அருமையான பதிவு மிலா
.சங்கரன் தன் நண்பன் மகள் மருமகளாக வர வேண்டும் என்று அதீக்கு,விழியை திருமணம் செய்வதாக சொல்லிட்டார்.தொழிலில் தன் முடிவை ஏற்றுக்கொள்ளும்
அதீ,வாழ்க்கையிலும் அவர் பேச்சை தட்ட மாட்டான் என தானே முடிவு செய்து விட்டார்
.
விழி,அர்ஜூனுடன் பழகுவதை பார்த்த வாகைக்கு,அதீ,விழியின் திருமணத்தில் விருப்பம் இல்லை
.அர்ஜூன் திடீர் திருமணத்துக்கு பின் மாலினியை பார்த்துக் கொண்டிருப்பதையும்,விழியை சமாதானம் செய்யாததை கண்ட மங்கைக்கு,அவன் விழியை விரும்பினானா என சந்தேகம்
.
செந்திலுக்கு விழியின் திருமணம் அதீயுடன் என்றதில் இரட்டிப்பு சந்தோஷம்,மகள் மனதை பற்றி
கவலை படவில்லை
.விழிக்கு,அர்ஜூன் வேண்டும்,இனி என்ன நடக்கப் போகுதோ
.
கோதண்டத்தின் பயத்தையும்,அரசியலுக்காக எதையும் செய்வார்கள், கனகவேலினால் அர்ஜூன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சங்கரன் புரிந்து கொண்டார்
.ஜோசியர் சி.எம் நெனச்சது நடக்கும்னு சொன்னது,பி.எம் ஆக வேண்டும் என்ற ஆசையா
.
மாலினி என் மனைவி ஆகிட்டா எனக்கு தெரியாம என்ன ரகசியம் என அர்ஜூன் நினைப்பது
,பூக்காரனுக்கு போன் செய்வதை போல நடித்து மாலினியை வம்பிழுப்பது
,அனி இவன் செய்வதை அம்மாவிடம் போட்டுக் கொடுக்க முழிப்பது என கலகலப்புக்கு குறைவில்லை
தாலின்னா என்னன்னு தெரியாம போட்டவன்,பர்ஸ்ட் நைட் பத்தியெல்லாம் யோசிக்க மாட்டானா
.இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே வாகை,இன்னுமா அர்ஜூனை நம்பறீங்க
.