இந்த சீனுக்கு இன்னும் ஒரு கிளைமாக்ஸ் போன் கால் வரவேண்டும். ஆனால் இந்தியாவில் இப்பொழுது இரவு எனலபதால் அங்கு விடியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
வருண் அவளை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன சிரிப்பு?”
“ரெண்டு பொம்பளைங்க சேர்ந்து ஒரு ஆம்பளைய என்ன பாடுபடுத்துறீங்க”
“இல்லன்னா நீங்க ஆம்பளைங்க ரொம்ப ஆடுவீங்கல்ல. அப்பப்போ உங்களுக்கு இப்படி ஏதாச்சும் ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்தாத்தான் ஒழுங்கா இருப்பிங்க”
“ஐ நோட்டெட் திஸ் பாய்ண்ட்”
“சரி நீங்க கிளம்புங்க. நைட் தான் என்ன முடிவுன்னு தெரியும்”
“நல்ல பதில் வரும்னு எதிர்பாக்குறியா”
“ஆமா. அக்கா சொன்னது வச்சு பார்த்தா அப்பாவுக்கு ஓகே தான் போல”
“சரி நீ கிளம்பு. எல்லாரும் வெளிய போலாம்.”
அவளும் ரூமில் தனியாக இருந்து என்ன செய்வாள். அவர்களுடன் கிளம்பினாள்.
அருகில் இருந்த மாலுக்கு சென்றனர். வழியில் அதே பாலம் வந்தது.
“நேத்து நீ இங்க அஞ்சு மணிநேரம் உக்காந்து இருந்த. என்ன யோசிச்சிட்டு இருந்த”
அவள் என்ன சொல்லுவாள். அடுத்து என்ன என்று தெரியாமல் திக்கு தெரியாமல் அமர்ந்து இருந்தாள். அவள் எதுவும் யோசிக்கவில்லையே. அவளுக்கு அதன் பிறகு வாழவே முடியுமா என்ற சந்தேகம் வந்தது. அதை எப்படி அவனிடம் சொல்வாள். கண்கள் கலங்கிவிட்டது அவன் கேள்வியில். இதோ வந்து நிற்கிறான். எனக்காகவே வந்துவிட்டான். எதோ கனவு போல இருக்கிறது. இனிமேல் அவனை விட்டுவிட அவளால் முடியாது.
“எதுவும் யோசிக்கலை. சும்மா தான் உக்காந்து இருந்தேன்”
“ம்ம்ம்…”
“சாரி டா. நீ இவ்ளோ என்ன நினைச்சிருப்பன்னு நான் நினைக்கல. ஏதோ என்ன சும்மா சைட் அடிக்கிறன்னு தான் நினைச்சேன்”
அவள் அவனை முறைத்தாள்.
“சரி சரி முறைக்காத. நல்ல வேளை. ஏதோ தோன்றி உன் பின்னால் வந்தேன். இல்லன்னா உன்ன மிஸ் பண்ணிருப்பேன்.”
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”
“அது எனக்கு தெரியல. ஆனால் உன்னோட இந்த டீப் லவ் பிடிச்சிருக்கு. நான் அத மிஸ் பண்ண விரும்பல.”
“ம்ம்ம்….”
மாலுக்கு சென்று சுற்றிவிட்டு அங்கேயே இரவும் சாப்பிட்டுவிட்டு அவளுடைய ரூமிற்க்கு பத்து மணிக்கும் மேல வந்து சேர்ந்தார்கள்.
இன்னும் கால் எதுவும் வந்திருக்கவில்லை.
இவளே இவள் அக்காவுக்கு போன் செய்தாள். அங்கு விடிந்ததும் ரகு அந்த வரன் சரி வராது என்று இருபக்கமும் கூறிவிட்டான். வித்யா சொல்லவைத்தாள்.
இங்கு அவள் அப்பாவிடம் சண்டை இட்டு வருணின் தந்தைக்கு அழைத்து சம்மதம் கூறவைத்து திருமணத்திற்கு நாளே குறித்துவிட்டாள்.
“அம்மு. இன்னும் எட்டு நாள் தான் முஹூர்த்தத்துக்கு. எதுவும் பேசி டைம் வேஸ்ட் பண்ண நேரம் இல்லை. நீ லீவ் போட்டு உடனே ஊரு வந்து சேரு.”
“அக்கா… மாப்பிள்ளை யாரு” பதறி போய் கேட்டாள்.
வித்யா கலகலவென சிரித்தாள்.
“ நேத்து நாம குடுத்த ஸ்க்ரூவ் நல்லாவே வேளை செஞ்சதுடி. வருண் தான் மாப்பிள்ளை. ரெண்டுபக்கமும் பேசிட்டாங்க. நீ விரும்புறேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்படி சும்மாவிடுவேன்.”
“ரொம்ப தேங்க்ஸ்க்கா”
“உன் தேங்க்ஸ் எல்லாம் வச்சு நான் என்ன பண்றது. அங்க இருந்து பெருசா ஏதாச்சும் வாங்கிட்டு வா”
“கண்டிப்பா வாங்கிட்டு வறோம்ங்க” இது வருண்.
“ஹே இது யாரு?”
“வருண் தான்க்கா. என்ன பார்க்க வந்திருக்காங்க”
“என்ன ரெண்டு பெரும் தனியாவை இருக்கீங்க?”
“அக்கா நான் அனிதா. நானும் என் ஹஸ்பண்டும் இங்க தான் இருக்கோம். கவலைப்பாடாதிங்க. இவங்க ரெண்டுபேரும் எந்த தப்பும் பண்ணாம நாங்க பாத்துக்குறோம்”
“ஓ. குட். நல்ல கேர்ஃபுல்லா பாத்துக்கோ. சரியா”
“கண்டிப்பக்கா.”
“சரி நான் வைக்கிறேன். எல்லாரும் கல்யாணத்துக்கு சீக்கிரம் வந்து சேருங்க”
வித்யா பேசி முடித்ததும் வருண் அனிதாவையும் கிளம்ப கூறினான்.
“அதெல்லாம் முடியாது. அக்கா எங்களை நம்பி உங்கள இங்க விட்ருக்காங்க. நான் போக மாட்டேன். நான் அவங்களுக்கு குடுத்த வாக்க காப்பாத்தணும்.”
சட்டமாக சம்மணங்கால் போட்டு சோபாவில் அமர்ந்தாள்.
வருண் இருவரையும் வெளியே தள்ளி
“ நீ வெளிய நின்னு குடுத்த வாக்க காப்பத்து. போ” என்று விரட்டிவிட்டான்.
கதைவடைத்து திரும்பினான்.
இங்கு அம்ருதா டென்ஷன் ஆனாள்.
“ஹல்லோ என்ன பண்றீங்க. நீங்களும் கிளம்புங்க. நாளைக்கு பேசிக்கலாம்.”
“நாம என்ன பேசணுமோ அத நாளைக்கு பேசிக்கலாம். இப்போ பேசவேணாம்.” என்று கூறி அருகில் வந்து நின்றான்.
“என்ன பண்றீங்க”
“இன்னும் ஒன்னும் பண்ணலையே”
அவளை சுவருடன் நிற்கவைத்து கைகளால் அணைகட்டி நின்றான்.
“வருண் கிளம்புங்க. என்ன இதெல்லாம்”
“ நாம மேரேஜ் பண்ணிக்க போறோம். அத செலிபிரேட் பண்ண வேண்டாமா”
“அதுக்கு?”
“நீ எனக்கு ஏதாச்சும் குடு. நானும் உனக்கு கொடுக்குறேன். அதுக்கு அப்புறம் நான் இங்க இருந்தா ஏன்டானு கேளு”
“ஏன்டா?” சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“ஹே உண்மையாவே டா போடுற. உன்ன என்ன பண்றேன் பாரு”
“நோ…நோ…
வருண் விடு…
வருண் நோ…
வரு…”
(சுபம்)
வருண் அவளை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன சிரிப்பு?”
“ரெண்டு பொம்பளைங்க சேர்ந்து ஒரு ஆம்பளைய என்ன பாடுபடுத்துறீங்க”
“இல்லன்னா நீங்க ஆம்பளைங்க ரொம்ப ஆடுவீங்கல்ல. அப்பப்போ உங்களுக்கு இப்படி ஏதாச்சும் ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்தாத்தான் ஒழுங்கா இருப்பிங்க”
“ஐ நோட்டெட் திஸ் பாய்ண்ட்”
“சரி நீங்க கிளம்புங்க. நைட் தான் என்ன முடிவுன்னு தெரியும்”
“நல்ல பதில் வரும்னு எதிர்பாக்குறியா”
“ஆமா. அக்கா சொன்னது வச்சு பார்த்தா அப்பாவுக்கு ஓகே தான் போல”
“சரி நீ கிளம்பு. எல்லாரும் வெளிய போலாம்.”
அவளும் ரூமில் தனியாக இருந்து என்ன செய்வாள். அவர்களுடன் கிளம்பினாள்.
அருகில் இருந்த மாலுக்கு சென்றனர். வழியில் அதே பாலம் வந்தது.
“நேத்து நீ இங்க அஞ்சு மணிநேரம் உக்காந்து இருந்த. என்ன யோசிச்சிட்டு இருந்த”
அவள் என்ன சொல்லுவாள். அடுத்து என்ன என்று தெரியாமல் திக்கு தெரியாமல் அமர்ந்து இருந்தாள். அவள் எதுவும் யோசிக்கவில்லையே. அவளுக்கு அதன் பிறகு வாழவே முடியுமா என்ற சந்தேகம் வந்தது. அதை எப்படி அவனிடம் சொல்வாள். கண்கள் கலங்கிவிட்டது அவன் கேள்வியில். இதோ வந்து நிற்கிறான். எனக்காகவே வந்துவிட்டான். எதோ கனவு போல இருக்கிறது. இனிமேல் அவனை விட்டுவிட அவளால் முடியாது.
“எதுவும் யோசிக்கலை. சும்மா தான் உக்காந்து இருந்தேன்”
“ம்ம்ம்…”
“சாரி டா. நீ இவ்ளோ என்ன நினைச்சிருப்பன்னு நான் நினைக்கல. ஏதோ என்ன சும்மா சைட் அடிக்கிறன்னு தான் நினைச்சேன்”
அவள் அவனை முறைத்தாள்.
“சரி சரி முறைக்காத. நல்ல வேளை. ஏதோ தோன்றி உன் பின்னால் வந்தேன். இல்லன்னா உன்ன மிஸ் பண்ணிருப்பேன்.”
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”
“அது எனக்கு தெரியல. ஆனால் உன்னோட இந்த டீப் லவ் பிடிச்சிருக்கு. நான் அத மிஸ் பண்ண விரும்பல.”
“ம்ம்ம்….”
மாலுக்கு சென்று சுற்றிவிட்டு அங்கேயே இரவும் சாப்பிட்டுவிட்டு அவளுடைய ரூமிற்க்கு பத்து மணிக்கும் மேல வந்து சேர்ந்தார்கள்.
இன்னும் கால் எதுவும் வந்திருக்கவில்லை.
இவளே இவள் அக்காவுக்கு போன் செய்தாள். அங்கு விடிந்ததும் ரகு அந்த வரன் சரி வராது என்று இருபக்கமும் கூறிவிட்டான். வித்யா சொல்லவைத்தாள்.
இங்கு அவள் அப்பாவிடம் சண்டை இட்டு வருணின் தந்தைக்கு அழைத்து சம்மதம் கூறவைத்து திருமணத்திற்கு நாளே குறித்துவிட்டாள்.
“அம்மு. இன்னும் எட்டு நாள் தான் முஹூர்த்தத்துக்கு. எதுவும் பேசி டைம் வேஸ்ட் பண்ண நேரம் இல்லை. நீ லீவ் போட்டு உடனே ஊரு வந்து சேரு.”
“அக்கா… மாப்பிள்ளை யாரு” பதறி போய் கேட்டாள்.
வித்யா கலகலவென சிரித்தாள்.
“ நேத்து நாம குடுத்த ஸ்க்ரூவ் நல்லாவே வேளை செஞ்சதுடி. வருண் தான் மாப்பிள்ளை. ரெண்டுபக்கமும் பேசிட்டாங்க. நீ விரும்புறேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்படி சும்மாவிடுவேன்.”
“ரொம்ப தேங்க்ஸ்க்கா”
“உன் தேங்க்ஸ் எல்லாம் வச்சு நான் என்ன பண்றது. அங்க இருந்து பெருசா ஏதாச்சும் வாங்கிட்டு வா”
“கண்டிப்பா வாங்கிட்டு வறோம்ங்க” இது வருண்.
“ஹே இது யாரு?”
“வருண் தான்க்கா. என்ன பார்க்க வந்திருக்காங்க”
“என்ன ரெண்டு பெரும் தனியாவை இருக்கீங்க?”
“அக்கா நான் அனிதா. நானும் என் ஹஸ்பண்டும் இங்க தான் இருக்கோம். கவலைப்பாடாதிங்க. இவங்க ரெண்டுபேரும் எந்த தப்பும் பண்ணாம நாங்க பாத்துக்குறோம்”
“ஓ. குட். நல்ல கேர்ஃபுல்லா பாத்துக்கோ. சரியா”
“கண்டிப்பக்கா.”
“சரி நான் வைக்கிறேன். எல்லாரும் கல்யாணத்துக்கு சீக்கிரம் வந்து சேருங்க”
வித்யா பேசி முடித்ததும் வருண் அனிதாவையும் கிளம்ப கூறினான்.
“அதெல்லாம் முடியாது. அக்கா எங்களை நம்பி உங்கள இங்க விட்ருக்காங்க. நான் போக மாட்டேன். நான் அவங்களுக்கு குடுத்த வாக்க காப்பாத்தணும்.”
சட்டமாக சம்மணங்கால் போட்டு சோபாவில் அமர்ந்தாள்.
வருண் இருவரையும் வெளியே தள்ளி
“ நீ வெளிய நின்னு குடுத்த வாக்க காப்பத்து. போ” என்று விரட்டிவிட்டான்.
கதைவடைத்து திரும்பினான்.
இங்கு அம்ருதா டென்ஷன் ஆனாள்.
“ஹல்லோ என்ன பண்றீங்க. நீங்களும் கிளம்புங்க. நாளைக்கு பேசிக்கலாம்.”
“நாம என்ன பேசணுமோ அத நாளைக்கு பேசிக்கலாம். இப்போ பேசவேணாம்.” என்று கூறி அருகில் வந்து நின்றான்.
“என்ன பண்றீங்க”
“இன்னும் ஒன்னும் பண்ணலையே”
அவளை சுவருடன் நிற்கவைத்து கைகளால் அணைகட்டி நின்றான்.
“வருண் கிளம்புங்க. என்ன இதெல்லாம்”
“ நாம மேரேஜ் பண்ணிக்க போறோம். அத செலிபிரேட் பண்ண வேண்டாமா”
“அதுக்கு?”
“நீ எனக்கு ஏதாச்சும் குடு. நானும் உனக்கு கொடுக்குறேன். அதுக்கு அப்புறம் நான் இங்க இருந்தா ஏன்டானு கேளு”
“ஏன்டா?” சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“ஹே உண்மையாவே டா போடுற. உன்ன என்ன பண்றேன் பாரு”
“நோ…நோ…
வருண் விடு…
வருண் நோ…
வரு…”
(சுபம்)