி விட்டோம் எனத் துடித்தே போனாள்.