"தோழியின் தோள் சாய்ந்த போது
துக்கம் கூட தொலைவில் சென்றது"
"பள்ளி பருவத்தில்
பாடிக் களித்திருந்த பொழுதுகள்
காரணமே இன்றி சண்டையிட்டு
சமாதானமான நினைவுகள்
உண்டு ஊட்டி மகிழ்ந்த பொழுதுகள்
உல்லாசமாய் பேசி சிரித்த நிகழ்வுகள்
நீங்கா இடம் பெற்று நிறைந்து இருக்கிறது
என் நெஞ்சமதில்"
"நிம்மதி தந்த நிமிடங்கள்
என் வாழ்நாளில் யாதெனில்
என் தோழியின் தோள் சாய்ந்து
நான் உறங்கிய நிமிடங்களே"
"என் கண்ணில் கண்ணீரை காண்கையில்
காயம் பட்ட நெஞ்சுடையவளாய் துடித்திடுவாள்
என் துயர் துடைத்திடத்தான் நினைத்திடுவாள்"
"நட்பினால் அமைந்த இனிய உறவு அவள்
என் வாழ்வின் இன்றியமையா நபர்களில் முதன்மை அவள்"
"துயர் துடைத்திடும் இறைவனே
துக்கம் உனக்கு வந்ததெனில்
தயங்காமல் தஞ்சமடைந்திடு
என் தோழியிடத்தில்
தூய்மையான அன்பினால்
உன் துக்கத்தையும் துடைத்தெறிந்திடுவாள்"
"சின்ன சின்ன கலாட்டாக்கள் செய்து
யாரிடமும் சிக்கி கொள்ளாமால்
சிறகடித்து பறந்த நிமிடங்களை எண்ணி
சிந்தை ஏங்குகிறது"
"சீக்கிரத்தில் சந்திப்பேன்
என் சிந்தனையில் நிறைந்தவளே"
"விரைந்தோடும் காலம் அது
விலக்கி வைத்தது எங்களை"
"எங்கிருந்தாலும் உன் நினைவுகளோடு உன் தோழி"
துக்கம் கூட தொலைவில் சென்றது"
"பள்ளி பருவத்தில்
பாடிக் களித்திருந்த பொழுதுகள்
காரணமே இன்றி சண்டையிட்டு
சமாதானமான நினைவுகள்
உண்டு ஊட்டி மகிழ்ந்த பொழுதுகள்
உல்லாசமாய் பேசி சிரித்த நிகழ்வுகள்
நீங்கா இடம் பெற்று நிறைந்து இருக்கிறது
என் நெஞ்சமதில்"
"நிம்மதி தந்த நிமிடங்கள்
என் வாழ்நாளில் யாதெனில்
என் தோழியின் தோள் சாய்ந்து
நான் உறங்கிய நிமிடங்களே"
"என் கண்ணில் கண்ணீரை காண்கையில்
காயம் பட்ட நெஞ்சுடையவளாய் துடித்திடுவாள்
என் துயர் துடைத்திடத்தான் நினைத்திடுவாள்"
"நட்பினால் அமைந்த இனிய உறவு அவள்
என் வாழ்வின் இன்றியமையா நபர்களில் முதன்மை அவள்"
"துயர் துடைத்திடும் இறைவனே
துக்கம் உனக்கு வந்ததெனில்
தயங்காமல் தஞ்சமடைந்திடு
என் தோழியிடத்தில்
தூய்மையான அன்பினால்
உன் துக்கத்தையும் துடைத்தெறிந்திடுவாள்"
"சின்ன சின்ன கலாட்டாக்கள் செய்து
யாரிடமும் சிக்கி கொள்ளாமால்
சிறகடித்து பறந்த நிமிடங்களை எண்ணி
சிந்தை ஏங்குகிறது"
"சீக்கிரத்தில் சந்திப்பேன்
என் சிந்தனையில் நிறைந்தவளே"
"விரைந்தோடும் காலம் அது
விலக்கி வைத்தது எங்களை"
"எங்கிருந்தாலும் உன் நினைவுகளோடு உன் தோழி"
Last edited: