என்னை சிரிப்பால் சிதைத்தவளே 5

Advertisement

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 5

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
சகுந்தலா வேலைக்காரர்களிடம் திரும்பி நீங்களும் போய் உங்க வேலைய பாருங்க என்று கூறிவிட்டு அஸ்வந்த்தின் புறம் திரும்பி "come with me aswanth" என்று கூறி தன்னுடைய ரூமை நோக்கி முன்னே நடந்தார்.

தான் வெளியே போக சொன்ன வேலைக்காரர்களை சகுந்தலா வீட்டுக்குள் போக சொல்லவும், அவரை எதிர்த்து பேச வந்த அஸ்வினை. "Come with me" என்ற சகுந்தலாவின் அதிகாரமான வார்த்தை, அஸ்வந்த்தின் வாயை மூடி அவரின் பின்னால் செல்ல வைத்தது.

அஸ்வந்த் ரூமினுள் நுழைந்தவுடன் கதவினை அடைத்த சகுந்தலா அவன் புறம் திரும்பி “what habit is this aswanth? I already told you to change this character… Why did you show your angry on others?...It’s not fair.” என்று அஸ்வந்த்திடம் அவன் அறையினுள் நுழைந்ததில் இருந்து சரமாரியாக கேள்விகளை அடுக்கி கொண்டிருந்தார்.

தன்னுடைய பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த அஸ்வந்த், இரண்டு காதுகளையும் பொத்தி கொண்டு "Please stop it grandma” என்று கத்தினான்.

அவனுடைய கத்தலில் சகுந்தலா அமைதியானார்.

சகுந்தலாவின் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்து கொண்ட அஸ்வந்த், தன் பக்கத்து நியாயங்களை எடுத்து கூற ஆரம்பித்தான்.

காலேஜில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவன், கடைசியில் “hereafter I’m not going to the college. It’s seriously irritating grandma. I’m going to stop” என்று கூறினான்.

அஸ்வந்த் இனி காலேஜ் போகவில்லை என்று கூறியது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்த சகுந்தலா....

“It is not a correct decision aswanth. I won’t allow you to stop the college”

“No grandma, this is final. You please not to involve this matter”.

சகுந்தலா அவனிடம் எவ்வளவோ கூறி பார்த்தும் அஸ்வந்த் அவனுடைய முடிவிலிருந்து இறங்கி வருவதாக தெரியவில்லை.

அவனை எப்படியாவது காலேஜ் போக சம்மதிக்க வைக்க வேண்டும் என்று வித விதமாக பேசி சமாதான படுத்த முயற்சித்து கொண்டிருந்தவர்.... அஸ்வந்த் கூறிய வார்த்தையில் அதன் பிறகு ஒரு வார்த்தைகூட அவனிடம் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார். ஏன் அதன் பிறகு அவன் முகத்தினை கூட திரும்பி பார்க்கவில்லை.

அவன் கூறியது இதுதான், “This is my life. I know what to do” என்று அவனையும் மீறி அவன் வாயினில் இருந்து வார்த்தை வெளியில் வந்து விழுந்தது.

அவனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று சுத்தமாக எதிர் பார்க்கவில்லை சகுந்தலா.

அவரால் அவன் கூறியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் அஸ்வந்த்திற்கு முன்னாள் நிற்பது நெருப்பிற்கு மேல் நிற்பதை போல் தகிக்க ஆரம்பித்தது.

அதனால் அவன் கூறிய அடுத்த நிமிடம் அறையினை விட்டு வெளியேறி விட்டார்.

அஸ்வந்த்திற்கு சகுந்தலா அறையை விட்டு போனவுடன் தான், கடைசியாக என்ன கூறினோம் என்பதே அவனுக்கு புலப்பட்டது.

அதனை அறிந்தவுடன் “shit” என்று தலையில் பலமாக அடித்து கொண்டு அவரை நோக்கி ஓடினான்.

அங்கு அவன் கண்ட காட்சி, அவனை நின்ற இடத்திலே உறைய வைத்தது.

அங்கு சகுந்தலா வெட்ட வெளியையே வெறித்து கொண்டிருந்தார், அவருடைய நிலை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னாள் இருந்ததை போல் இருந்தது.
சிறிது நேரத்தில் சுற்று புறம் உணர்ந்த அஸ்வந்த் சகுந்தலாவின் முன்னாள் வந்து நின்று, “sorry Grandma…. Please forgive me….that word is mistakenly came out” என்று தன் பாட்டிற்கு அவரிடம் கூறி கொண்டிருந்தான்.

ஆனால் என்ன புண்ணியம்… அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவர் காதிற்கு சென்றால் தானே. அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் அவரை லேசாக அசைத்து பார்த்தான். அப்பொழுதும் அவரிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாததால் அவனுக்கு பயம் பிடித்து கொண்டது.

ஒருவேளை முன்னைப்போல் எதுவும் ஆகிவிட்டதோ என்று பலவாறு எண்ணி அவன் மனம் பதற்றம் கொள்ள ஆரம்பித்தது.

அவன் அவரை அழைத்து கொண்டே பலமாக உலுக்கினான். பத்து நிமிடம் அஸ்வந்த்தினை தவிக்க விட்ட சகுந்தலா, “என்னடா கண்ணா” என்று ஆழ்ந்த உறக்கத்தினுள் இருந்து விழித்தவரை போல் அவனை கேட்டார். சகுந்தலாவின் குரலை கேட்டவுடன் தான் அவனுக்கு உயிரே வந்தது.

அஸ்வந்த் சகுந்தலாவை "Grandma" என்று இருக்க கட்டி கொண்டான்.

அவருக்கு ஏன் அஸ்வந்த் இப்படி பிஹேவ் பண்ணுகிறான் என்று புரியவில்லை. இருந்தாலும் அவர் அவனை தட்டிக்கொடுத்து கொண்டே தன்னிடம் இருந்து விளக்கினார்.

ஆனால் மிகுந்த பயத்தில் இருந்த அஸ்வந்த்திற்கு அவரை விட மனசில்லை.

அவன் இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டான், எங்கே அவரை விட்டால் தன்னை விட்டு சென்றுவிடுவாரோ என்பதை போல் இருந்தது அவனுடைய செயல்.

சகுந்தலா சிரித்து கொண்டே “Enough enough” என்று கூறி அவனை தன்னிடம் இருந்து பிரித்து, “I’m worried about your wife aswanth…. ஹப்பா….what a strong hug…who is going to be that lucky girl?” என்று சிரித்தார்.

“Oh grandma…. Don’t tease me” என்று சிரித்தான்.

சகுந்தலா மாலையிலிருந்து நடந்த அனைத்து விஷயங்களையும் மறந்திருந்தார்.

டாக்டர் அஸ்வந்த்திடம் கூறியதும் இதுதான், அவரால் ஏற்று கொள்ள முடியாத விஷயங்களை அவர் கேட்கவோ பார்க்கவோ நேர்ந்தால் அவர் விரக்திநிலையை அடைந்து அனைத்தையும் மறந்து விடுவார், சிலசமயம் அவர் கோமா ஸ்டேஜ் போகவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அவர் மறந்து போனதை ஞாபக படுத்த முயற்சித்தால் உயிர் கூட போகலாம் என்றும் கூறியிருந்தார்...
அதனால் தான் அவன் அத்தனை பயந்தது. அவன் கிராண்ட்மா நன்றாக பேசவும் தான் அவனுக்கு உயிரே வந்தது.

அவனுடைய சிந்தனையை கலைத்தது சகுந்தலாவின் குரல், “what deep thinking is going on your mind? Come lets have our dinner” என்று அழைத்து சென்றார்.

இவர்கள் இருவரையும் பார்த்த வேலைக்காரர்களுக்கு, "அப்பாடா ஒருவழியா அம்மா ….அய்யாவை சரிபண்ணிட்டாங்க" என்று நிம்மதி மூச்சுவிட்டனர்.

ஆனால் அவர்களுக்கு தெரியாதே உள்ளே என்ன நடந்தது என்று?

அவர்கள் இருவரும் சிரித்து கொண்டே உணவை உண்டு முடித்தனர்.

மறுநாள் எப்பொழுதும் போலவே விடிந்தது.

காலையில் அஸ்வந்த் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தான். அவனுடைய மனதில் குற்றவுணர்ச்சி எழுந்திருந்தது, தன்னால் தான் கிராண்ட்மாவிற்கு இப்படி ஆகிவிட்டது என்று. அதனால் அவன் புடிக்காத கல்லூரிக்கும் செல்ல தயாராக இருந்தான் அவனுடைய கிராண்ட்மாவிற்காக.

அஸ்வந்த் பேருந்தில் இருந்து இறங்கினான். நேற்று அஸ்வந்த்தினை பார்த்த பெண்கள் இன்றும் அவனை காண்பதற்காக நேற்று நின்று கொண்டிருந்த அதே இடத்தில் நின்றிருந்தனர்.

அஸ்வந்த்திற்கு கோபத்தை கட்டு படுத்தவே முடியவில்லை. அதுவும் அவன் மனதில் இவர்களால் தான் நேற்று சகுந்தலாவிடம் அப்படி பேச நேர்ந்தது.

அதனால் அஸ்வந்த் நேற்றை போல் இன்று தலையை குனிந்து கொண்டு செல்ல வில்லை.

நேராக அவர்களிடம் சென்று "Don’t you see any guys before" என்று கேட்டான். அந்த வார்த்தையினை கேட்ட பிறகு அவர்கள் அங்கு நிற்பார்களா என்ன.... அவனை முறைத்து கொண்டே சென்றனர்.

காலேஜ் சேர்ந்து ஆறு மாதம் ஓடி விட்டது….

இந்த ஆறு மாதத்தில் சுவேதா, வைதேகியிடம் அஸ்வந்த்தினை காண்பிக்க எத்தனையோ முறை முயன்று விட்டாள். ஆனால் வைதேகியின் கண்ணில் தான் அஸ்வந்த் சிக்குவானா என்று விதியும் அவர்களின் சந்திப்பை தள்ளி போட்டு கொண்டே சென்றது.

சுவேதா அஸ்வந்த்தை, “handsome guy ல் இருந்து உன் ஆளு” என்று மாற்றி இருந்தாள். வைதேகியிடம் பேசி பேசி அவளும் கொஞ்சம் தமிழை கற்றிருந்தாள்.
அஸ்வந்த்தோ பெண்கள் மத்தியில் "திமிர் பிடித்தவன், தலைகனம் உள்ளவன், பணக்கார திமிர், தான் அழகென்ற திமிர்" என்ற வித விதமாக பெயர் வாங்கியிருந்தான்.

இந்த ஆறு மாதத்தில் எத்தனையோ பெண்கள் அவனிடம் லவ் லெட்டர் கொடுத்தனர். அவன் அதனை பிரித்து கூட பார்க்கவில்லை. அந்த லவ் லெட்டரை வாங்கின இடத்திலே சுக்கு நூறாக கிழித்து போட்டான்.
இப்படியே ஆறு மாதம் கடந்து விட்டது.

அன்று வைதேகிக்கு பிறந்தநாள். காலையில் எழுந்தவுடன் தன் அன்னை, தம்பியுடைய வாழ்த்துதலை பெற்று, ஒரு வாரத்திற்கு முன்பு சுவேதாவும், வைதேகியும் டீநகரில் அலைந்து திரிந்து வாங்கிய சல்வாரினை போட்டு கொண்டு காலேஜிற்கு கிளம்பினாள்.

லைட் ரோஸ் கலரில் இருந்த சல்வார் அவளுடைய நிறத்திற்கு மிகவும் பாந்தமாக இருந்தது. அவள் தன் முதுகுவரை நீண்டிருந்த அடர்த்தியான கூந்தலை மேலே கொஞ்சம் முடியெடுத்து தன் சல்வாரின் கலரிலேயே கிளிப் அணிந்திருந்தாள். மீதம் இருந்த முடியை விரித்து விட்டிருந்தாள். அந்த விரிந்த கூந்தலில் நேற்று மாலை சுவேதா வெளியில் சென்று வாங்கி கொடுத்திருந்த மல்லிகை பூ அலங்கரித்திருந்தது.

அவள் அழகு ஓவியமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது சாலையின் ஓரமாக நட்டு வைத்திருந்த காகித பூ மரத்திலிருந்து காற்றடித்ததால் பூ மழையை போல் அவள் மேல் கொட்டியது.

வைதேகி நடந்து வருவதை பார்த்து கொண்டே அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த சுவேதா, வைதேகியின் மேல் பூ கொட்டவும் சிரித்து விட்டாள்.
அவளையே பார்த்து நடந்து வந்த வைதேகியும் சிரித்து விட்டாள்.

அப்பொழுது அங்கே பேருந்தில் இருந்து இறங்கி தன் நண்பர்களுடன் இணைந்து நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வந்த்தின் கண்களில், வைதேகியின் மேல் பூ விழுந்ததும், அதன் பிறகு அவள் சிரித்ததும் பட்டது.

அவன் தன்னை மறந்து அதே இடத்தில் நின்றுவிட்டான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top