உன் கண்ணில் என் விம்பம் teaser 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:p:ROFLMAO::ROFLMAO:(y):eek:
யார் இந்த ஐடியா மணி
சத்தியமா இப்படி ஒரு முதலிரவு
யாருக்கும் நடந்து இருக்காது
:LOL::LOL::LOL::LOL:
 

sana

Active Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser:geek:

View attachment 4203


என்னங்கடா இது இத்துனூண்டு மஞ்சக்கயிறு அத கட்டிட்டதும் மரியாதை என்ன, அம்மாவே பொண்ண கூட்டிக்கொடுக்குது" கேவலமாக நினைத்தவாறு அறையினுள் நுழைந்து தாப்பாள் இட்டான்.





சத்தமாக விசிலடிக்கவும் முடியாமல் அவனின் சந்தோசத்தை கொண்டாட வழி தெரியாமல் அறையை அளவிட



"டேய் ரிஷி அலங்காரம் தூள் தான் இப்படியொரு சிட்டுவேஷன்ல எந்த பொண்ணையையுமே தொட்டு இருக்க மாட்டல்ல. என்ஜோய் டா" தன்னுடைய தோள்களையே தட்டிக்கொண்டவன் யாழிசை அமர்ந்திருப்பது தெரிய அவளை நெருங்கினான்.





உள்ளத்தால் நேசித்திருந்தால் அவள் சோர்வை உணர்ந்திருப்பானோ! உடல் தேவையை தீர்த்துக் கொள்ள தவிப்பவனுக்கு அவள் தூங்குவது எரிச்சலை தர





"ரெண்டு வருஷம் பாடாய் படுத்தி தேடி வந்தவனை அடிச்சி போட்டு, ஆசையா நெருங்க பாத்தா தூங்கிட்டியா? இதுக்கெல்லாம் அசர முடியாதுடி" என்றவன் அவள் கால்களை தூக்கி கட்டிலில் வைத்து மறுபுறமாக வந்து அவள் புறம் சாய்ந்தவன் அவளை முத்தமிட முயல இடது கையை அவன் மேல் போட அவள் கைகளில் இருந்த வளையல்கள் அவன் கன்னத்தை பதம் பார்த்தன.



View attachment 4202



"ஆ." என்று கத்தியவன், வாயை பொத்தி அவளை முறைத்தவாறே கன்னத்தை தடவிக் கொள்ள அவளோ அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ள சுர்ரென்று கோபம் தலைக்கு ஏற அவளை எழுப்பும் முயற்சியில் இறங்கினான்.





அவளின் தோளை பிடித்து உலுக்க "இயல் தூங்க விடு டி" என்று அவன் கையில் ஒரு அடி கொடுத்தவள் தூக்கத்தை தொடர பல்லைக் கடித்தான் ரிஷி.





"இவ பேரென்னா" என்று யோசித்தவன் "யாழ் யாழ்" என்று காதின் அருகில் மெதுவாக சொல்ல அது அவளுக்கு தாலாட்டாக இருந்தது போலும் அசையவே இல்லை.





சத்தம் போட்டு பேசவே முடியாது. வீடு முழுக்க எதிரொலிக்கும். "சே பேசாம என் வீட்டுல பஸ்ட் நைட்க்குக்கான ஏற்பாடா செய்ய சொல்லி இருக்கணும். சடங்கு, சாத்திர சம்பிரதாயம்னு உசுர வாங்குதுங்க" என்ன செய்வதென்று தவித்தவன் அறையினுள் நடை போட "தண்ணீர் தெளிச்சா எந்திரிப்பா" என்று யோசனை தோன்ற மேசையில் இருந்த தண்ணீர் கூஜாவும். கிளாசும் கண்ணில் பட கிளாசில் நீரை ஊற்றியவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அதை அருந்தலானான்.





அந்தோ பரிதாபம். யாழிசைக்கு அவளின் உறவில் இருந்த இளசுகள் செய்து வைத்திருந்த சேட்டையில் சிக்கினான் ரிஷி.





அவர்களின் திட்டமோ யாழிசை அவதியுறும் போது ரிஷி முத்தமிடட்டும் என்று குடைமிளகாயை கிளாஸின் வாயில் உள்புறமும் வெளிப்புறமும் தேய்த்து வைத்திருக்க அதில் நீரை அருந்தியவன் எரிச்சலில் துடிக்கலானான்.



உருளை வடிவம் கொண்ட அந்த கிளாஸின் வட்டம் மிக குறுகியதாக இருக்க, வாயை வைத்தால் மூக்கும் உள்ளே சென்று முட்டும் அளவில் இருந்த படியால் ரிஷி சுவாசிக்கும் போது காரம் மூக்கின் வழியாகவும் சென்று கண்களும் எரிய ஆரம்பித்தது.



வெண்ணையும், பாலும் மட்டும் சாப்பிட்டு வளர்ந்தானோ! காரம் கண்ணை எட்ட கண்கள் சிவந்து, உதடுகளும் சிவந்து, தொண்டையெறிய செய்வதறியாது அல்லாடியவன் கூஜாவில் உள்ள நீரை அருந்தவும் பயந்தான்.





வாழ்க்கையில் இப்படியொரு அனுபவத்தை அவன் அடைந்திருக்கவே மாட்டான் போலும், யாழிசை அருகில் இருந்தும் அவளை தொட முடியாமல் கோபம், எரிச்சல் என்று எல்லா உணர்வுகளும் தாக்க, கத்த கூட முடியாமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும் யாழிசையை வெறித்தவன், தலையை இரு கைகளிலாலும் தாங்கிப் பிடித்து அமர்ந்து விட்டான்.
Nice.give ud to us .waiting for you.have a nice time.my country sl is very beautiful.thanks for expressing the beauty of the mother land.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top