உன் கண்ணில் என் விம்பம் teaser 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ 3 வது அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser. ud Sunday தரேன்.


images (49).jpg




"சே இவளுக்காக வந்ததே! பெருசு இதுல தண்டத்துக்கு வீடு வேற வாங்க வேண்டியதா போச்சு!"



“கைல காசு இருக்குறத கண்டா தான் திரும்பியே பாப்பா டா" அவன் மனம் அவளை தப்பாக எடை போட



"அப்போ போகும் போது வீட்டை அவளுக்கே கொடுத்துட்டு வேண்டியதுதான்" உதட்டோரம் கேலிப் புன்னகை மலர




யாழிசை முந்தியில் வீட்டு சாவிக்கொத்தை முடிந்து வைத்துக்கொண்டு அதை சுழற்றியவாறு வளம்வருவது கண்ணில் தெரிய "யப்பா….. மகாராணி லுக்குத்தான் போ. அன்னக்காவடிக்கு வந்த வாழ்வ பாரேன்" மனக்கண் முன் தோன்றிய காட்ச்சியை பற்றி இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டவன், உண்மையிலேயே! மகாராணியாக அவனை ஆளவேண்டியவள் அவள்தான் என்பதை அறியவுமில்லை. ரிஷி உணரவுமில்லை.

images (34).jpg

கோவிலின் உள்ளே சென்று விளக்கேற்றி, இறைவனை வணங்கியவள் வேண்டிக்கொண்டது, தனது குடும்பத்தின் நிம்மதி, மற்றும் சந்தோசம் என்றும் நிலைக்க வேண்டும் என்பதே!



கணவன் என்ற பெயரில் கயவன் ஒருவனிடம் அவள் படப்போகும் அவஸ்தைகளை எண்ணி "உனக்காகவும் கொஞ்சம் பிராத்தனை செய்திருக்கவேண்டாமா?" என்று அங்கே வீற்றிருந்த அம்மன் அவளை இரக்கமாக பார்க்க, உள்ளே நுழைந்தான் ரிஷி.

அவனின் கண்கள் யாழிசையை தேடி கண்டு பிடிக்க சீதா, மற்றும் மங்கம்மாவோடு பேசிக் கொண்டிருந்த குருக்களின் அருகில் நின்று கொண்டிருந்தாள் யாழிசை. அவளை பார்த்தவாறே ரிஷி வர அவளோ கையிலுள்ள செப்பு அர்ச்சனை தட்டை பாத்திருந்தாள்.



அதைக் கண்டு அவள் அடித்த அடியும், வலியும் நியாபகம் வரவே! கை தானகாவே நெற்றியை வருட அவளை கொலைவெறியோடு முறைக்கலானான் ரிஷி.

அன்று அவளிடம் தப்பாக நடந்து கொண்டவனின் குரல் பயத்தால் யாழிசையின் மனதில் பதியவே இல்லை. நியாபகத்தில் இருந்திருந்தால் ரிஷியை இன்றே கண்டு கொண்டிருப்பாள். அவள் அவனிடம் சிக்குண்டு சின்னா பின்னமாக வேண்டும் என்பது அவளின் விதி என்றிருக்க யாரால் அதை தடுக்க முடியும்

ENJOY:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top