ஹாய் கியூட்டிபாய்ஸ்.. பெரிய epi யா போடலாம் னு பார்த்தா அது பாட்டுக்கு நீண்டு கொண்டு போகுது சரி ரெண்டு அத்தியாயமா போடலாம் னு பாக்குறேன். ஒரு அத்தியாயம் link வந்த உடன் போடுறேன். அடுத்த அத்தியாயம் sunday தரேன்.
நிர்மல் எதுவுமே பேசாமல் வண்டியில் அமர்ந்திருக்க, அவனின் முகமே சொன்னது அவன் அதிர்ச்சியில் இருக்கின்றான் என்று. அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக வண்டியை ஒட்டிக் கொண்டு வந்த மதியழகி அவனை வீட்டில் விடாமல் தன் வீட்டுக்கே அழைத்து வர
"ரெண்டு பேரும் நேரங்காலத்தொடு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சமைச்சி இருப்பேன். சாப்பிட்டுட்டு ராத்திரி தான் வருவீங்க னு நான் சமைக்கல. காலைல மீதம் இருக்கிறதே எனக்கு போதும் னு இருந்துட்டேன்" முத்துலாட்ச்சுமி இவர்களை பார்த்த உடனே சொல்ல
"நாங்க சாப்பிட்டு தான் வந்தோம்" என்ற மதியழகி நிர்மலை அழைத்துக் கொண்டு தனதறைக்குள் புகுந்துக் கொள்ள
"என்னாச்சு இவளுக்கு? இந்த நிர்மல் பய அமைதியா போறான் ஏதோ சரியில்ல" புலம்பியவாறே உள்ளே சென்றாள் முத்துலாட்ச்சுமி.
மதியழகியின் அறைக்குள் நுழைந்த நிர்மல் அவளைக் கட்டிக் கொண்டு அழ அவளின் அறைக் கதவு தட்டப்படாமலே திறந்து கொள்ள அங்கே அக்ஷய் இரண்டு கைகளிலும், விஸ்கி பாட்டில்களோடு நின்றுக் கொண்டிருந்தான்.
அவனைக் கண்டு மதி "மெர்னர்ஸ் என்றால் என்ன னு தெரியல கதவை தட்டிக் கொண்டு வர தெரியாதா?" என்ற பார்வையை வீச
அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு நிர்மல் அழுவதும், மதி சமாதானப் படுத்துவதும் கண்ணில் விழுந்தாலும், ஒட்டுக் கேட்டதில் அங்கே நடந்த அனைத்தையும் அறிந்த அக்ஷயோ மதியின் பார்வையை கண்டு கொள்ளாது, உள்ளே வந்து "நிர்மல் சரக்கடிப்போமா?" என்று கேட்க மதி அக்ஷையை முறைக்கலானாள்.
நிர்மல் இருக்கும் நிலைமைக்கு அவனுக்கு அது தேவைப்பட்டது போலும் அக்ஷையின் கையிலிருந்த மதுபான பாட்டிலை பிடுங்கியவன் வாயில் சரிக்கலானான்.
"டேய் குடல் வெந்ததும் டா.. உனக்கு குடிச்சி பழக்கமில்லை" சொல்லியவாறே மதி நிர்மலை தடுக்க முனைய அவளை இழுத்து தன்னோடு சேர்த்தனைத்தான் அக்ஷய்
அக்ஷயின் அணைப்பில் திமிரிக் கொண்டு நின்றவளோ அவனின் அணைப்பையோ, நெருக்கத்தையோ உணராது அவனிடமிருந்து விலகி நிர்மலை தடுக்கும் முயற்சியில் இருக்க அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் அக்ஷய்.
அக்ஷய் இவ்வாறு முத்தமிடுவான் என்று எதிர்பார்க்காது அதிர்ச்சியில் உறைந்தவளோ! அவனிடமிருந்து விலக கூட தோன்றாமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு அவனையே பார்த்திருக்க, நிர்மல் முழு பாட்டிலையும் குடித்த பின்னே மதியை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.
தள்ளி விடாத குறையாக மதியை அக்ஷய் விலக்க சுயஉணர்வு வந்தது மட்டுமல்லாது கட்டுக்கடங்காத கோபமும் தலைக்கேற, அக்ஷையை அடிக்க கையோங்கி இருந்தாள் மதியழகி.
"என்னையா பொம்பளைங்கள பிடிக்காத, பசங்க பின்னாடி போறவன்னு சொல்லுற" என்றவாறே
அவளின் கையை பிடித்து அவளை ஒரு சுற்று சுற்றி தன் பக்கம் இழுத்து அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான் அக்ஷய்.
விலகவும் முடியாமல், விலகத் தோன்றாமல் அவனின் முத்தத்தில் கரைந்துக் கொண்டிருந்தாள் மதியழகி.
அங்கே நிர்மல் என்ற ஒரு ஜீவன் இருப்பது இருவர் கண்களுக்கும் தெரியவில்லையோ! முத்த யுத்தம் அரங்கேற அவனோ அமர்ந்தவாக்கில் ஒரு புறம் தலை தொங்கி விழுந்துக் கொண்டிருந்தான்.
நிர்மல் எதுவுமே பேசாமல் வண்டியில் அமர்ந்திருக்க, அவனின் முகமே சொன்னது அவன் அதிர்ச்சியில் இருக்கின்றான் என்று. அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக வண்டியை ஒட்டிக் கொண்டு வந்த மதியழகி அவனை வீட்டில் விடாமல் தன் வீட்டுக்கே அழைத்து வர
"ரெண்டு பேரும் நேரங்காலத்தொடு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சமைச்சி இருப்பேன். சாப்பிட்டுட்டு ராத்திரி தான் வருவீங்க னு நான் சமைக்கல. காலைல மீதம் இருக்கிறதே எனக்கு போதும் னு இருந்துட்டேன்" முத்துலாட்ச்சுமி இவர்களை பார்த்த உடனே சொல்ல
"நாங்க சாப்பிட்டு தான் வந்தோம்" என்ற மதியழகி நிர்மலை அழைத்துக் கொண்டு தனதறைக்குள் புகுந்துக் கொள்ள
"என்னாச்சு இவளுக்கு? இந்த நிர்மல் பய அமைதியா போறான் ஏதோ சரியில்ல" புலம்பியவாறே உள்ளே சென்றாள் முத்துலாட்ச்சுமி.
மதியழகியின் அறைக்குள் நுழைந்த நிர்மல் அவளைக் கட்டிக் கொண்டு அழ அவளின் அறைக் கதவு தட்டப்படாமலே திறந்து கொள்ள அங்கே அக்ஷய் இரண்டு கைகளிலும், விஸ்கி பாட்டில்களோடு நின்றுக் கொண்டிருந்தான்.
அவனைக் கண்டு மதி "மெர்னர்ஸ் என்றால் என்ன னு தெரியல கதவை தட்டிக் கொண்டு வர தெரியாதா?" என்ற பார்வையை வீச
அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு நிர்மல் அழுவதும், மதி சமாதானப் படுத்துவதும் கண்ணில் விழுந்தாலும், ஒட்டுக் கேட்டதில் அங்கே நடந்த அனைத்தையும் அறிந்த அக்ஷயோ மதியின் பார்வையை கண்டு கொள்ளாது, உள்ளே வந்து "நிர்மல் சரக்கடிப்போமா?" என்று கேட்க மதி அக்ஷையை முறைக்கலானாள்.
நிர்மல் இருக்கும் நிலைமைக்கு அவனுக்கு அது தேவைப்பட்டது போலும் அக்ஷையின் கையிலிருந்த மதுபான பாட்டிலை பிடுங்கியவன் வாயில் சரிக்கலானான்.
"டேய் குடல் வெந்ததும் டா.. உனக்கு குடிச்சி பழக்கமில்லை" சொல்லியவாறே மதி நிர்மலை தடுக்க முனைய அவளை இழுத்து தன்னோடு சேர்த்தனைத்தான் அக்ஷய்
அக்ஷயின் அணைப்பில் திமிரிக் கொண்டு நின்றவளோ அவனின் அணைப்பையோ, நெருக்கத்தையோ உணராது அவனிடமிருந்து விலகி நிர்மலை தடுக்கும் முயற்சியில் இருக்க அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் அக்ஷய்.
அக்ஷய் இவ்வாறு முத்தமிடுவான் என்று எதிர்பார்க்காது அதிர்ச்சியில் உறைந்தவளோ! அவனிடமிருந்து விலக கூட தோன்றாமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு அவனையே பார்த்திருக்க, நிர்மல் முழு பாட்டிலையும் குடித்த பின்னே மதியை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.
தள்ளி விடாத குறையாக மதியை அக்ஷய் விலக்க சுயஉணர்வு வந்தது மட்டுமல்லாது கட்டுக்கடங்காத கோபமும் தலைக்கேற, அக்ஷையை அடிக்க கையோங்கி இருந்தாள் மதியழகி.
"என்னையா பொம்பளைங்கள பிடிக்காத, பசங்க பின்னாடி போறவன்னு சொல்லுற" என்றவாறே
அவளின் கையை பிடித்து அவளை ஒரு சுற்று சுற்றி தன் பக்கம் இழுத்து அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான் அக்ஷய்.
விலகவும் முடியாமல், விலகத் தோன்றாமல் அவனின் முத்தத்தில் கரைந்துக் கொண்டிருந்தாள் மதியழகி.
அங்கே நிர்மல் என்ற ஒரு ஜீவன் இருப்பது இருவர் கண்களுக்கும் தெரியவில்லையோ! முத்த யுத்தம் அரங்கேற அவனோ அமர்ந்தவாக்கில் ஒரு புறம் தலை தொங்கி விழுந்துக் கொண்டிருந்தான்.