எந்தன் சரி பாதியே....
அபிராமி
ஆதன் நிவாஸ் உதவி ஆணையர்
தனியாக வாழும் நேர்மையான போலீஸ் அதிகாரி.
சாத்விகா தன் நண்பர்களுடன்
துப்பறியும் நிறுவனம் வைத்து தனியாக வாழும் தைரியமான ராக்கி....
விபத்தில் இறந்து போன
இளைஞர் செய்தில் ஆரம்பம் ஆகிறது கதை.....
உதவி கேட்டு ஒரு பெண் வர
உதவி செய்து விட்டு வரும் ஆதன்
காலையில் செய்தியில் தான் உதவிய பெண் தற்கொலை....
தற்கொலை அல்ல கொலை என கண்டுபிடிக்க......
யார் செய்தார்கள்
எதற்காக செய்தார்கள்
எப்படி செய்தார்கள்.....
கொலையின் பின்னணியை
கண்டு பிடிக்க தொடங்க ....
உதவிக்கு சாத்விகா
உதவியை நாடி செல்ல....
உதவி நட்பாக மாறி பின்
காதலாகி கைப்பிடிக்க.....
முதல் பார்வையில்
முட்டிக் கொள்ளும் நாயகன் நாயகி......
புரிதலில் நட்பு
நம்பிக்கையில் காதல்....
காதலில் கண்ணியம்.....
காதலுக்காக கொலை
கடத்தல் கும்பல் நடுவில்
தைரியமாக செல்லும் சாத்வீ சூப்பர்.....
ஆதன் நண்பன் எட்வின்....
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பன் எதிரியாக எதிர்த்து நிற்க....
எதற்கு எதிரியாக மாற வேண்டும்????
எட்வின் எட்டாப்பவின் திட்டம் தான் என்ன?????
அனைத்து கேள்விகளுக்கும்
அடுத்தடுத்து வரும்
அத்தியாத்தில் வரும் பதில்கள்
விறுவிறுப்பாக சென்றது.....
அருமை.....
வாழ்த்துக்கள் சகி