♥எனக்கு பிடித்த அருமையான கதை*... படியுங்கள் ♥
♥கப்பல் ஒன்று கடலில் வழிதவறி
செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.
♥“இறைவா… இங்கிருந்து
எப்படியாவது என்னை தப்பிக்க
வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த
தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறான்.
♥ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு
உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.
♥தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு
ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான்.
♥அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த
தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.. இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன.
♥இவன் பிரார்த்தனையை மட்டும்
விடவில்லை. கடவுள் ஏதாவது
ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக் கொண்டான்.
♥ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட
வைத்தது. பட்ட காலிலே படும் என்பது
போல… எது நடக்ககூடாதோ அது நடந்து விட்டது.
♥இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே
குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும்
தீக்கிரையாகியிருந்தன.
♥அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த
மிச்ச சொச்ச பொருட்களும்
போய்விட்டது..“இறைவா… என்னை
காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ.என்னவென்றால்
இருப்பவற்றையும் பறித்துக். கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.
♥மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.
“அப்பாடா… நல்ல வேளை… ஒரு
வழியாக இங்கிருந்து தப்பித்தோம்.
யாரோ நம்மை.காப்பாற்ற வருகிறார்கள்.”
என்று உற்சாகத்தில் துள்ளி
குதித்தான்.
♥கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே மாட்டிக்கொண்டிருப்பது
எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை
எழும்பியதை பார்த்தோம்….
♥யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று
நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.
♥அப்போது இறைவன் குடிசையை
எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி
சொன்னான்.
♥அந்த வழியில் கப்பல்கள் வருவதே
மிக மிக அரிதான நிலையில்,
குடிசை மட்டும் தீப்பிடித்து
எரியவில்லை என்றால் தன்
நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.
♥அவசரப்பட்டு இறைவனை
நிந்தித்ததை நினைத்து
வெட்கினான்.
♥வாழ்க்கையில் பல
சந்தர்ப்பங்களில் நாம்
இப்படித்தான் இறைவனை
அவசரப்பட்டு தவறாக
எடைபோட்டுவிடுகிறோம்.
♥நம்மை காக்கவே அவன்
ஒவ்வொரு கணமும்
காத்திருக்கிறான். அவன் தரும்
சோதனைகள் அனைத்தும் நம்மை
வேறொரு மிகப் பெரிய
ஆபத்திலிருந்து காக்கவே
என்று நாம்
புரிந்துகொண்டால், எதைப்
பற்றியும்
அலட்டிகொள்ளவேண்டியதில்லை.
♥சோதனை
என்றால்… இறைவனின்
அருட்பார்வை உங்கள் மீது
விழுந்துவிட்டது விரைவில்
நல்லது நடக்கும் என்று
நம்புங்கள்...