ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaserவாங்க நம்ம தியா குட்டிய meet பண்ணலாம்.
ஆபரேஷனுக்கு பிறகு சுந்தரிப் பாட்டி இப்பொழுதுதான் சற்று தேறி இருந்தார். கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தேயிலை தோட்டத்தோடு இந்த வீட்டையும் வாங்கி இருக்க, அவருடைய மகன் பிறந்ததும் இந்த வீட்டில் தான். திவ்யா பிறந்த பின் நேர்த்திக் கடனை நிறை வேற்ற சென்ற அவர்களின் வண்டி விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்தது பாட்டியும், பேர்த்தியும் மட்டுமே! அன்றிலிருந்து திவ்யாவை தனியாக விட்டதே இல்லை. அதனால் அவளும் உலகம் அறியாது பாட்டியே கதியென்று இருந்து விட்டாள்.
தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு கொடுத்து கொஞ்சம் காசு வர பாட்டி பேர்த்தி இருவரினதும் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ள, வேறெந்த தேவையும் அவர்களுக்கு இருக்க வில்லை. திவ்யாவின் கல்யாணத்துக்காக என்று பாட்டி சிறுது பணம் மாதாந்தம் வங்கியில் போட்டு வந்தாலும், அதை பற்றி திவ்யாவிடம் சொல்லவுமில்லை.
அதற்க்கு ஒரே காரணம் பதினாறு வயதிலிருந்து அவளுக்கு வரன்கள் வர "நா கல்யாணம் பண்ணி உன்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்" என்று திவ்யா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதே!
அவளை சமாதானப் படுத்தியவர் "முதல்ல படி" என்று அதட்டி விட்டு நகர்ந்து கொள்வதோடு அவள் இன்னும் சிறு பிள்ளை, வயதோடு பக்குவம் வர புரிந்துக் கொள்வாள் என்று விட்டு விட்டார்.
பாட்டியையே சுற்றி வந்தவளுக்கு பூக்கள் மீது ஆர்வம் இருக்க, மாலை நேரமும், பாடசாலை விடுமுறை தினங்களிலும், சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடத்தில் பூக்கடையொன்று ஆரம்பித்தாள். சொற்ப வருமானமேயானாலும், மனத்திருப்திக்காக செய்ததால் பாட்டியும் அவள் வழியில் விட்டு விட சுந்தரிப் பாட்டியும் அவளோடு கடையில் சில சமயம் இருப்பார்.
கடையில் இருந்த ஒருநாள் சுந்தரிப் பாட்டி திடீரென மயங்கி விழவும் சுற்றி இருந்தவர்களின் உதவியோடு அவரை மருத்துவ மனையில் அனுமதித்தவள் அவருக்கு இதயத்தில் சின்ன பிரச்சினை இருக்கு ஆப்ரேசன் பண்ணனும் னு டாக்டர் சொல்ல அவளுக்கு தெரிந்தது பணம் கட்டவில்லையென்றால் பாட்டி செத்துப் போய் விடுவார் என்பது மாத்திரமே!
பாட்டியை தவிர யாருமில்லை, யாரிடம் உதவி கேட்பது, பாட்டி சேமித்து வைத்திருக்கும் பணத்தை பற்றியும் அறியாதவள் பூ கடையில் கருத்த மேகம் போல் அமர்ந்திருந்தவளுக்குத்தான் கயல்விழி, மாலையையும், வளையல்களையும் கழட்டிக் கொடுத்து உதவியது.
ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து பாட்டி கண்களை திறந்த பின் தான் திவ்யாவுக்கு உயிரே வந்தது. பாட்டியின் உடம்பும் கொஞ்சம் தேற ஆபரேஷன் பண்ண பணத்துக்கு என்ன பண்ணணு கேக்க, கயல்விழி உதவி செய்ததை சொல்ல, இப்படியும் மனிதர்களா? என்று ஆச்சரிய பட்டவர், திவ்யாவை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து விட்டேனோ! என்ற எண்ணம் மேலோங்க அவளை எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கும் பாக்கும் வர என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலானார்.
கயல்விழியை சந்தித்ததும், திலகாவின் நிலையையும் அறிந்த பின் அவர்களை தனியாக விட மனமில்லாது கூடவே கூட்டிட்டு வந்து அடைக்கலமும் கொடுத்தார். யாழிசை அன்று செய்த உதவி இன்று அவளுக்கு கை கொடுத்தது.
ஆபரேஷனுக்கு பிறகு சுந்தரிப் பாட்டி இப்பொழுதுதான் சற்று தேறி இருந்தார். கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தேயிலை தோட்டத்தோடு இந்த வீட்டையும் வாங்கி இருக்க, அவருடைய மகன் பிறந்ததும் இந்த வீட்டில் தான். திவ்யா பிறந்த பின் நேர்த்திக் கடனை நிறை வேற்ற சென்ற அவர்களின் வண்டி விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்தது பாட்டியும், பேர்த்தியும் மட்டுமே! அன்றிலிருந்து திவ்யாவை தனியாக விட்டதே இல்லை. அதனால் அவளும் உலகம் அறியாது பாட்டியே கதியென்று இருந்து விட்டாள்.
தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு கொடுத்து கொஞ்சம் காசு வர பாட்டி பேர்த்தி இருவரினதும் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ள, வேறெந்த தேவையும் அவர்களுக்கு இருக்க வில்லை. திவ்யாவின் கல்யாணத்துக்காக என்று பாட்டி சிறுது பணம் மாதாந்தம் வங்கியில் போட்டு வந்தாலும், அதை பற்றி திவ்யாவிடம் சொல்லவுமில்லை.
அதற்க்கு ஒரே காரணம் பதினாறு வயதிலிருந்து அவளுக்கு வரன்கள் வர "நா கல்யாணம் பண்ணி உன்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்" என்று திவ்யா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதே!
அவளை சமாதானப் படுத்தியவர் "முதல்ல படி" என்று அதட்டி விட்டு நகர்ந்து கொள்வதோடு அவள் இன்னும் சிறு பிள்ளை, வயதோடு பக்குவம் வர புரிந்துக் கொள்வாள் என்று விட்டு விட்டார்.
பாட்டியையே சுற்றி வந்தவளுக்கு பூக்கள் மீது ஆர்வம் இருக்க, மாலை நேரமும், பாடசாலை விடுமுறை தினங்களிலும், சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடத்தில் பூக்கடையொன்று ஆரம்பித்தாள். சொற்ப வருமானமேயானாலும், மனத்திருப்திக்காக செய்ததால் பாட்டியும் அவள் வழியில் விட்டு விட சுந்தரிப் பாட்டியும் அவளோடு கடையில் சில சமயம் இருப்பார்.
கடையில் இருந்த ஒருநாள் சுந்தரிப் பாட்டி திடீரென மயங்கி விழவும் சுற்றி இருந்தவர்களின் உதவியோடு அவரை மருத்துவ மனையில் அனுமதித்தவள் அவருக்கு இதயத்தில் சின்ன பிரச்சினை இருக்கு ஆப்ரேசன் பண்ணனும் னு டாக்டர் சொல்ல அவளுக்கு தெரிந்தது பணம் கட்டவில்லையென்றால் பாட்டி செத்துப் போய் விடுவார் என்பது மாத்திரமே!
பாட்டியை தவிர யாருமில்லை, யாரிடம் உதவி கேட்பது, பாட்டி சேமித்து வைத்திருக்கும் பணத்தை பற்றியும் அறியாதவள் பூ கடையில் கருத்த மேகம் போல் அமர்ந்திருந்தவளுக்குத்தான் கயல்விழி, மாலையையும், வளையல்களையும் கழட்டிக் கொடுத்து உதவியது.
ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து பாட்டி கண்களை திறந்த பின் தான் திவ்யாவுக்கு உயிரே வந்தது. பாட்டியின் உடம்பும் கொஞ்சம் தேற ஆபரேஷன் பண்ண பணத்துக்கு என்ன பண்ணணு கேக்க, கயல்விழி உதவி செய்ததை சொல்ல, இப்படியும் மனிதர்களா? என்று ஆச்சரிய பட்டவர், திவ்யாவை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து விட்டேனோ! என்ற எண்ணம் மேலோங்க அவளை எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கும் பாக்கும் வர என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலானார்.
கயல்விழியை சந்தித்ததும், திலகாவின் நிலையையும் அறிந்த பின் அவர்களை தனியாக விட மனமில்லாது கூடவே கூட்டிட்டு வந்து அடைக்கலமும் கொடுத்தார். யாழிசை அன்று செய்த உதவி இன்று அவளுக்கு கை கொடுத்தது.