Divya is pair for pradeepan.May I correctஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்தின் டீஸர்.
ரிஷியை தூக்கிடுங்கனு கெஞ்சிட்டு, செத்துட்டான்னு சொன்னதும், மிரட்டலா விடுறீங்க, நா சொல்லலப்பா அவன் நண்பனே சொல்லுறான் கேளுங்க.
இந்த epi கு வேற டீஸர் தான் போடணும் னு இருந்தேன். உங்க மிரட்டலால் இத போடுறேன்.
View attachment 4450
ப்ரதீபனின் முகத்தில் கலவையான உணர்ச்சிகள் வந்து போக கயல்விழியின் முகம் இருண்டு வெளுத்துப் போனது. ஸ்ரீராம் அன்னையை கண்டு ப்ரதீபனின் கைகளில் இருந்து இறங்கி ஓட பிரதீபன் உள்ளே சென்றான். அவன் பின்னால் வந்த திவ்யா சுந்தரிப்பாட்டியை அழைக்கவென உள்ளே செல்ல ஸ்ரீராம் அன்னையிடம் வந்து கார் கல்லில் மோதிய கதையை சொல்ல ஆரம்பிக்க அவனை தூக்கிக் கொண்ட கயல்விழி ப்ரதீபனை உக்காருமாறு சொல்ல வாயை திறக்க முன் அவள் அருகில் நின்றிருந்தான் பிரதீபன்.
"என்ன கயல் எப்படி இருக்க? ஏன் என் கிட்ட கூட சொல்லாம இப்படி தனியா இங்க வந்து இருக்க? யாரிவங்க? நம்ம சொந்தமில்லையே! பையன் பொறந்திருக்கான். தகவல் சொல்லணும் எங்குற எண்ணம் கூட இல்லாம இப்படி தனியா வந்து கஷ்டப்படணுமா?" அவளின் வெகு அருகில் நின்று ஸ்ரீராமின் தலையை தடவியவாறே! கனிவான குரலில் அவன் கேள்விகளை அடுக்க, கயல்விழி என்ன பதில் சொல்வதென்று முழிக்கலானாள்.
பிரதீபன் என்னமோ அவளோடு நீண்ட காலமாக நல்ல உறவில் இருந்தவன் போல் பேச தான் காண்பது கனவோ என்று கல்விழி அவனின் முகத்தையே பாத்திருக்க
"என்ன கயல் என்ன யோசிக்கிற?"
"அவர்... அவங்க.... எப்படி இருக்கிறாரு?" தயங்கி தயங்கி ப்ரதீபனின் முகத்தை பார்த்தவாறே கேட்டுவிட
அவள் ரிஷியை பற்றித்தான் கேக்கின்றாள் என்று புரிந்துக் கொண்டவன் முகம் இறுக "ரிஷி இல்ல.... கயல் செத்துட்டான்" பிரதீபன் அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தவாறே சொல்ல
View attachment 4451
அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு சில கணங்கள் பிடிக்க, மலங்க மலங்க விழித்தவள்
"பொய் தானே சொல்லுறீங்க?" கண்களில் நீரை நிறைத்து தொண்டை கமர உதடு கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவாறே மீண்டும் கேக்க
அவளையே அன்பொழுக பாத்திருந்தவன் பதில் சொல்லாது மௌனம் காக்க
அவன் பார்வையில் இருந்த அர்த்தம் கண்டு கயல்விழியின் இதயம் நின்று துடித்தது. கயல்விழியால் நம்பவே! முடியவில்லை. செத்துட்டானா? உண்மையிலயே! செத்துட்டானா? கால்கள் பலமிழக்க தரையில் சரிந்தாள் கயல்விழி. அவளோடு சேர்ந்து ஸ்ரீராமும் விழ குழந்தையை தாங்கிப் பிடித்திருந்தான் பிரதீபன்.
கயல்விழி காணாமல் போய் விட்டாள் என்றதிலிருந்து அவளை ரிஷியுடன் தேடியவன் தான். ரிஷி இறந்து விட்ட செய்தி வந்த பின் அவனின் காரியங்களோடு ப்ரதீபனின் பலமும் வடிந்து விட்டது. ஏனோ தானோ என்று இருந்தவன் கயல்விழியை தேடுவதை நிறுத்தவில்லை.
இலங்கைக்கும் அவள் செல்லவில்லை. அவளுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதா? அல்லது பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஏதாவதொரு கும்பலிடம் மாட்டிக் கொண்டாளா? இறந்து விட்டாளா? இந்த நொடி வரை எல்லா கோணங்களிலும் விசாரிக்க சம்பாதித்த அனைத்தையும் கரைத்துக் கொண்டு தான் இருந்தான்.
அவளுடைய ஒரு புகைப்படமாவது இல்லாத நிலையில் அவளை தேடுவதும் கடினமாக இருக்க, இலங்கையில் அவளது புகைப்படம் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால் வெள்ளத்தில் இருந்த புகைப்படங்களும் அழிந்திருந்தன. ஆகா மொத்தத்தில் கயல்விழியை தேடித் கண்டு பிடிப்பது ப்ரதீபனுக்கு குதிரைக்கு கொம்பாகவே இருந்தது.
எல்லாவற்றுக்கும் நேரம் காலம் கூடி வரவேண்டும் என்பதை போல் தேயிலை தோட்டத்தை பார்வையிட வந்த இடத்தில் கயல்விழியை கண்டெடுத்தான். அவளிடம் உண்மையை மறைக்க இயலாது, மறைத்து எந்த பிரயோஜனமும் இல்லை. வந்தது வரட்டும் என்று தான் அவன் அறிந்த உண்மையை கூறினான்.
ரிஷிக்காக அவள் அழுது கரைவாள் என்று தான் அவன் எதிர் பார்க்கவில்லை. அவளை தேற்றுவது எப்படி என்று அவன் யோசிக்க,
"கயல் கயல்" என்று கயல்விழியை தேடியவாறே முன் அறையில் இருந்து திலகா வர, திலகாவை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தான் பிரதீபன்.
அடி கா....ண்போர்ம்னு தெரியுது mila..... escape