E4 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest

இதை தான் சொல்றேன்....:D
எல்லாம் இருக்கு அவளுக்கு
ஆனால்
வெளி வரும் போது தெரியும்
இருப்பதை உணராமல் அவள்
இருக்கிறாள்
வலிகளும் விலகலும்
அதை உணர விடவில்லை
தெளிவான நீரோடையாக காட்டி கொள்ள விரும்புகிறாள்
 

Ansadoss

Well-Known Member
wow super
நன்றி சிந்து. பாராட்டெல்லாம் அண்ணனை தான் சேர வேண்டும். காவல் துறையில் பணிபுரியும் அவர் கிடைக்கும் சொற்ப நேரத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார். நம்மாழ்வாரின் சிஷ்யர்.
 

Manimegalai

Well-Known Member
பிரிஞ்சு மாதவி வீட்டுக்கு போனதும் இருக்கே....

ஒரே ..வரி வேற வேற உணர்வுகளை தரலாம்.....வாசி வாசி..வாசி....சிவா சிவான்னு கூட வரும்....
அவனை வேண்டாம் என எண்ணுகிறாள் என்றாள்....இந்த கதையே இல்லையே...
இப்படிஇருக்கும் அவளுள்....மாற்றம் வருவதே ...கதை
எஸ்....எவ்வளவோ கொடுமை தாங்கிட்டு வாழ்கிறவர்களும் உண்டு....நம் மண்ணில்.
 

ThangaMalar

Well-Known Member
அவனை வேண்டாம் என எண்ணுகிறாள் என்றாள்....இந்த கதையே இல்லையே...
இப்படிஇருக்கும் அவளுள்....மாற்றம் வருவதே ...கதை
கண்டிப்பா மாற்றம் வரும்..
இறுதியில் ஒன்று தான் சேருவார்கள்...
அந்த கதையை எப்படி கொண்டு போவது என்று மல்லிக்கு தெரியும்...

நான் சொல்வது இப்போதைய நிலை...
.
 
Last edited:
S

semao

Guest
கண்டிப்பா மாற்றம் வரும்..
இறுதியில் ஒன்று தான் சேருவார்கள்...
அந்த கதையை எப்படி கொண்டு போவதும் என்று மல்லிக்கு தெரியும்....
அவன் சேறுல புரளும் போது தான் மாற்றம் வரும்
 
Last edited by a moderator:

Sundaramuma

Well-Known Member
நிறைய கேள்விகள் வருது......
1. சுந்தரியின் தோற்றம் ...... வடிவு பாட்டி லட்சணமா இருப்பதாக சொல்லறாங்க..... கலர் மட்டும் தான் கம்மி .......கண்ணன் பார்வையில் அவ குண்டு.... முகத்துல பரு...... எண்ணெய் வழியும் தலை ...... நாகரீக உடை இல்லை..... கருப்பு...... இவங்க ரெண்டு பேருல யாரு சொல்லறது நிஜம்...... சுந்தரி கருப்பு வகைல சேர்த்தி என்பது தவிர வேற இங்கே பெரிதாக குறை என்று இல்லை என்று என்னோட எண்ணம் ...... எதோ ஒரு படத்துல சுஹாசினி பட்டிக்காட்டு தோற்ற துலா வருவாங்க..... என்ன புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு......பாட்டு வரும்( ஒரு லைன் தான் தெரியும்) ...... பெஅஉட்டி பார்லர் கூட்டிட்டு போனா தீர்ந்து போற பிரச்சனை......

2. கணவன் மனைவி உறவு ......கண்ணன் எதோ ஒரு காரணதோடு தான் உறவு கொண்டதாக வருது........ அந்த நேரத்தில் அவள் மேல் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு ....... அல்லது பெண்ணை முழுமையா தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வம் ......எதுவாக இருந்தாலும் அவளை அந்த நிமிடம் பிடித்ததனால் தானே நிகழ்ந்தது......குழந்தை உருவானதால் கேட்ட பேச்சுகள் தான் சுந்தரி வேண்டாம் என்ற எதிர்மறை எண்ணத்தை கொடுத்ததா வருது ...... அவன் மனஉறுதி இல்லாதவன்.... இப்படி பட்ட அழகில்லாத பெண்ணிடம் மயங்கி விட்டான் என்ற மாதிரி பேச்சுகளா அவை...... ஏன் இப்படி ஒரு சந்தேகம் எனக்கு என்றால்..... அவன் கவுன்சிலின் போது அவள் தன்னோடு வேறு ஊருக்கு வந்து விட்டால் விவாகரத்து வேண்டாம் என்று சொல்கிறான்..... சோ, மற்றவர்கள் பேசிய கேலி தான் அவன் முடிவுக்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது எனக்கு......


3.சுந்தரி...... கண்ணன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கோ ..... பார்த்த உடன் ஏன் அழுகை வரணும்.....அவனை வேண்டாம்னு சொன்னது கூட அவன் அவளை வேண்டாம் என்று சொன்னதால் தானோ..... அவளுக்கு தான் அழகில்லை என்ற தாழுணர்ச்சி எல்லாம் இல்லை......அவனை ரசிக்காமல் அவன் ஸ்டைல் மட்டும் பிடித்திருக்க முடியுமா ...... அனால் மகனுக்காக மட்டும் என்றால் அவள் கண்ணனை மறுத்து விடுவாள் உறுதியாக......

4.கண்ணன் ..... கிராமத்தில் பிறந்தவன்...... அப்பா ஒரு விவசாயி ...... அனால் வளர்ப்பு மட்டும் மேல் தட்டு முறைஎலா .......எதையும் கணிக்க முடியவில்லை..... தான் ஆடாவிட்டாலும் தான் சதை ஆடும் என்பது தான் மகன் விஷயத்தில் மட்டும் தானா ....... அப்படி இல்லை என்று எதோ ஒரு பட்சி சொல்லுது..... கண்ணனுக்கும் நிலத்தில் உழைத்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவனால் சுந்தரியை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா......

கொஞ்சம் பெருசா போய்டுச்சு .....ஆனா நினைத்ததை எல்லாம் கொண்டுவர முடியலை ..... சாரி ......
Interesting episode
Thankyou very much. Mallika :D:D:D
 

Sundaramuma

Well-Known Member
my dedication to sundari continues
this shows her mind
ALREADY NETRU ELUTHIYATHU
BUT EPI PADICHA APPURAM SUIT AGUMA THERIYALA.... ( ORU CHINNA CHANGE PANNINEN FRIENDS )

எதற்கு திருமணம்
அதனால்

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
தவிக்குது ஒரு மனம்
மண்ணை விட
தவிக்குது ஒரு மனம்


என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்

வந்தாய் மணவாளனாய்
வாழ்ந்தேன் சில நாட்கள்
தந்தாய் கவிதையை
சென்றாய் விலகியே
வேண்டாம் என்றாய்
இன்று
நீ வந்தாலும்
வேண்டாம் என்கிறேன்
நான்
மண் மணம் விட்டு வராது இந்த பெண் மனம்

விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
எனக்கு
உன் மேல்
விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
சென்று விடு என் கணவா

மறு மனம் அது
தடுக்குது மறு மனம்
உன்னுடன் வருவதை
தடுக்குது மறு மனம்


பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து
என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது

மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய



போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா
என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
அற்புதம் .... மீரா:):):)
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top