நேசம் மறவா நெஞ்சம்-18Nesam Marava Nenjam

Advertisement

NithyaSriram

Active Member
ஆத்தாடி, இந்த கயலு புள்ளக்கிட்ட பார்த்து தான் கண்ணன் பேசனும் போல.... இல்லனா, கண்ணன்ன ஒரு வழி ஆக்கிருவாப் போலவே........ கயலு, நீ இன்னும் வெலுத்ததெல்லாம் பாலணு நெனைக்காத.....
 

n.palaniappan

Well-Known Member
அனைவரும் சாப்பிட்டுவிட்டு...... அங்கே உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்க........ ராமன் மல்லிகாவிடம் பேச முடியாமல் சைட் அடித்துக் கொண்டிருந்தான்......



சாவித்திரி கண்ணனிடம் வந்து” கண்ணா 3 மணிபோல ஊருக்கு கிளம்புவோமாப்பா........”.



“சரிம்மா....... கயலயும் எல்லாம் எடுத்துவைக்கச் சொல்லுங்க.......”

“இல்லப்பா..... அவ உன்கிட்ட என்னமோ சொல்லனுமா........”.



“என்னவாம்......”.



“தெரியலப்பா...... கயல வரச்சொல்லுறேன் நீயே கேட்டுக்க........”

ம்ம்ம்.........



ஐந்து நிமிடங்கள் கழித்து கயல் வந்து……” உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்........”



“அதுக்குத்தானே.........வரச்சொன்னேன்..........சொல்லு.......”



“அது .....ஒன்னுமில்ல......தாமர அக்காவீடும் .......சுதாக்காவும் வந்திருக்காங்கள்ள........”.



“அதுக்கு.......இப்ப என்ன.......”



“இல்ல எனக்கு இன்னும் நாளுநாள் கழிச்சுதான் காலேஜ் திறக்குறாங்க.......... நான் இன்னும் நாளு நாளைக்கு இங்க இருந்துட்டு வரவா..........சுதாக்கா......அவுக வீட்டுக்கும் கூப்புட்டுறுக்கா......ப்ளிஸ்.....ப்ளிஸ்......”



“ஒன்னும் தேவையில்ல...........இத்தனநாளு இங்கன இருந்தது.....போதும் ஊருக்கு கிளம்புற வேலையபாரு.........என்னோட கண்ணுக்குமுன்னாடி நிக்காத போ.......” என்று கோபத்துடன் சொல்ல.........



இவருக்கு என்னாச்சு.......ஏன் இப்புடி பேசுறாரு....நல்லாத்தானே இருந்தாரு......



கண்ணனுக்கு தலைவலி மண்டையை பிளந்தது...... ச்சே எவ்வளவு சந்தோசமா..... இவகூட சாப்புட போனோம்........இவளோட அக்காவுக்கு இருக்குறது நாக்கா இல்ல தேள் கொடுக்கா..... என்ன நக்கலு நையாண்டி அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமேன்னு யோசிக்கமாட்டாங்களா......... நல்லவேளை நாம தப்புச்சிட்டோம்......... ஆனா இவுக குடும்பத்துல இருக்கவங்க எல்லாரும் இப்புடி இல்லயே.......... இந்த மாமாக்கூட இன்னைக்கு எம்புட்டு பணிவா பேசுறாக....... இவ அக்கா என்னமோ....... எங்க வீட்டுல அது இருக்கு இது இருக்குன்னு என்னா......... பில்டப்...... மேக்கொண்டு இவ அங்க ரெண்டுதரம் அவுக வீட்டுக்கு போயிட்டு வந்தா......... இந்த குணம் அவளுக்கு ஒட்டுனாலும் ஒட்டும்..



நம்ம அம்மா இப்புடியெல்லாம் பேசுனா தாங்குவாங்களா....... கடவுள் காப்பாத்திட்டாரு....... நமக்கு............இவளே போதும்பா........(ஆமா கண்ணா உனக்கு இந்த பெட்ரமாஸ் லைட்டே போதும்பா......) இந்த வாசு பயல நான்கூட என்னமோ புத்திசாலின்னு நினைச்சேன்......... இவன் என்ன......இப்புடி ஒரு மங்குனியா இருக்கான்.........நாமகூட இவன பெரிய வில்லன் ரேஜ்சுல நினைச்சுட்டோம்........இவன் ஒரு எடுப்பார் கைப்புள்ளயாவுள இருக்கான்.................. இவன் பண்ணுன ஒரே நல்ல காரியம்.......இந்த பொண்ண கல்யாணம் பண்ணுனது......... அதுனாலதான நாம தப்புச்சோம்......... இதுக்கான்டியே இவன ..........போனா போதுன்னு மன்னிச்சு இவன்கூட பேசலாம்...........கொஞ்சநேரம் இவுகரெண்டுபேரும் பேசுனத கேட்டதுக்கே........நமக்கு இப்புடி தலைய வலிக்குதே.....ஆனா காலம்பூரா.....................கேட்டா...........இந்த ஊரு கண்ணாத்தாதான் என்னைய இந்த பெரிய கண்டத்துல இருந்து காப்பாத்தி குடுத்திருக்கு...........



இதுல இந்த மேடம்வேற அவுக வீட்டுக்கு போயிட்டு வாராங்களாம்.......கண்ணா ஒம்பொண்டாட்டி இப்ப இருக்குற மாதிரியே வேணும்னா....... இவள இங்கன விடாம ஊருக்கு கூட்டிட்டு போயிரு........ அவ இப்ப நீ கோபமா இருக்குறதா நினைச்சிருக்கா......... அதயே மெயின்டேன் பண்ணிரு...... கொஞ்சம் பாவம் பாத்தாக்கூட.......நம்ம கதை கந்தல்தான்........... சும்மாவே நாம இவ கிட்ட போன்லகூட பேசமுடியல........இப்பவே பத்துநாளு இவள பாக்கவும் முடியாம.....இவகிட்ட பேசவும் முடியாம........என்ன பாடு பட்டோம்...... இன்னைக்கு ........இவள ஊருக்கு கூட்டிட்டு போய்தான் மறுவேலை பாக்கனும்.........



அங்கு கயலோ.......” அம்மா அவுக இன்னைக்கே........... என்னையும் கிளம்ப சொல்றாங்க.........”



“ஏண்டி அவுககிட்ட இங்க இருக்க கேக்க போறேன்னு சொன்ன......”.



“இல்லம்மா....... என்னையும் கிளம்பச் சொன்னாங்க..........”



பரவால்ல நம்ம மாப்புளைக்கு கயலவிட்டு பிரிஞ்சிருக்க முடியல போல......” சரிடி.......நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல.........உன்னோட மாமியாரும் உம் புருசனும் எந்த குறையும் உன்னைய பத்தி சொல்லக்கூடாது............ சரியா....”



“596.....தரம் சரிம்மா.......”

“அதென்னடி 596......”.



“ம்ம்ம்........நீங்க சொன்ன அட்வைஸ்........”



“உன்னைய.........இரு இந்தா.....வாரேன்........”.என்றபடி அவளை விரட்ட......... இந்த பொண்ணு எப்ப இந்த சின்னபுள்ளத்தனத்துல இருந்து வளரும்னு தெரியலயே.............இவ இப்புடி இருக்கா.........

ஆனா சுதா..... என்னன்னா இப்புடி எல்லாரயும் எடுத்தெருஞ்சு பேசுரா........பெத்த தாய்கிட்டயே இப்படி பேசுனா......அங்க அவ மாமியார்கிட்ட எப்புடி பேசுவா....... கடவுளே....நான் எல்லாப்புள்ளயையும் ஒரே மாதிரிதானே வளத்தேன்........... அதுக அஞ்சும் ஒன்னா இருந்தா......இவமட்டும் தனியாதானே........... இருப்பா.....ஏதோ சின்னப்புள்ளன்னு விட்டது தப்பா போச்சோ.........இவ மனசுல இம்புட்டு பேராசையும் கோபமும் எடுத்தெறிஞ்சுபேசுற குணமும் யாருகிட்ட இருந்து வந்துச்சு........ இன்னைக்கு எத்தனதரம் கயலோட செயினபத்தி..........கேட்டுட்டா...........இவரு எப்புடி வாங்குனாருன்னு............ .கேள்வியா கேட்டு தொலைச்செடுத்துட்டாளே.....................நம்ம தங்கச்சிதானே.....நல்லாயிருக்கனுமுன்னு தோனலையே....... கடவுளே இவளுக்கு நல்ல புத்திய குடுப்பா.....



கண்ணனும் கயலும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.....சாவித்திரியும் இரு மகன்களும் ஏற்கனவே காரில் அமர்ந்திருக்க.........கயல் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே காரில் வந்து ஏறவும்......கண்ணன் காரை கிளப்பினான்...........



இன்னும் எண்ணி நாளேநாளுதானே........இருந்துட்டு வாரேன்னு சொன்னேன்........அதுக்கு பெரிய இவருமாதிரி கோவிச்சுக்குறாரு........... போய்யா போ....... என்னமாச்சும் கேளு.......அப்புறம் இருக்கு உனக்கு....... என்று விரைப்புடன் ஜன்னல் பக்கம் பார்த்து அமர்ந்திருந்தாள்.........



வீட்டுக்கு வந்தவள்........... அங்கிருந்த கன்றுகுட்டியோடு விளையாடிக்கொண்டும்.முத்து ராமனோடும் அரட்டை அடித்தவள்........மறந்தும் மாடிக்குச் செல்லவில்லை...... கண்ணனுக்கு அவள் மனம் புரிந்தாலும்.......எப்புடியும் படுக்க மாடிக்குத்தானே வருவ...........அப்ப பேசிக்கலாம்.....என்று பேசாமல் இருந்துவிட்டான்........



இரவு பத்து மணிக்கு அறைக்குள் வந்தவள்............அந்த அறையை ஆச்சர்யமாக பார்த்தவள்........பின் ஒன்றும் சொல்லாமல்.....விறுவிறுவென்று வெளியே சென்றவள் அங்கிருந்த நான்கைந்து தலகாணிகளை எடுத்து தன்னைச்சுற்றிலும் போட்டு பேசாமல் படுத்துக் கொண்டாள்.............



இனி............................?

தொடரும்.....





ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்..........போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ்......போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா.........இப்ப கதைய படிச்சுட்டு உங்களோட கருத்தை பதிவு செய்ங்க.........ப்ளிஸ்.....

கயலை அப்படியே கண் முண்ணால் பார்ப்பது போல நடை.
வாசு இணி கணக்கு அதுவும் பொய் கணக்கு சொல்ல பழகணும்.
பழி வாங்குறேன் என்று அவனே மாட்டிட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top