சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!
இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
உன் பார்வை நானறிவேன் என
காதல் கற்றுத் தர வந்தவனே!
வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!
இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!
என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!
மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்! தீண்டும் தென்றலாய்!
இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!
நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!
சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!
ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!
இப்படிக்கு உன் இதயம்!
சசி.