அருமையான பதிவு சவீதா.அருள் அப்பா காயத்ரிட்ட நகைய கொடுத்து வச்சிருக்கது, அருளுக்கு தெரியாதா.நல்லவேளை காயத்ரி புருசன்,புள்ளைக்கு நகைய பத்தி தெரியல, தெரிஞ்சிருந்தா பொண்ணுதான் கிடைக்கல பொன்னாவது இருக்கட்டும்னு நகைய ஆட்டைய போட்டு இருப்பாங்க.
ஒரு நகைய தேவைக்கு அடகு வச்சதா காயத்ரி சொன்னதை கேட்டு மதிப்பு வந்திருக்க,வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்வதாக சொன்னவர்,அருள் கர்பமாக இருப்பதை கேட்டு அவளுக்காக சமைத்து கொடுப்பதை பார்க்கும் போது,அருள் திருமண விஷயத்தில் சூழ்நிலையை தனக்கு சாதகமாக
எடுக்க நினைத்து இருந்தாலும்,அண்ணன் மகள் மேல் பாசமும் இருப்பது தெரியுது.
மஞ்சள் கயிறு மேஜிக்கா,இல்லை பிரிந்து இருப்பதா எதுவாக இருந்தாலும் ருத்ரா வாரத்துக்கு இரண்டு நாள் ஸ்ரீரங்கத்திற்க்கு வந்து தங்குவதும்,அவன் வர தாமதமானால் அருள் அவனை தேடுவதும் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவது தெரியுது.