மண்ணில் தோன்றிய வைரம் 7 & 8

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#7
அஸ்வின் வேலையில் சேர்ந்த நாள் முதல் தன் நேரத்தை சரியாக பங்கிட்டு கொண்டான். சிறுவயதிலிருந்தே நேர ஒழுங்கை கடைபிடிப்பவனாகையால் அஸ்வினிற்கு இப்போது அது கஷ்டமாக இருக்கவில்லை. காலை முதல் தன் வேலையில் அரப்பணிப்புடன் இருப்பவன் இரவினை உடன்பிறவா உடன்பிறப்புகளுடனான சேட்டை,படிப்புடனும் , அன்னையாய் அரவணைக்கும் தன் குடும்பத்துடனும் செலவிட்டு தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் வரமாக எண்ணி மகிழ்வுடன் களித்தான்.
வீட்டில் மட்டுமல்லாது பணியிடத்திலும் அவனை அனைவரும் கொண்டாடினர்.

அவன் வேலையில் புலி என்றாலும் பிறரையும் அதை பின்பற்ற மறைமுகமாக வலியுறுத்தி தட்டிக்கொடுத்த விதம், நட்பு பாராட்ட வேண்டிய இடத்தில் உச்ச கட்ட சேட்டைகளுடனும் வேளை என்று வரும்போது எறும்பின் கடமையுணர்ச்சியுடன் இருந்தது மட்டுமல்லாது பெண்களுடன் அவன் கண்ணியமாய் பழகும் விதம் கண்டு கடைநிலை ஊழியர்கள் முதல் மேலதிகாரிகள் வரை அனைவரின் நன்மதிப்பினையும் பெற்றுக்கொண்டான். அவனது சிரித்த முகமும் அவனது நகைச்சுவை கலந்த பேச்சும் அவனை வெறுப்பவர்களை கூட அவன் முன் மண்டியிட வைத்து விடும். குணத்தில் மட்டுமல்லாது நடை உடை பாவனையிலும் பாலிவுட் ஹீரோ போல் அட்டகாசமாக இருந்தவனுக்கு ஆபிஸில் பெண் விசிறிகள் தாராளம். இருந்தும் அளவுக்கதிகமாக தன்னை நெருங்க முற்படுபவர்களை தன் அக்கா தங்கை என்ற வார்த்தேயிலேயே தள்ளி நிறுத்தினான். தனது அணுகு முறை சரியானதல்ல என்று அறிந்தும் கூட அவன் அதை திருத்திக்கொள்ள முயலாமைக்கு காரணம் அவனுக்கு வந்த புதிதில் கிடைத்த சில மொக்கை வாங்கிய அனுபவங்கள்....
வேலைக்கு சேர்ந்த இரு மாதத்திலேயே மேனஜர் ஓய்வு பெற அஸ்வின் மேனேஜராக பதவி உயர்த்த பட்டான். அவனது விவேகம் மற்றும் ஆளுமையினை அறிந்த சாரு பதவி உயர்வில் எந்தவிதத்திலும் ஆட்சேபிக்க வில்லை. இப்படியே படிப்படியாக தன்னிலையினை உயர்த்திய அஸ்வின் தன் குடும்பத்தாருடன் நேரம் செலவளிக்கவும் தவறவில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன் உடன்பிறப்புக்களுடன் தன் நண்பனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஊர் சுற்றினான். தன் சித்தி மற்றும் பாட்டி கோயிலுக்கு அழைக்கும் போது மறுக்காது அவர்களுடன் சென்றான். தினமும் தாத்தா மற்றும் சித்தப்பாவுடன் ஜாகிங் என்று அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியினையும் வரமாய் எண்ணி மகிழ்ந்து வாழ்ந்தான்.ஆனால் அவனது மகிழ்ச்சியினால் பொறாமையுற்ற விதி அவனது வாழ்க்கைக்கு சித்தப்பாவின் உருவில் ஒரு புயலை கிளப்பியது.
வழமை போல் தன் கேபினில் பிசியில் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை தன் புறம் திருப்ப சிணுங்கியது அஸ்வினின் மொபைல்.
மொபைலில் புது இலக்க தோன்ற டுரூ காலரின் உதவியினால் அது ஜி.எச் ஹாஸ்பிடல் என்று காட்டிக்கொடுக்க அவசரம் என்று உணர்ந்து காலை அட்டன்ட் செய்தான் அஸ்வின்.
அவன் பேசுவதற்கு முன்பே " கண்ணா சித்தி பேசுறேன் டா. சித்தப்பாவ ஜி.எச் இல் அட்மிட் பண்ணி இருக்கோம். நீ உடனே வாட. டாக்டர்ஸ் எல்லாம் என்னன்னவோ சொல்லுறாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. என் செய்றதுனு தெரியலடா சீக்கிரம் வாட.." என்று அழுதவாறு பேசிய சித்ராவிடம்
"சித்தி நீங்க பதட்டபடாம இருங்க. நான் இன்னும் அரை மணித்தியாலயத்தில் அங்க இருப்பேன்." என்று போனை அனைத்து விட்டு பர்மிசன் கேட்பதற்கா சாருவை காண அவளது அறை நோக்கி சென்றான்.
"எக்ஸ்கியூஸ்மி மேம்"
"எஸ் கம் இன்"
" மேம் எனக்கு ஒரு ஹாப் டே லீவ் கிடைக்குமா??"
" ஏன் அஸ்வின் எனிதிங் சீரியஸ்??"
"ஆமா மேம். சித்தப்பாவ ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கதா இப்போ தான் கோல் வந்தது. சித்தியால அங்க தனியா மனேஜ் பண்ண முடியாது. சோ மேம்.."
"ஓகே அஸ்வின் உங்களை ரிலீவ் பண்ணுறேன். யூ கேன் லீவ். எந்த ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்க??"
"இங்க ஜி.எச் ல தான். மேம் நான் கிளம்புறேன்."
" ஓகே நீங்க போய் பார்த்துட்டு என்ன ஏதுனு விவரம் சொல்லுங்க. ஏதும் ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க."
"தாங்கியூ மேம். நான் இப்போ கிளம்புறேன்."
என்றவாறு ஆஸ்பிடல் நோக்கி கிளம்பினான் அஸ்வின்.
#8...
பயணப்படும் முன் வருணை அழைத்த அஸ்வின்
"வருண் ஒரு எமர்ஜன்சி. உன்னால உடனே உன்னோட ஆபிஸ் பக்கத்தில இருக்க ஜி.எச் வரைக்கும் போக முடியுமா?? சித்தப்பாவை ஜி.எச் இல் அட்மிட் பண்ணி இருக்கதா இப்போ தான் சித்தி கால் பண்ணாங்க. நான் இங்க இருந்து வர எப்படியும் வன் அவர் ஆகும். நீ அங்க போய் பார்த்துட்டு என்னனு கால் பண்ணுறியா??"
"ஓகே கூல் டா நான் இன்னும் பத்து நிமிடத்தில் அங்க இருப்பேன். நீ பதட்டப்படாம வா. நான் அங்கே என்னான்னு பார்த்துட்டு கால் பண்ணுறேன்."

"தாங்ஸ் டா. " என்று செல்லை அணைத்து விட்டு காரில் ஆஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
ஆஸ்பிடலில் நுழைந்த அஸ்வின் ரிசப்ஷனில் விசாரித்து ஐ.சி.யூ வினை நோக்கி சென்றான். ஐ.சி.யூ வாசலில் அழுது ஓய்ந்து போய் இருந்த சித்ராவினை கண்டவுடன் அவனது மனதில் வேரூன்றி இருந்த பயம் கிளை பரப்ப ஆரம்பித்தது.
தனது சித்தியின் வேதனையை காணச்சகிக்காது தன் சித்தப்பாவின் உடல் நிலையினை அறியும் பொருட்டு சித்ராவிற்கு துணையாய் நின்றிருந்த வருணிடம் விரைந்தான்.
"வருண். சித்தப்பாவிற்கு என்னாச்சி?? டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க??"
அஸ்வினின் குரல் கேட்டு தலையை திருப்பிய சித்ரா அவனிடம் விரைந்து "கண்ணா டாக்டர்ஸ் என்னன்னமோ சொல்லுகிறார்கள் டா. எனக்கு பயமா இருக்கு பா. சித்தப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல?" என்று பயத்தால் அழும் சிறுபிள்ளையாய் மாறி தன்னிடம் வினவிய தன் சித்தியை ஆறுதல் படுத்தும் முகமாக "சித்தி சித்தப்பாவிற்கு ஒன்றும் இல்லை.இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க சித்தப்பாவிற்கு ஒன்னும் இல்லை. ஹீஸ் ஆல்ரைட் னு டாக்டர் சொல்ல போகிறாங்க" என்று தன் சிற்றன்னையை சமாதானப்படுத்துவதாக எண்ணி அலைப்புறும் தன் மனதையும் சமாதான படுத்த விளைந்தான். சித்ராவினை ஆறுதல் படுத்திய அவனால் தன்னை ஆறுதல் படுத்தமுடியவில்லை.

ஏனெனில் வருண் போனில் கூறிய வார்த்தைகள் அவனை கதி கலங்க வைத்திருந்தது.
போனில் வருண் கூறியதாவது "அஸ்வின் அங்கிளுக்கு ஹாட் அட்டக்னு சொல்லுறாங்க. அதுவும் இது இரண்டாவது அட்டாக்காம். இமிடியேட்டா பைபாஸ் பண்ணணும்னு சொல்லுறாங்க. நீ சீக்கிரம் வந்தனா டாக்டரை மீட் பண்ணி தெரிந்து கொள்ளலாம்."
"ஓகே டா நான் இன்னும் பத்து நிமிடத்தில் அங்க இருப்பேன்.சித்திக்கு இதெல்லாம் தெரியுமா??"
"இல்லடா நான் இன்னும் ஏதும் சொல்லவில்லை."
"ஓகேடா. நீ ஏதும் சொல்லாத. நான் வந்து பார்த்துக்கொள்கிறேன்." என்று தனக்கு வருண் கூறியதை நினைத்தவனுக்கு தன் குடும்பத்தாரை நினைத்து நெஞ்சம் பதறியது.
வருணுடன் டாக்டரை காண சென்றவனுக்கு அவர் கூறிய செய்தி தலையில் இடியை இறக்கியது.
"மிஸ்டர் தேஜஸ்வின் உங்க அப்பாவோட ரிப்போர்ட்டை பார்த்தப்போ அவரோட இதயம் ரொம்ப வீக்கா இருப்பது தெரிய வந்தது. இதை சரிப்படுத்தினா தான் ஆப்பரேஷனை தாங்குற வலு அவரோட இதயத்திற்கு கிடைக்கும். இது ரொம்ப வயசானவங்களுக்கு செய்றது அவங்களோட உயிருக்கு ரிஸ்க். ஆனா உங்க அப்பாவுக்கு ஒரு வன் மன்த் டிரீட்மன்ட் கண்டினு பண்ணோம்னா அவரோட இதயத்தை வலுப்படுத்தலாம். ஆனால் அந்த ஒரு மாதத்தில் அவரை ரொம்ப கவனமா பார்த்துக்கனும். பூட் டயட் மற்றும் ரெகுலர் எக்ஸர்சைஸ் , ரெகுலர் செக்கப் இதெல்லாம் சரியா பாலோ பண்ணனும். அப்புறம் அவரோட மென்டல் ஹெல்த்திலும் கவனம் எடுத்துக்கோங்க. பிறகு அவரோட இம்ப்ரூமண்டை பார்த்துட்டு ஆப்பரேஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணலாம்."
என்று டாக்டர் கூறியதை கேட்டுவிட்டு வந்தவனுக்கு மனது தாளவில்லை. என்னதான் குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர் கூறிய போதும் மறைமுகமாக அவர் உயிருக்கு அபாயம் உண்டு என்று எச்சரித்தது போலவே இருந்தது.
என்னதான் மனம் நன்மையே நடக்கும் என்று சமாதானப்பட்டாலும் மூளையோ பாதகமான நிலையில் நின்று யோசிப்பதை நிறுத்தவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top