என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"துள்ளி திரிந்த பள்ளி பருவங்கள்
தூர தேசத்து நிலவாய் ஆன போது
என் கண்ணின் ஓரம் சிறுதுளி"


"கண்களில் மின்னிடும் கனவு அது
காற்றில் பறந்த குப்பை கூளமாய் மாறிய போது
என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி"


"காயப்படுத்தும் வார்த்தைகள் அதை
நான் நெஞ்சில் சுமப்பவர்கள்
நேரடியாக என்னிடம் கூறிய போது
என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி"


"உண்மையாய் அன்பு வைத்த உறவுகள் கூட
உதறி விட்டு சென்ற போது
என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி"


"விழிக்க முடியாத உறக்கத்திற்க்கு
என் விருப்பத்துகுரிவர்கள் சென்றதை நினைத்திடும் போது
என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி"


"சிதைந்து போன சிந்தனைகள்
பறந்து போன பல கனவுகள்
உடைந்து போன உறவுகள்
நெஞ்சை உலுக்கிய உண்மை சம்பவங்கள்
கரைந்து போன கடந்த காலங்கள்
எல்லாம் என் நினைவில் வருகையில்
என் நெஞ்சின் ஓரம் சிறு வலி
அதன் காரணமாய்
என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி"


"காத்திருக்கிறேன் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தோடு"

"வலி நிறைந்த உள்ளம் அதில்
வசந்தம் வீசும் நாள் வரும்"


"உதறி சென்ற உறவுகள் கூட
உரிமை கொண்டாடி என் அருகில் வரும்"


"அந்நாளிற்க்காக காத்துருக்கிறேன்
அன்றும் என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி வரும்
என் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top