ஓகே....மருது கோவக்காரன்....கடத்தல் தொழில் செய்து ஏகப்பட்ட பணம் சேர்த்து வைச்சு இருக்கான் .....அப்புறம் பணம் போதும் நியாமா தொழில் செய்யலாம்ன்னு விட்டுட்டான் .....ஜெயந்தி பார்க்குறான் .....இதுவரை இல்லாத ஆசை எல்லாம் வருது ....நமக்குன்னு ஒருத்தி .....அவனுக்கு பார்த்து செய்யும் ஒருத்தி .....அவனுக்குன்னு ஒரு குடும்பம் இப்படி .....அவளோட குடும்பத்துக்கு ஒரு இக்கட்டான நேரத்துல உதவி செய்யறான்......அதையும் அவ கிட்ட உனக்காக தான் செய்யறேன்னு சொல்லி தான் செய்யறான் .....
முதல் தடவை அவனாவே வலிய போய் செய்யும் உதவி தான்.....
போலீஸ் ஸ்டேஷன் போறது.....
அப்புறம் தான் ஜெயந்தி போய் பேசுறது......
அண்ணனை கண்டுபிடிக்கிறது......
அண்ணனுக்கு ஹாஸ்பிடல் செலவு......
கேஸ் ல இருந்து பணம் எங்கே போச்சுன்னு கண்டுபிடிச்சி கட்டாமல் இருப்பது.....
தம்பிக்கு counselling ++++++++
கல்யாணத்துக்கு........
இவ்ளோ செய்தவன் தான் பெர்லின் க்கும் கொடுத்திருப்பான்.......
எழவே விடாமல் அடிக்கிற மாதிரி உதவி பண்ணிவிட்டான்.......
ஜெயந்திக்கு அவன் மேல பெருசா விருப்பம் எல்லாம் இல்லை.....இருந்தாலும் அவனுக்கு திருப்பி செய்யணும்ன்னு ஒரே கரணுத்துக்காக கல்யாணம் செய்யுறா......அவன் என்கவும் கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு அவளை நிர்பந்திக்கலை....சம்மதம் சொன்னது இவ தான் .....ஜெயந்தி ஒன்னும் அப்பாவி கிடையாது .....படிச்சவ .... வெளிநாட்டுக்கு தனியா போய் வேலை செய்ற அளவு விவரம் தெரிஞ்சவ .....அவனோட பணம் எப்படி வந்ததுன்னு ஒரு யூகம் இருக்கும் ......அவனோட எதிர்பார்ப்பு என்ன என்ன தெரியாம இருக்ககாது .....அவனோட அந்த கடத்தல் பணம் தான் இன்னைக்கு அவளோட அண்ணாவை உயிரோட வைச்சு இருக்கு ......சரி, இப்போ அவனோட கடந்த தெரிய வந்தா அந்த பணத்தை தன்னோட குடும்பத்துக்கு வேணாம் சொல்லுவா .....சரி தான் , அந்த பணம் மீது கொடுத்த தன அண்ணண் உயிரும் வேண்டாம்னு சொல்லிடுவாளா ......
ஜெயந்திக்கு அவன் மேல் விருப்பம் இல்லாவிட்டாலும் இல்லைனு சொல்லமுடியாத மாதிரி திரும்ப திரும்ப உதவி செய்கிறான்.......
அவ கிட்டேயே உனக்காக தான் செய்தேன் னு சொல்றான்.......
ரெண்டு வருடம் ஆன பின்னும் அவன் தான் அண்ணன் கிட்ட கேட்கிறான்......
அவன் நிர்பந்திக்காவிட்டாலும் தலைக்கு மேல் கடன் இருக்கு.......
வீட்டோட நிலைமையோ சொல்லவேண்டாம்...... So சரினு சொல்கிறாள்.......
மருதுவின் பணம் வந்த வழி இன்னும் கூட ஜெயந்திக்கு தெரியாமல் இருக்கலாம்......
ஏன்னா படிப்பு கனவு தவிர வேறெங்கும் கவனமில்லை.......
அண்ணாவோட உயிர் காத்த பணம் எங்கிருந்து வந்தாலும் இனி மறுப்பாளா????
முன்னாடி பணத்தை கொடுத்தால் கடன் போய்டும் நன்றி தேவையில்லை என்று நினைக்கிறாள்......
என்ன காரணம் சொன்னாலும் மருதுவின் பணமும் செய்த உதவியும் தான் கல்யாணத்தில் முக்கிய பங்கு.......
படித்து முடித்ததும் கல்யாணம்....... அப்புறம் பெர்லின்....... இன்னும் முழு கதையும் தெரியல.......
அவனோட எதிர்பார்ப்பு தெரிந்து தான் முதல் நாளே தொட்டுக்கட்டுமா கேட்டதற்கு ஓகே சொல்றாள்.......
அவனுக்கு அவள் கிடைத்தால் போதும் என்கிற மனநிலை தான்........
கல்யாணத்துக்கு முன்னாடி அவள் பெர்லின் போக கேட்டதும் ஓகே சொல்றான்......
கல்யாணத்துக்கு அப்புறம் போகணுமா போகாமல் இருக்கமுடியாதா கேட்கிறான்.......
அப்போ அவளோட கனவு நன்றி கடன் எல்லாம் முன்னே நிற்குது........
ஒரு மாத வாழ்க்கை....... எதுவும் பேசுனதா தெரியலைனு வந்தது........
போன பின் தான் அவளோட தனிமை தெரியுது........ return வந்தால் போகமுடியாதுனு வேற நினைக்கிறாள்.......
ஜெயந்தி அப்பா அம்மா அண்ணன் யாருக்கும் கல்யாணம் பிடிக்கலை .....விலகி இருக்கிறவங்க ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் .....கை நிறைய சம்பளம் வேற.....அவ்வளோ ரோஷம் இருந்தா வேற இடத்துல வேலை பார்த்து பணம் திருப்பி கொடுக்க வேண்டியது தானே .....ஜெயந்திக்கு கூட வெளிநாட்டுல வேலை கிடைச்சது இல்லையா , பணம் தித்திருப்பி கொடுக்கிறதா சொல்லி கல்யாணத்தை தன்மையா மறுத்து இருக்கலாமே ....அவன் ஒன்னும் கெட்டவன் இல்லையே......கட்டாய தாலி எல்லாம் கட்டி இருக்க மாட்டான் .....அந்த ஏரியா பஞ்சாயத்து பண்ணுறவன் அவன்.....
அண்ணன் சொல்லுவான்....... மருதுக்கு யாருமில்லை....... உனக்கும் பிடிக்காமல் போச்சுன்னா அவர் பாவம்னு.......
இப்போ பிடிக்கலைனு ஒரு காரணமே இல்லை.......
பிடித்தம் தான்........ கனவுக்கு பின்னால் தான் ஒரு ஆதர்ஷ வாழ்க்கை.......
இவ்ளோ உதவி வாங்கிவிட்டு பணத்தை மட்டும் திருப்பி கொடுப்பதால் கடன் வேணா போகலாம்.......
செய்த உதவிக்கு நன்றியுள்ளவர்களா இருக்கவேண்டாமா????
அங்கே தான் வீடே தவறிடுச்சு........
பொண்ணு போகவேண்டாம் சொல்லியிருக்கணும்.......
அவன் permission குடுத்தான்னு போனால் கூட அம்மா கண்டிப்பா வரணும் வந்துட்டு போ சொல்லியிருக்கலாம்.......
வந்திருந்தால் அடுத்த step அவன் பார்த்திருப்பான்...... ஆனால் வரல........ ஓகே........
ஓகே.....இப்போ அவ கனவு நனவாகி திரும்பி வந்துட்டா ......இவன் இப்போ தப்பு மேல தப்பு பண்ணுறான் ....பேசலை, அவ வந்து அணைக்கிறப்போ தள்ளி விட்டுட்டான் ....சொல்லாம கொள்ளாம எங்கோ போனான் ......இப்போ இவ ஒரு தப்பும் பண்ணாம பேய் அரை அறைந்து டான் .....எல்லாமே இவன் தப்பு தான் ....என்ன தண்டனை கொடுக்கலாம் ??????
வந்த பிறகு அவன் பண்ணுறது தப்பு தானே........
ஏர்போர்ட் ல மறைந்து உட்கார்ந்துட்டு return வர்றது........
அம்மாவை கட்டிபுடிச்ச சொல்றது......
அவங்களை வரவேண்டாம்னு நீ சொல்லயிருக்கணும்னு சொல்றது......
இவனுக்கு யாருமில்லை......... அதுக்காக அவளையும் அம்மா அப்பா முக்கியமில்லைனு சொல்லலாமா???
அம்மா வீட்டுக்கு போயிட்டு 11 மணிக்கு வர்றது........ அவளுக்கு தான் தெரியலைனாலும் அம்மா சொல்லி சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பியிருக்கணும்...... அதுவுமில்லை.........
night அணைச்சுக்கிட்டு தூங்குன பொண்டாட்டி கிட்ட இருந்து எழும்பி வெளிய போறது சரியா????? அவன் பேசாமல் படுத்திருந்தாலே பாதி சரியா போயிருக்கும்......
அப்புறமும் சண்டை வந்துடும்னு பைக் எடுத்துட்டு தனிமூன் போனது சரியா????
சின்ன பொண்ணு வீட்டுல தனியா விட்டுட்டு எதில் இருந்து தப்பிக்க வெளியே போனான்......
அடுத்த நாள் முழுதும் வராமல்........ மனசுக்கு எவ்ளோ கஷ்டமான விஷயம்.......
ஆண்கள் மனசுக்கு சரியில்லைன்னா சட்டையை போட்டுட்டு வெளியே போய்டுவாங்க.......
பொண்ணுங்க????? வீட்டுக்குள்ளேயே உக்கார்ந்து அழுது யார்கிட்டேயும் சொல்லமுடியாமல்....... பேசினால் சண்டை வரும்னு மனசுக்குள்ளேயே அழுத்தி வச்சி......
ரொம்ப கஷ்டமான நிலைமை........
அப்புறமும் கூட அடிக்கிறான்....... அப்படி என்ன கண் மண் தெரியாத கோபம்?????
வர்ஷினி மாதிரி என்னோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னா இவனை அனுசரித்து போகணும்னு போறது தான்.......
அங்கே ஈஸ்வர் அப்படி தங்குவான் அவளை.......
இவன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே னு இருக்கிறான்........
கோபத்தில் ரெண்டு பேரும் வாயை விடுறாங்க....... அதுவும் ஜெயந்தி ஒரு படி மேல்........
7 மணிக்கே வந்துட்டான் சொன்னாங்க.......
நைட் என்னவாக போகுது??????
அம்மா ,யூகம் சரியில்லை...... வீட்டுல போய் என்ன சொல்லியிருப்பாங்க?????
நாளைக்கு அம்மா இவன் கடைக்கு போய்விட்டான் தெரியும்வரை இங்கே வரமாட்டாங்க......
இவளோட கதி என்ன???? நானும் இல்லை உனக்கு சொல்றாள்.........
என்ன பண்ணுவாள்?????? ஏற்கெனவே தனி படுக்கை......
இப்போவே அம்மா வீட்டுக்கு போய்டுவாளா?????
அதன் பின் தான் அப்பாவும் அண்ணனும் களம் இறங்குவாங்களா?????
கடைக்கு வரலைன்னு அடுத்தவங்க பேசுவாங்கனு பார்க்கிறவன் இவளை போக விடுவானா????