மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
புது வீட்டுக்கு சிவசங்கர் எப்போ குடி வந்தால் ஜமுனாவுக்கு என்னவாம்?
ஒருவேளை கௌரி சங்கருக்கு பதிலாக இவளும் இவள் கிழட்டு புருஷன் வெங்கடாசலமும் பர்ஸ்ட் நைட் கொண்டாடப் போறாங்களோ?
ஸ்ஸ்சப்பா ரொம்பவே கண்ணைக் கட்டுதே
என்னதான் இரண்டாம் கல்யாணம்ன்னாலும் எங்கே போனே ஏன் போனேன்னு சிவசங்கரை போட்டு இப்படி படுத்துறாளே ஜமுனா மூதேவி
சிவா ரொம்பவே பாவம்ப்பா
பெண்டாட்டி பிள்ளைகளுடன் ஒரு சுகமும் அனுபவிக்காமல் கடை வேலை ன்னு மாடா உழைச்சு என்ன பிரயோஜனம்?
அப்பனுக்கும் கூடப் பிறந்தவங்களுக்கும் நல்லதொரு தொகை கிடைக்க வழிதான் பண்ணியிருக்கிறான்
ஒவ்வொரு நிகழ்விலும் மேகலா குடும்பம் ஸ்கோரை அள்ளுறாங்க
ஸாரி சொல்ல சூர்யாவுக்கு ராமகிருஷ்ணன் சொல்லித் தருவது அருமை
இதெல்லாம் முன்னாடியே சிவாவின் பெற்றோர் செய்திருக்க வேண்டும்
எங்கே அந்த ஜமுனா மூதேவிக்கு பெற்ற மகனிடம் உறண்டை இழுக்கவே நேரம் போதவில்லை
இதெல்லாம் என்ன ஜென்மமோ?
சூர்யா யாரைப் பார்த்து பயப்படுறாள்ன்னா ஒண்ணு ஜமுனா பீடையா இருக்கணும்
இல்லாட்டி சித்தி விஜியாக இருக்கணும்
இதுக்கு போயி வெத்திலையில் மை தடவி ஜோசியமா பார்க்கணும்?