Mangala VS
Member
அவ நல்ல பெற்றோர்களா இருக்கணும்னு நினைக்கும் போது அரசியல் ராகாவிற்கு கொஞ்சமும் ஏற்புடையாகாது loukya.
அவ நல்ல பெற்றோர்களா இருக்கணும்னு நினைக்கும் போது அரசியல் ராகாவிற்கு கொஞ்சமும் ஏற்புடையாகாது loukya.
கடைசியில் ராகாவையும் அங்கே தள்ளிட்டீங்களா
ராகாக்காக தானே தீபன் அரசியல் வேண்டாம்னு சொன்னான்
இரண்டு வருடஙகள் எப்படி கடநததென்றே தெரியவில்லை தீபனுக்கும் ராகாவிற்கும்.
சண்டை( ஊடல்), கொஞ்சல், பிடிவாதம் இவற்றுகிடையே முரட்டுத்தனமான காமம் கலந்த காதல் அவர்களை வலுவாக இணைத்தது. வாழ்க்கை மிக ரம்மியமாகவும் அதே சமயத்தில் விறு விறுப்பாகவும் இருந்தாலும் மிதுன் உடல் நிலை தீபனை வாட்டிக்கொண்டுதானிருந்தது.
ஒரு நாள் அவன் தொடங்கவிரருக்கும் 10வது ரிசார்ட்டில் ஆர்கிடேட்டிடம் முக்கியமான பேச்சுவார்த்தையில் இருந்த போது மொபைலில் விடாமல் கால் வந்தபடி இருந்தது. ட்யூனை வைத்தே அது ராகா என்று புரிந்து கொண்டான். இருந்தாலும் எடுக்காமல் பேச்சை தொடர்ந்தான். அப்பொழுது அவர்கள் இருவருக்குமேயான ப்ரத்யோக நம்பரில் இருந்து மீண்டும் அழைத்தாள் . உடனியாக எடுத்து எதிரில் இருப்பவரிடம் சைகையாலே மன்னிப்பு கேட்டவாரே பேசிக்கொண்டை எழுந்து ஒதுங்கி ச் சென்றான். என்ன ராகா ஏதும் அவசராமா என்றான்? தீப்ஸ் இன்னிக்கு நைட் நம்ப ரிசார்ட் ல அந்த குடிலுக்கு போறோம். நீ எட்டு மணிக்குள்ள அங்க டின்னருக்கு வந்துடு என்றாள். ஏய் ராகா என்ன ஆச்சு இப்படி சடனா சொல்ற. நான் இப்ப #####ரிசார்ட்ல டிஸ்கஷன்ல இருக்கேன். இன்னும் ஒன் அவர் ஆகும் கிளம்ப. எவ்வளவு வேகமா வந்தாலும் 9 மணி ஆகிடும் என்றான். ராகாவோ சரி ok.9 மணி இல்ல 10 மணிக்கு கூட வா நான் வெயிட் பன்றேன். பட் கண்டிப்பா வர. நீ ட்ரைவ் பண்ண வேண்டாம். நாகா அங்க இன்னும் 10 மினிட்ஸ்ல இருப்பான் என்று சொல்லி விட்டு லைன் கட் பண்ணி விட்டாள்.
இது அவ்வப்பொழுது நடப்பதுதான். அவர்களுக்கு ஸ்டெரெஸ் ரிலீவர் மற்றும் முக்கியமான ரெஸ்டிங் ப்ளேஸ் அந்த குடில்தான்.
இங்கே ராகாவோ அவனுக்கு பேசி வைத்தவுடன் மடமடவென்று வேலைகளை முடித்து கிளம்ப ஆயத்தமானாள். வீட்டிற்கு போன் செய்து நைட் குடிலுக்கு போவதை சொல்லிவிட்டு அப்படியே போகும் வழியில் ஹாஸ்பிடலுக்கு சென்று மிதுனை பற்றின அன்றைய அப்டேட் வாங்கிக் கொண்டு செல்ல முடிவெடுத்தாள்.
இரவு 9.30 மணிக்கு குடிலுக்கு வந்து சேர்ந்தான் தீபக். தன்னகடமிருந்த சாவி வைத்து திறந்தே உள்ளே நுழையும் போதே ராகா அழகாக டின்னர் டேபிள் செட் பண்ணி இருப்பதை பார்த்தான். அவளை பின்னிலிருந்து அணைத்து ஹாய் ஸ்வீட்டி டென்மினிட்ஸ் குடு . ப்ரெஷ் ஆகி வரேன் என்று கூறியவாறே பாத்ரூமில் நுழைந்தான். ஜாலியாக அன்றைய நாளை பற்றி பேசிய வாறே சாப்பிட்டு முடித்தனர். கொஞ்ச நேரம் கழித்து ரிலாக்ஸாக பூல் சைட் வாகிங் கிளம்பினர்.
ராகா கொஞ்சம் சைலண்டாக இருப்பதாக தீபனுக்கு தோன்றியது. என்ன ஆச்சு ராகா? முகம் ஒரு மாதிரி வித்தியாசம இருக்கு. ஏதோ யோசனைல இருக்கியா ?
ஹூம் தீப்ஸ் நம்ம லைப் பத்தி என்ன நினைக்கற? are we a good couple? என்றாள்?
ஏய் என்ன லூசா? என்ன திடீர் டவுட்? நமக்கென்ன சூப்பர் கபுள் என்றான். உடனடியாக அவன் முகம் பார்த்தவாறே
can we be good parents too? என்றாள்
தீபனுக்கு எப்படி ரியேட் பண்ணவென்றே தெரியவில்லை. என்ன ராகா ? ஏதும் சொல்ல வரியா இல்ல சும்மா கேள்வி கேட்கறியா ?
அவனுக்கு பதில் சொல்லாமல் பமொபைல் போனை எடுத்து அவனிடம் காட்டினாள். அதை வாங்கி பார்த்த தீபன் சந்தோஷத்தில் அவளை அப்படியே தூக்கி வயிற்றில் அழுந்த முத்தமிட்டு இறக்கி இறுக்க அணைத்துக் கொண்டான்.
ராகாவுக்கு அவன் விருப்பம் முன்னமே தெரிந்தாலும் இந்த அளவு சந்தோஷபாபடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. என்ன தீப்ஸ்? நீ நல்ல அப்பாவாக இருப்ப என்னால முடியுமா ? எனக்கு தெரியல. can i do justice to the role of mother என்றாள்
என்ன ராகா உனக்கு ஏன் இந்த டவுட்? எத்தனை நாள் நான் உன்கிட்ட ஆறுதலுக்கு வந்து தலை சாய்ச்சிருக்கேனீ? அப்ப எல்லாம் நீ எனக்கு வைப் என்கிறத விட ஒரு அம்மாவாதான் பீல் பண்ணியிருக்கேன் ஏன் பயப்படறே? நம்ம நெக்ஸ்ட் ஸ்டேஜ் போக போறோம் நினைச்சாலே அவ்வளோ எக்சைடிங்கா இருக்கு. ஏன் வேண்டாம் ரொம்ப சீக்கிரம் அப்படினு பீல் பண்றியா?
சீசீ அது இல்ல . நான் பீல் பண்ண மாதிரி என் சைல்ட் லோன்லியா பீல் பண்ணாம வளரும்னுனா நம்ம ரெண்டு பேர் லைப் ஸ்டைலும் நிறைய மாத்திக்கணும் முடியுமானு யோசிக்கிறேன்?
ஹலோ அதெல்லாம் முடியும் ப்யூடி. அதுவிமில்லாம அம்மாவும் அப்பாவும் இருக்காங்க நமக்கு சப்போர்ட்டா. உன் பிஸினஸ மேனேஜ் பண்ண நல்ல ப்ரபுஷனல் அப்பாயிண்ட் பண்ணி ட்ரைன் பண்ணிடலாம். டer us enjoy this moment baby என்று மீண்டும் அவளை சேர்த்து அணைத்து கொஞ்ச ஆரம்பித்தான்.
அம்மாக்கு சொல்லலாமா என்று கேட்டான்? அவள் சிரித்தவாறே ஒகே என்றவுடன் அம்மாவிற்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
டாக்டர் மிதுனின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அவன் முன் மாதிரி ஆக்டிவ் லைப் லீட் செய்வது கஷ்டம் என்றும் திருமண உறவு, குழந்தை இதெல்லாம் கஷ்டம் என்பதை தெளிவு பட கூறி விட்டார்.
என்ன ஆனாலும் தன் கடைசி மூச்சு வரை அவனை தன் கூட வைத்துக் கொள்வேன் என்ற முடிவில் தீபன் உறுதியாக இருந்ததோடு ராகாவையும் அதற்கு சம்மதிக்க வைத்திருந்தான்.
அவர்களுக்கு போனஸாக இரைட்டை குழந்தை ஒரு ஆண் பெண் என்று பிறந்து அவர்கள் குடும்பத்தில் மட்டற்ற நிம்மதியையும் மகிழ்ச்சியும் கொண்டு வந்து சேர்த்தனர். அதிலும் பையன் பெரியவனாதலால் அவனை அண்ணா என்று கூப்பிட தன் பெண்ணுக்கு பழகியிருந்தான் தீபன். அவளோ வால்தனமாக டேய் அண்ணா டேய் அண்ணா என்று ஏலம் விடுவாள். இந்த சத்தம் ஒலிக்க ஒலிக்க மிதுனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வர ஆரம்பித்தது.
அடுத்த எலெக்க்ஷன் டைம் நெருங்க நெருங்க சக்கரவர்த்தி ஒரு மாதிரி மன உளைச்சல் கொள்ள ஆரம்பித்தார். அதை உணர்ந்த தீபனும் மிதுனும் அப்பா விடுங்க. யார் வேண்டுமானாலும் எம்பி ஆகட்டும் . நம் குடும்பத்துக்கு இனி அரசியலே வேண்டாம் என்றனர்.
டேய் அரசியல் சாக்கடையா இருக்கச்சேயே மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்தவன் நான். இப்ப ஓரளவுக்கு மக்களிடம் தெளிவும் நல்ல ஆராய்ந்து வாக்களிக்க கூடிய தன்மையும் வந்திருக்கிற நேரத்தில ஒதுங்கி போறது வருத்தமா இருக்குடா என்றார்.
அதற்கு மிதுன் அப்பா நீங்களும் தீபனும் தப்பா நினைக்கலேனா நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்றான் ?
அதற்கு தீபன் என்னடா புதுசா பர்மிஷன் கேடகற சொல்லு என்றான்
பேசாம தீபன் வைப நிக்க சொல்லுஙகளேன்? அவங்களுக்கு நல்ல மேனேஜ்மெண்ட் எக்ஸபீரியன்ஸ் இருக்கு. தீபன் இருக்கான் எப்பவும் போல பேக்கரவுண்ட் சப்போர்ட்டுக்கு. ஒரு பெண் எம்பி என்கிற எக்ஸ்டரா அட்வாண்டேஜும் இருக்கும் என்றான்.
தீபனுக்கு இது ஓகே வாக இருந்தாலும அதுவும் மிதுனிடமிருநது வந்தது மிகவும் திருப்தியாக இருந்தாலும் , அம்மாவும் ராகாவும் எப்படி இதற்கு சம்மதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. அதனால் பார்க்கலாம்பா. அம்மாக்கும் ராகாக்கும் ஓகேனா எனக்கு ஒன்னும் objection இல்ல என்றான்.
சக்கரவர்த்திக்கோ அப்படியே மிதுனை தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டுமளவு மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அவன் ராகாவை மரியாதையுடன் தீபன் வைப் என்று கூறிய விதம் அவன் தற்போதய நிலைமையையும் மாற்றத்தையும் நன்கு காட்டியது.
அப்புறமென்ன அவர் தன் வேலையை மட மடவென்று ஆரம்பித்து உஷா மூலமாகவே ராகாவை சம்மதிக்க வைத்து தம் கட்சி மேலிடத்திற்கு அவள் பேரை பரிந்துரை செய்தார்.
ராகா தீபனின் அடுத்த பரிமாணம் நான்இனி நீ மற்றும் நம் மக்கள் நம் ஊர் நாடு என்று விரிவடைந்து மிளிர்க்க ஆரம்பித்தது. நம் ஆசிகளை அளித்து விடைபெறுவோம்.