அன்னையர் தினம்

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் மக்களே...

எது எதுக்கோ கவிதை எழுதறோம்.. ஆனா நமக்கு கை பிடிச்சு எழுத கத்துக்கொடுத்தது அம்மா தானே...

அவங்களுக்காக கவிதைகள் இல்லைன்னா எப்படி ??!!!

1557639376558.png
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
நான் ஜனிக்காத
சமயம்
நான் இல்லை
என்ற சுமை...
உன் கருவில்
நான்
தடம் பதித்தபோது
என்னை
தாங்கி நின்ற சுமை...
நான் ஜனித்த பின்
என் பொறுப்புகள்
என்ற சுமை.....
என் குழந்தை பருவத்தில்
நெறியான வழிகாட்டுதல்
என்ற சுமை...
என் யௌவன பருவத்தில்
என் கோபதாபங்களை
தாங்கிக்கொள்ளும் சுமை...
என் வாலிபத்திலும்
என் எதிர்காலம்
என்ற
சுமையை உன்னிடம்
திணித்து
காலம் முழுவதும்
எனக்காய்
இத்தனை சுமைகளை
சுகமாய் தாங்கிய
என் அன்னைக்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
 

Joher

Well-Known Member
என் அன்னையின் அரவணைப்பை
ஒரு மகளாய் உணராததை கூட
நான் அன்னையானதும் உணர்ந்தேன்....

அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.....
 

naveensri

Well-Known Member
கைபிடித்து தடம் பதிக்க வைத்தாய்...
சொல்கொடுத்து இடம் பிடிக்க செய்தாய்....
அன்பிலே அறிவை வளர்த்தாய்...
அயர்ந்த போதும் பசியை போக்கினாய்....
கருவினில் சுமந்து வாழ்வின்
வசந்தத்தை கற்றுக் கொடுத்தவள்......
கல்லறையில் உறங்கி
இழப்பினை கற்றுக் கொடுத்தாய்....
 
Last edited:

Suvitha

Well-Known Member
அம்மா...
மூன்றெழுத்து மந்திரம்...
நாம் அழைக்கும் போது
ஆனந்தமென்றால்...


பெண்ணாய் பிறந்த நம்மை
நாம் மடிதாங்கிய பிள்ளை
அழைக்கும் போது
பேரானந்தம்...


என் அன்னைக்கு நன்றி
என்னை இந்த உலகிற்கு தந்தமைக்கு...
கடவுளுக்கு நன்றி
என்னை என் அம்மாவிற்கு தந்தமைக்கு...
 

Seethavelu

Well-Known Member
கடவுளே உனக்கு என் நன்றிகள்
என் அன்னையை நானுணர.......
என்னை அன்னையாக்கியதற்க்கு...
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நான் ஜனிக்காத
சமயம்
நான் இல்லை
என்ற சுமை...
உன் கருவில்
நான்
தடம் பதித்தபோது
என்னை
தாங்கி நின்ற சுமை...
நான் ஜனித்த பின்
என் பொறுப்புகள்
என்ற சுமை.....
என் குழந்தை பருவத்தில்
நெறியான வழிகாட்டுதல்
என்ற சுமை...
என் யௌவன பருவத்தில்
என் கோபதாபங்களை
தாங்கிக்கொள்ளும் சுமை...
என் வாலிபத்திலும்
என் எதிர்காலம்
என்ற
சுமையை உன்னிடம்
திணித்து
காலம் முழுவதும்
எனக்காய்
இத்தனை சுமைகளை
சுகமாய் தாங்கிய
என் அன்னைக்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

wooowwwwww awesome...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
என் அன்னையின் அரவணைப்பை
ஒரு மகளாய் உணராததை கூட
நான் அன்னையானதும் உணர்ந்தேன்....

அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.....

3 lines thanaa jo??!!
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
கைபிடித்து தடம் பதிக்க வைத்தாய்... சொல்கொடுத்து இடம் பிடிக்க செய்தாய்.... அன்பிலே அறிவை வளர்த்தாய்... அயர்ந்த போதும் பசியை போக்கினாய்.... கருவினில் சுமந்து வாழ்வின் வசந்தத்தை கற்றுக் கொடுத்தவள்...... கல்லறையில் உறங்கி இழப்பினை கற்றுக் கொடுத்தாய்....

woooooww
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top