I R Caroline
Well-Known Member
எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் உற்சாகப் பானம்தான் பானு மேம். அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தும் உற்சாக வார்த்தைகள் இனிமேல் வராதே... பானு மேம் முகம் கண்டதில்லை, அவர்கள் குரல் கேட்டதில்லை. ஆனால், நான் போடும் அனைத்து போஸ்டிங்கிலும் கேலியும் கிண்டலுமாக கொடுக்கும் அவர்கள் வார்த்தைகள் மூலம் என் மனதில் மட்டுமில்லை அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்தார். அடுத்த நாவலுடன் சீக்கிரம் வாங்க கரோ டியர்னு சொன்னவர் வரமுடியா இடத்துக்கு சீக்கிரம் சென்றாரே... நினைக்கும் போது கண்களில் வடியும் நீரை நிறுத்த முடியவில்லை. எங்கள் கதைகள் தளத்தில் இருக்கும் வரை உற்சாகமளிக்கும் வார்த்தைகளுடன் பானு மேம் நினைவுகள் நம்முடன் உயிரோடு இருக்கும்.