சந்தங்கள் நீயானால்
சங்கீதம் நானாவேன்......
காதல் மன்னன்: விஷ்வ தேவ்
தன்மான சிங்கம் : ப்ரீத்தி....
ஆசிரியர்: ருத்ர பிரார்த்தனா.....
சங்கடத்தில் ஆரம்பிக்கும் உறவு சோகத்தில் திளைத்து சந்தோஷத்தில் முடிய நினைக்க
சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்
சந்திரனும் சூரியனும் போல...
சூரியனால் சந்திரனுக்கு ஒளி சந்திரன் சூரியனின் வெப்பத்தை பெற்று ஒளிர்ந்தாலும்
சந்திரன் வெப்பத்தை வாங்கினாலும்
சூரியனிடம் குளிர்வை தரும் சந்திரன்....
நீ இன்றி நான் இல்லை நானென்று நீ இல்லை
தன்னைத் தானே சுற்றிக்கொண்டு
தன்னையும் சுற்ற வைக்கும் சந்திரன் சூரியன் போல்
சேர்ந்து பிரிந்திருக்கும் உறவு....
ப்ரீத்தி விஷ்வா.....
தந்தையின் வஞ்சகத்தால்
தனித்து விடப்பட்ட தாய்
தாயும் மகளும்
தனியாக மறைந்து வாழ
தாய்க்காக சுயமாய்
தன்னம்பிக்கையோடு
தன்படிப்பை முன்னிறுத்தி
தலை நிமிர்ந்து வாழும் ப்ரீத்தி தந்தையை அழிக்க எண்ணி தன்னையே அழித்துக் கொள்ள துணிந்து செய்த செயல் ...
தன் தாயின் வாழ்விற்காகவும் தந்தையை அளிக்க
தந்தையின் மகளை கடத்தி
தான் அந்த இடத்தில் இருந்து துயரத்தை கொடுத்து
தண்டனை கொடுக்க நினைக்க....
தான் நினைத்தது நடந்ததா தன் விதி நினைத்தது நடந்ததா விதியை சதியால் வெல்ல வந்தவன்....
விஷ்வா அவளின் வாழ்க்கைக்குள் வந்து
வாழ்வை மாற்றி
வாழ்வை அழிக்க துணிந்தவளுக்கு
வாழ்க்கை கொடுக்க_ அவளுக்கு
வரமா சாபமா
விஷ்வா கொடுத்த
வாழ்க்கை....
தவறு செய்த தந்தையை தண்டிக்க போய்
தவறாய் நிற்கும் ப்ரீத்தி
தன் காதலுக்காக
தன் காதலை துறந்து
தன் காதலியின் வாழ்வை
தள்ளி நின்று
தூக்கி நிறுத்தும் விஷ்வா....
தந்தை பிரகாசத்தால் கைவிட பட்ட தாய்
மாமா எழில் மூலம் நம்பிக்கை பெற
அப்பா நாதனின் மூலம் அன்பும் ஆதரவை பெற்று
அலரிடம் அரண்டு போகும் ப்ரீத்தி
விஷ்வாவின்
தாய் தந்தை பாட்டி
தங்கை வர்ஷு
தம்பி ஆகாஷ் என்று
அழகான அன்பான
குடும்பம்......
தந்தை சிவசங்கரன் தன் மகனின் கவலை அறிந்து துணை நிற்கும் தந்தை...
தாய் வித்யா தேவி
தன் மகனை ஒழுக்கமாக வளர்த்து திறமையான மருத்துவனாக தலை நிமிரச் செய்தவன் தலைகுனிவாய் செய்த செயலை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் தாயாக
தன் மகனிடம் விளக்கம் கேட்டு தன் மகனின் நியாயத்தை புரிந்து தள்ளாடும் தாயாகவும்
தன் மகனே ஆனாலும்
தப்பை தப்பு என்று சுட்டிக்காட்டி தண்டனை கொடுக்கும் தாய்
தன்னிடத்தில் நிறுத்தி
தன் மருமகளாய் ப்ரீத்திக்கு தன்னால் முடிந்த உதவி செய்து தன் பெண் இனத்திற்கே தாயாகவும் நல்ல மாமியாராகவும்
தலைமை பொறுப்பேற்று குடும்பத் தலைவியாகவும் பெருமை சேர்க்கும் வித்யா தேவி
மனதில் உயர்ந்து நிற்கிறார்...
பாட்டி வசுந்தரா உடன்
ப்ரீத்தியின் இணைப்பு
பாட்டியின் தனிமையை போக்கி பல கதைகளை பேசி
பல கதைகளை கேட்டு
மெதுவாக அவளின் மனநிலையை மாற்றும் தோழியாகவும் இருவரும்
பரிமாறி கொள்வதும்..
பாட்டிக்கு துணையாக
பக்க பலமாக
பிரமாதம்......
தன் உடன் பிறந்த
தங்கையின் வாழ்வை அழித்து தான் அவள் இடத்தில்
தவறை உணர்ந்து பிரிந்து தங்கையின் வாழ்வு சரியாகும் வரை
தனியாய் வாழ முடிவு எடுத்து
தன் குழந்தையுடன் இருக்க திடீரென்று திருமணம் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும் விஷ்வா....குழந்தைக்கு
தந்தை தான் என்று அறிமுகம் செய்து புயலாய் அவள் வாழ்க்கைக்குள் புகுந்து
இதமான தென்றலாய் மாறியதா சுனாமியாக சுழற்றி அடித்ததா....
விஷ்வா ப்ரீத்தி
கத்தியின்றி ரத்தமின்றி
காதலின்றி சொல்லால்
காயப்படுத்தி விட்டு
காமத்தை அனுபவிக்க
கட்டிலுக்கு அழைக்கிறாய்
கல்லாக மாறிய இதயம்
கலங்குதடா இதை எண்ணி....
கல்யாணம் குழந்தை
குடும்பம் என ஆசை கொண்டேன் .....
தகுதியற்ற வாழ்க்கையில் நிற்கிறேன்
தகுதியாக வாழ....
இரு துருவங்களாய்
இரண்டும் முட்டிக்கொண்டு இருக்க
இல்லத்திற்கு அழைத்து வந்து இல்லாளை தனியாக விட்டுவிட்டு இனி இதுதான் உன் இடம் என தனி விலகிச் செல்ல...
குற்ற உணர்வில்
குறுகி நிற்கும் ப்ரீத்தி....
குடும்பத்தில் உள்ள அனைவரும்
கை கொடுத்து அவளிடம் சகஜமாக பழகிட மெதுவாய் தன் கூட்டுக்குள் இருந்து வெளியே வரும் ப்ரீத்தி
புதிதாய் பிறந்தது போல் பழையதை மறந்து
புத்தம் புது பூவாய்
பாசத்துடன் பழகும் உறவிடம்
பழையதை மறக்க நினைத்து புதிய வாழ்க்கைக்குள் நுழைய....
வெண்ணெய் திரண்டு வரும்போது
தாழியை உடைத்தது போல் ப்ரீத்தியின் மனமாற்றத்தை தவறாக புரிந்து
தள்ளி வைத்து காதலை உணர்த்தாமல்
தன் காதலை மறைத்து தன்னவளுக்கு ஒரு வாழ்வை கொடுக்கும்
தன்னலமற்ற காதலன்.....
பாட்டின் மூலம்
ப்ரீத்தி பீபியை எகிற வைக்கும் பாட்டுத்தலைவன் விஷ்வா...
பிரமாதம் அனைத்து
பாட்டுகளும்.....
வலியை வலியால் தான்
விரட்ட முடியும் என
வலி கொடுத்து
விலகி நின்று
வலிய வந்து
வில்லனாய் நிற்கும்
வில்லாதி கணவன்....
ஒருவரைப் பற்றி கூறி அவரைப்பற்றிய பிம்பம்
நமக்குள் பதிவது தவறு....
அறிந்து தெரிந்து கொள்ள
அறியாது அவருடன் இருந்து அவர்களைப் பற்றி தெரிந்து அவர்களுடன் இருப்பதே
அழகு....
அதை தான் விஷ்வா ப்ரீத்திக்கு அவன் குடும்பத்தை அறிமுகப்படுத்தி அவர்களுடன் அவளை இருக்க வைத்து அவளாக அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள செய்து
அன்னைக்கும் அவளைப் பற்றி கூறாமல்
அவளை கவனிக்க வைத்து அவளை புரிய வைத்து
அவர்களே அவனைத் தேடி வர அமைத்துக் கொடுத்த யோசனை
அருமையோ அருமை.....
தான் செய்த தவறை எண்ணி வருந்துவதும்
தனக்காக ஒரு குடும்பம் இருக்கிறதே என்று சந்தோஷப்படுவதும்
தன் கணவன்
தன்னை புரிந்து கொள்ள மாட்டானா என ஏங்குவதும் தனக்காக ஒரு குடும்பம் கிடைக்காதா என தவிப்பதும்..
கிடைத்த குடும்பத்தை
தக்க வைத்துக்கொள்ள துடிப்பதும் _ பிரீத்தியின் உணர்வுகளும் உணர்ச்சிகளையும்
உணர்வு பூர்வமாக படிப்பவர்களின்
உள்ளத்தை அடையச் செய்ததே தங்கள் எழுத்தின் வெற்றி
✍✍✍✍
விஷ்வா விஷ்வா விஷ்வா
உள்ள அழுகுறான்
வெளிய சிரிக்கிறான்
நல்ல வேஷந்தான்
வெளுத்து வாங்குறான்
அந்த வேஷந்தான்
கொஞ்சம் மாறணும்
விஷ்வாவின் காதல்
இன்று கைகூடனும் .........
வாழ்த்துக்கள் தோழி
சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது ஆனால் அனைத்தையும்
சொல்லி முடிக்க முடியவில்லை எனக்கு......
சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்....
எப்படி முடிக்க?????
காதல்......
காயங்களை தோற்றுவித்து தோற்றுவித்த காயங்களை ஆற்றும் மருந்து காதல்