E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM MM MM.......
1534515m.gif

பார்ட் i
அவன் மேல் இருந்து இறங்காத வர்ஷினியின் வாழ்க்கையை ஏக்கம் இயல்பான செய்கையை அருமை
அடலாஸ்ட் கடைசியா ஈஷ் என்ன வசனம் பேசனமோ சரியாக பேசிவிடடான் வர்ஷ்யை பற்றி அவனையும் உணர்ந்து சொல்லிவிடடானா
சூப்பர் அவளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்னை அவள் வாயிலாக ......
இப்போதைய கதையின் பிரச்னையும் வந்தாச்சு அவனின் வாக்குமூலம் அவளின் மூர்க்கம் எக்ஸாக்டா அவளின் ஏமாற்றத்தின் உணர்வு awesome .....
பார்ட் 2
பாசத்துக்கு ஏங்கும் உணர்வுஅலைகள் அதில் காதலும் கலந்து இருப்பதை உணர்வாளா
ஈஷ்யின் புரிந்து கொளுத்தலின் தன்மை அருமை... அவள் மன தேவையின் உணர்வை புரிந்து கொண்டான் அடலாஸ்ட்
என்ன பண்ணுவது உப்பை திண்றவன் தண்ணி குடித்துதானே ஆகவேண்டும் இருந்தும் அவன் காயங்கள் அவள் மன காயங்களுக்கு வடிகாலாய்
//அவனின் வேண்டுதல் இது இதுதான் ஒரு ஒரு பெண்ணின் விருப்பமும் உலகில் சூப்பர்//
இது தான் வர்ஷியாக வருவாள் என்று எதிர்பார்த்திருந்தேன் அவளின் தனிமை அவளுள் மூர்க்கத்தை ஏற்படுத்தி இருந்தது இன்று அவளால் வந்த காயத்தின் வலி அவனைவிட அவளுக்கே அதிகமா தெரிகிறது வருடலில் தவறு செய்த குழந்தையை அடித்துவிட தாயின் பிற்பாடு செயல் தாய்மை எப்படி தன்னை ஒளித்து கொள்ள முடியும் .
ஐயோ உங்க ஸ்டைல் இன்னும் தலை துக்க காணாமே என்று பார்த்திருந்தால் வந்துவிட்ட்து கொன்னுட்டு என்று சொல்லி அதை தொடர்ந்து happy happy ....
வாவ் சூப்பர் டைலாக் டெலிவரி ஈஷ்க்கு
உண்மை அவனின் செயலுக்கு அவனுக்கே விளக்கம் இல்லாத நிலை அன்றிலிருந்து
பார்ட் 3
இவ்வளவுக்கும் நடுவே அவளின் வலிகளினால் அடைந்த தாக்கத்தின் விளைவால் தெளிவாக கொளுத்தி போடறா ஒரு வார்த்தையாய் அவனை வீழ்த்த
உண்மையாய் காதலிக்கும் மனைவியை யாரிடமாவது விட்டு கொடுக்க முடியுமா.....
ஆஹா கிளாஷ் ஆயிடுச்சி பூனைக்குட்டி வெளியே வரும் நேரம் அமைந்து விட்ட்து
பாவம் ஐஸ்..... விதி வலியது அதை தாங்கித்தான் ஆகவேண்டும் ஒரு கட்டத்தில் வாழ்வில் எல்லோரும் ..
இந்த கதை ஆரம்பித்து இருந்து பல கேள்விகளுடன் முடிந்தது ஒவ்வொரு தடவையும் ஆனால் இன்று கேள்விகள் தோன்றாமல் நிறைவை உணர்கிறது ஹாபிய எண்டிங்க நோக்கி நகர்ந்து விட்டதா
Jns4XPL1IuIjkAsAdIpHHjgZM0wJPkhoSr6xb7-LryE8ZhfHmgeymGeeTeOJgaPP9Qk=w120

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே

எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
நாம் இருவரும் நம் அன்பின்
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா
 

malar02

Well-Known Member
மல்லி,இனிய காலை வணக்கம்.....

அவளின்...
எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம்
அதனால் விளைந்த சினம்
சினத்தினால் ஏற்பட்ட தனிமை
தனிமை தந்த வெறுமை
வெறுமையினால் வந்த இயலாமை
வெளிப்படுத்த முடியா உணர்வுகள்
அதனால் ஏற்படும் மனப் போராட்டங்கள்...
அவற்றின் காரணகர்த்தாவான அவனின்
மீது ஏற்படும் கட்டுக்கடாங்க கோபத்தை
வன்முறை தாக்குதலாக வெளிப்படுத்துகிறாள்....

வன்முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
வர்ஷினியின் இந்த பரிமாணம் எதிர் பாராத ஒன்று...


உணர்வுகளை கையாளுவதில்,கொண்டுவருவதில்
You are so different.....Malli..

Emotionally well balanced ,an unique episode....
உங்களால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று....
Wishes with thanks...


happpppy Sunday ....:)








622053541.gif
 

malar02

Well-Known Member
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION


உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..


நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..


ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
701573.png
 

malar02

Well-Known Member
ஈஸ்வர் வர்ஷினியே நினைத்து எழுதிய கவிதை

என் மனதை
ஆட்டிவைக்க!!
எங்கிருந்து
வந்தாயடி !!
எண்ணம் அதை திருடிக்கொள்ள !!
என்ன மாயம் செய்தாயடி
!!
உனை நான் நினைக்கையிலே !!
உள்ளந்தனில்
ஊற்றெடுக்கும் ;;
உன்மத்த நீரும் அதை !!
உடனே நான் உண்கின்றேன் !!
அன்பால் நீ ஆணை இட்டாய் !!
அரவணைப்பைத்தருகின்றாய் !!
ஆறுதலும் ஆகின்றாய் !!
ஆன்மா உடன்
கலக்கின்றாய் !!
எண்ணந்தனில்
நிற்கின்றாய் !!
எழுத்தாகி
வருகின்றாய் !!
என்னுள் உயிராய் ஓடுகின்றாய் !!
ஏற்றத்தைத்தருகின்றாய் !!
எண்ண எண்ண இனிக்குதடி !!
எடுக்க
எடுக்க நிறையுதடி !!
உந்தன் நினைப்பு உள்ளவரை :
உயிரே !!!
என்னை விலகாது !!





bowing-down-emoticon-25776572.jpg
 

Hema27

Well-Known Member
ஐஸ்வர்யாயும் கொண்டு வந்து இப்படி பாதியிலேயே Suspense ல விட்டுட்டீங்களே, மல்லிகா..
எப்படி precap வர வரை தூங்குறது?
அதுனால தான் மலர் ud வருவதற்கு முன்பே நல்லா தூங்கி எழுந்துக்கனும்.
 

malar02

Well-Known Member
Hi mam

என்ன சொல்ல,ஒருவர்மீது ஒருவர் அளவுகடந்த அன்பு ஈர்ப்பு & மற்றவர் தனக்குமட்டுமே உரியவர் என்ற நினைப்பு இதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்,அதுதான் ஈஸ்வர் & வர்ஷினி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றது,சிலநேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பு கூட பிரச்சனையில்தான் போய் முடிகின்றது.

நன்றி
Aravin22
100% CORRECT
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top