அருமையான பதிவு ரம்யா.வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிட்டு வந்து,அதுவும் காதலிச்சு கட்டிட்டு வந்து கஷ்டப்படுத்தறதா,இப்போதாவது ஜெய்க்கு புரிஞ்சதே.
ஜெய், வெண்ணிலா வீட்டினர் முன் வசதியாக வாழ வேண்டும் என்று சந்தோஷத்தை அடகு வைப்பதாக புகழ் கூறுவது சரியே.
கற்பகம் நகையை பற்றி கேட்கவும்,வெண்ணிலா உண்டு இல்லைன்னு பண்ணிட்டா,வெண்ணிலா பேச்சை கேட்டு கற்பகம் தான் வாயை மூடுச்சு.
பொண்டாட்டி பசியா இருப்பான்னு ஜெய் பிரியாணி கொண்டு வர,பிள்ளைதாய்ச்சி பொண்ணு பசியா இருக்கும்னு அமுதாவும்,மருமகளுக்கு சந்திரனும் கொண்டு வந்துட்டாங்க,இன்னும் ரெண்டு பங்கு வந்துட்டு இருக்குது.
ஆளாளுக்கு பேத்திய தாங்குறதுல கற்பகத்துக்கு சந்தோஷம்.தாத்தா நினைவும் வந்துடுச்சு,அவர் காரக் குழம்பு வச்சா அவ்வளவு ருசியா இருக்கும்னு மலரும் நினைவுகள்.
கரணுக்கு திருமணம் ஆகிடுச்சுன்னு கற்பகத்துக்கு தெரிய வரும் போது என்னவாகும்.