பெருமைமிகு பெண்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
பெண்ணே நீ உன் உரிமைக்காக போராடினால்

நீ புரட்சி செய்கிறாய் என்பார்கள்

இந்த உலகம் உன்னை குட்டும் போது

நீ குரல் கொடுத்தால்

உன் குணத்தை கேலி செய்வார்கள்

பிறருடைய தவறை தட்டிக் கேட்டால்

உன் மேல் தவறு என்பார்கள்

இந்த உலகம் நீ யார் என்று

சொல்வதற்க்கு முன்னால்

நீ யார் என்று உன்னை புரிந்து கொள்

பல பாவங்களை பொறுத்து பூமி ஆளும்

பூமா தேவியின் பிள்ளைகள் நாம்

கனல் கண்களால் மதுரையை சுட்டெரித்த

கண்ணகியின் கருவில் வந்தவர்கள் நாம்

நிமிர்ந்த நன்னடை

நேர் கொண்ட பார்வையினை கொண்ட பாவைகள் நாம்

ஆக்கும் சக்தியும் நாம்தான்

அநிதீயை அழிக்கும் ஆயுதமும் நாம்தான்

இந்த உலகத்திற்க்கு உன்னை அடையாளம் காட்டு

நான் ஒரு பெண் என்று………**
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top