ஏன் பிறந்தேன்?

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"சாதி என்னும் சாக்கடை ஊறித்திலைத்திடும்
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"சகோதிரியினை கூட சீரழித்திடும்
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"கல்வியை காசுக்காக விற்கும்
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"இரவில் வீதியில் நடக்கக்கூட
நடுக்கம் பிறக்கும்
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"காசிற்காக கார்பரேட் நிறுவனத்திடம்
காவிரி ஆற்றைக்கூட விற்கும்
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"உரிமைக்கு குரல் கொடுக்கும் போது
கூட்டத்தோடு சுட்டுத்தள்ளும்
காட்டுமிராண்டி கூட்டம் நிறைந்த
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"பணத்திற்காக மனதை மதிக்காமல் இருக்கும்
மானங்கெட்ட மனிதர்கள் வாழும்
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"கண் எதிரெ நடக்கும்
கொடுமைகளுக்கு கூட குரல் கொடுக்காத
சமூகத்தில் ஏன் பிறந்தேன்?"


"ஏன் பிறந்தேன்?"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top