E10 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
அருமையான பதிவு...சுந்தரி கண்ணன் இருவருடைய எண்ணங்களை சமவிகிதத்தில் அருமையா சொன்னீங்க...கண்ணன் சுந்தரியை உயர்வா நினைக்கிறார்...அவங்களை பிரிந்து இருக்கும் போது....நேரில் பார்க்கும் போது மட்டும் ரொம்ப உரிமை எடுத்து பேசுகிறார்...
கண்ணனுக்கு சுந்தரியிடம் பயம் இல்லை...
ஆனால் சுந்தரி ஏன் பயப்படுறாங்க....(முன் அனுபவம்) இருக்கா...
பாட்டியும் சுந்தரியும் இத்தனை வருடம் ஊரில் இருந்தும் ஏன் மாடு கன்று ஈன கஷ்டப்படும்போது எப்படி அனுகறது தெரியாம தாங்களும் கஷ்டப்படுறாங்க...
அவங்க இருவரையும் அன்போட பார்த்துக்க கட்டாயம் கண்ணன் குடும்பம் தேவை....கண்ணன் அப்பா பேரன் மேல் அதிக அன்புடன் இருக்கார்...மிகவும் மகிழ்ச்சி..
அபி இவ்ளோ அப்பா செல்லம் ஆகிட்டார்..
சுந்தரி கண்ணன் விட்டுட்டு போய்டுவார் சொல்லி மகனிடம் ஆதங்கப்படுவது அழகாக
இருந்தது...அதிலேயே தெரிகிறது சுந்தரியுடைய அன்பு...

உணர்வுகளின் சங்கமம்...
நன்றி.

Super... Mani :):):)
 

Sundaramuma

Well-Known Member
அழகான பதிவு
இப்போதான் சுந்தரியின் பாதிப்பு பத்தி யோசிக்கிறான்...
அவளுக்காக
vetnery doctor அழைத்து வருகிறான்...(he definitely scores here… and it also shows the need for a responsible person around her)
உன்னை உள்ளே விட மாட்டேன் என்றதும் துரைக்கு ஒரு அதீத கோபம்....
அதன் விளைவில் இங்கு வருவேன் என்கிறான்....
எப்பவும் தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பானா??? அவளது உதாசீனம் அவனுக்கு கோபம் வரவைக்கிறது....அவன் அவளை உதாசீனம் செய்ததை மறந்து விட்டானா???
எப்படி வேக வேகமாக divorce போனானோ... அதே போல் ஒரு நொடியில் இங்கு வருவேன் என்கிறான்...
இந்த முடிவு நிலையானதா???
எதற்கு divorce பண்ணினான் என்று சுந்தரிக்கு தெரியாது... எதற்காக இங்கு வருவேன் என்கிறான் என்றும் அவளுக்கு தெரியாது...
எல்லாமே அவன் முடிவு மட்டும் தானா???
அவள் கருத்திற்கு அவனிடம் இடம் இல்லையா????
வீட்டில் இடம் பிடித்தாலும், மனதில் இடம் பிடிப்பது எப்போது???
அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பான்.... மூன்று தங்கைகள் கூட இருந்தும் சிறிதும் பெண் மனம் பற்றி அறியவில்லை... பெண் மனம் என்று இல்லை... பிறர் மனம் அறியவில்லை... (
including amma appa)
divorce செய்யும்போதும் அப்பா அம்மா கருத்தை அறியவில்லை.... இப்பொழுதும்...அவன் முடிவில் பிறர் கருத்துக்கு இடம் இல்லை.... அது முன்னாள் மனைவி எனினும் சரி... அப்பா அம்மா என்றாலும் சரி

valid questions ..... Awesome .... Sindu :):):)
 

Joher

Well-Known Member
i have read a novel long back. Forgot the heroine name. But heroines cousin is arun. Arun's friend is Jeeva. Arun and Jeeva are running their own company. Heroine and Arun are from a big joint family. Heroine married Jeeva for her family's sake. But Jeeva loves her very much.........

Please tell me the name of this novel
 

ThangaMalar

Well-Known Member
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..

ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
காயங்கள் ஆறினாலும் வடுக்கள் உண்டு...
பாத்திமா, மல்லி படிக்கும் முன்பே நீ எபி படித்து விடுகிறாயா...
மல்லி போட்டதும் உன் சிந்தனை சிறக்கடிக்கிறதே....
அழகு...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
i have read a novel long back. Forgot the heroine name. But heroines cousin is arun. Arun's friend is Jeeva. Arun and Jeeva are running their own company. Heroine and Arun are from a big joint family. Heroine married Jeeva for her family's sake. But Jeeva loves her very much.........

Please tell me the name of this novel
மனோ ரம்யா நாவல் ..நித்தமும் உன் நினைவில் ..
 

ThangaMalar

Well-Known Member
வலிகள்
வேதனைகள்
கொட்டிவிட்டாள் சுந்தரி
மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள்
கண்ணா எதுவும் சுலபமல்ல
வாழ்க்கையில் கடக்க வேண்டியவை
இருக்கிறது

ஆமா மீரா... அவள் வேதனை நம் மனதை அழுத்துகிறதே....

சுலபமாக கிடைத்ததால் சுந்தரி அருமை தெரியவில்லை...
இனி கஷ்டப்படுவான்... தவறவிட மாட்டான்....

அழகாய் சொன்னாய், மீரா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top