Saththamindri Muththamidu Final 3

Advertisement

Sundaramuma

Well-Known Member
Wow super....
Mam thulasi thambi prasanna va thiru chithappa ponnu virumbinathu yennachi... Meera va kooda innoru chithappa paiyanukku mudikka ninaichatha sonnenga... Athellam just oru info thana... So thiru appa mathiri yarum yethaiyum easy a yeduthuka matangannu arthama....
அதெல்லாம் காலத்தின் கையில்னு சொல்லிட்டாங்க சமீரா .....:)
 

Sundaramuma

Well-Known Member
மல்லி 26......
சத்தமின்றி முத்தமிடு...........

முத்தம் சத்தத்தோடு கொடுப்பதும் உண்டு.......
சத்தம் வராமல் கொடுக்கும் முத்தமும் உண்டு..........
முன்னது குழந்தைக்கும் மனைவிக்கும்.......
பின்னது மனைவிக்கு மட்டும் தான்.........
சில நேரம் திருட்டு முத்தம் மனதுக்கு பிடித்தவளுக்கு.........

ஊரில் பெரிய குடும்பம்..... பையனோட காதலை மறைக்க வீட்டு வேலையாள் பொண்ணு மணமகளாகிறாள்..........
கணவனோ மனைவியின் முகம் பார்ப்பதில்லை..... பேசுவதில்லை....... இரவில் கணவன் வேலையை கச்சிதமாக செய்பவன்......... காதலிக்கு காட்டுவதற்காக மனைவியை கற்பமாக்கிய வித்தியாசமான கணவன்.......... அவனுக்கு தெரிந்ததெல்லாம் கோபம்....... கோபம்.... கோபம்.....

காதலை மறுத்த அப்பா மீது......... மறுத்தாலும் கல்யாணம் பண்ணிய மனைவி மீது............

இவனுடைய கோபத்தீக்கு நெய் ஊற்றும் உற்றார் உறவினர்.......... வாழ்வின் வசந்தங்களை பார்க்கும் வயதில் tornado-வில் சிக்கி சுழன்றவள் துளசி....... படிக்கும் வயதில் கையில் குழந்தை......... பேச முகம் பார்க்க மறுக்கும் கணவன்....... குத்தீட்டியாய் குத்தும் மாமியார்...... உற்றார் உறவினர்..........

யாரோ ஒரு வேலையாள் சமைக்கும் உணவை உண்பவர்களுக்கு அதே இனத்து மருமகள் கொடுக்கும் தண்ணீர் கூட தீட்டாம்......... என்ன வினோதம்.......
விநோதங்களும் விசித்திரங்களும் தான் உறவுகள் என்று திரும்ப திரும்ப கொட்டி கொட்டி சொல்லும் உறவுகள்......... மருமகள் என்கிற மனித உறவை விட பொருளாதார ஏற்ற தாழ்வுகள் தான் அதிகம் கண்ணுக்கு தெறிந்தன....... வீட்டிற்கு வாழ வந்த இன்னொருத்தி கூட அவமதிக்கும் அவலம்.........

பொண்ணு கொடுத்தவர்களின் நிலையோ பரிதாபம்........... சமையல் செய்பவளுக்கு கூட kitchen வரை போகும் உரிமை.......... வீட்டுக்கு வாரிசையே கொடுத்த மருமகளின் பெற்றோருக்கு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அருகதை கூட இல்லை.......... பரிதாபம்........

கணவன் என்கிற கற்சிலைக்கோ எதுவும் உரைக்கவில்லை.......... நான் கொடுப்பதைத்தான் மற்றவர்கள் அவளுக்கு திருப்பி கொடுப்பார்கள் என்று புரிந்தும் தன் நிலையை மாற்றி கொள்ளாதவன்..........
விளைவு மனைவிக்கு பொண்ணு தான் உலகம்........
பொண்ணுக்கு அம்மாதான் உலகம்.........

கணவனை பற்றி மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை........... கையில் குழந்தையோடு இருக்கும் மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலிக்கு hospital செலவு முதல் கல்யாணம் செலவு வரை செய்த மாமனிதன் திரு..........
காதலியின் வாழ்க்கையில் இருந்த அக்கறை தன்னை நம்பி வந்த மனைவிடம் இல்லை.......... So sad.........

எது வந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று ஆராதிக்கும் துளசி......... வயிற்றின் வழியாக கணவன் மனதை தொடலாம்னு தெரிந்து சமையலையே சாட்டையாக எடுத்து சுழற்றியவள்........ மனதை தொட்டாலும் நாங்க கெத்துன்னு வெத்து வாழ்க்கை வாழ்ந்தவன் திரு........

சின்ன பொண்ணுக்கு கூட நடப்பு தெரிகிறது......... அப்பா bed இல்லாமல் தரையில் படுத்திருக்கிறார் ஏன் என்று கேட்கும் அளவுக்கு.......... அப்பா ஏன் தனியாக படுத்திருக்கிறார்னு கேட்க தெரியவில்லை....... அவ்வளவு ஈடுபாடான அப்பா.......... அம்மாவுக்கு வெளியில் இருக்கும் உலகம் தெரியவில்லை......... யாரும் தெரியவும் விடவில்லை.........

அப்பா திட்டும் போது அடிக்கும் போது அம்மா வீட்டை விட்டு போகும் போது தான் தெரிகிறது அம்மா-அப்பா வாழ்க்கை இது கிடையாதென்று........ அப்பாவிடம் முறுக்கும் குழந்தை........ கோணலானாலும் என்னோடதாக்கும் என்று இருந்த துளசிக்கு இப்போதான் உரைக்கிறது.......... உரைத்து என்ன பயன்.......... கோணாலாவே இருக்கும் கணவனை நேராக்கும் வித்தை தெரியவில்லையே.......

வீட்டை விட்டு போன மனைவியின் இழப்பை உணர்ந்தாலும் நான் ஏன் கூப்பிடனும் என்கிற அகந்தை.......... அகங்காரம்....... கேட்கிற பொண்ணுக்கும் அடி..........
ஒரு புறம் 13 வருட மனைவியின் பிரிவு.......... இன்னொரு புறம் 3 மாத காதலியின் துயரம்.......... துயரம் அசைத்த அளவுக்கு பிரிவு அசைக்கவில்லை...........

பொண்ணின் அழுகையிலும் telepathy-யிலும் சேர்க்கிறார்கள் பிரிந்தவர்கள்.......... காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக பொண்ணு வயதுக்கு வந்ததால் வந்ததாக ஒரு எண்ணம் கணவனுக்கு.........

13 வருடமாக மனைவியை உணர்ந்த கணவனுக்கு வயற்றில் அடுத்த குழந்தை வந்ததையும் உணரமுடிகிறது...... முதல் முறையாக மனைவியின் அணைப்பு......... தொடர்ந்து மனைவியின் முதல் முத்தம்.......... இனிக்கிறது.......

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் திரு........... நீ எங்கே வேணா ஏறிக்கோ........... நான் இது தான் என்று தன்னிலை மாறாத........ என் வாழ்க்கை என் கையில் என்று சொன்னாலும் அதை எப்படி கொண்டு போவதென்று புரியாமல் உழற்றிக்கொள்ளும் துளசி........
வயற்றில் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஏண்டி விட்டுட்டு போனன்னு கிழிஞ்ச record மாதிரி இழுத்தாலும் அவனை நெருங்காமல் தவித்த தவிப்பு............
மனைவியின் தவிப்பை பொருட்படுத்தாமல் அவளா வரும் வரை நெருங்குவதில்லைனு சபதம் எடுக்கும் திரு......... அவனின் சபதம் அறியாமலேயே அவனை இன்னமும் தவிக்கவிடும் துளசி........... கடைசியில் மனைவியின் உடல் நிலையை முன்னிட்டு சபதத்தை கைவிட்டு துளசியை நெருங்கும் திரு........

திரு கோபத்தை குறைத்தான்.......... திருவின் நாயகி மௌனத்தை கலைத்தாள்.........
திருவின் எஜமானி இப்போ வீட்டின் எஜமானி....... Mall owner.......... கோடிக்கணக்கான சொத்துக்களின் அதிபதி.......
அதெப்படி வெறும் தோடோடு வந்தவளுக்கு கோடிக்கணக்கில் சொத்து........... தங்கத்தாலேயே இழைத்தது வந்தவளுக்கு தெருக்கோடி கூட இல்லை......... உறவுகளின் பொருமல்........... கண்ணாலே பேசி பேசி திருவின் நெற்றிக்கண்ணை மூடிய துளசி.........

நிலைமையை கையில் எடுத்த மாமியார்...........

இடை சொறுகலாக துளசியின் தம்பி தங்களை வளைக்க முயற்சிக்கும் தங்கை...... சித்தி......... எல்லாத்தையும் ஊற்றி மூடும் சித்தப்பாக்கள்.........
மனிதர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிரகம்.........
நவகிரகங்களை மிஞ்சும் திசையில் பார்வைகள்.........

தன் பொறுமையால் கணவனை தன் வசமாக்கும் துளசி...........
மகனுக்காகவே இறங்கி வரும் மாமியார்.........
அம்மாவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் மகள்.......
மூவருக்கும் இடையில் சிக்கி தவிக்கும் திரு........
தானும் காதல் செய்து மனைவியையும் காதல் செய்ய வைத்த திரு......
மனைவியை மட்டுமல்ல படித்தவர்கள் அனைவரையும் வெட்கப்பட வைத்த திரு......

முரட்டு திரு முத்த திரு......

வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை......
கிடைத்ததோ இனிக்கவில்லை........
இனி அறுசுவையில் ஒரு சுவையாக 13 வருட மலரும் நினைவுகள்.......

பொதுவாக அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தன் பெண் குழந்தை எப்போதும் சீரும் சிறப்புமா இருக்கணும்.......
அநேகம்
அம்மா மருமகளுக்கும்.......
அப்பா மனைவிக்கும்.......
அந்த சீரையும் சிறப்பையும் கொடுப்பதில்லை.........

ஒரு காதல்(???) ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்குது என்பதை மல்லியோட style-ல் நச்சுன்னு வந்திருக்கு..........

நிழலை நிஜத்தில் காண்பித்து எங்களை மகிழ்வித்த மல்லிக்கு
"இந்த கதைக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா".......னு (தங்க நிறத்துக்கு பாட்டு தான்.....) பொய் சொல்லாமல் ஓலா பிடிச்சி ராயப்பேட்டை போய் ஒரு புக் வாங்கி (online-ல வாங்கினா வீட்டுல தெரிஞ்சிடும்...... online-ல படிச்சிட்டு book வேறவா....... இதை தடுக்க........) அதை daily revise பண்ணி அப்பப்போ inbox பண்ணுறது தான்......

இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
முத்தம் போதாதே.. சத்தம் போடாதே......
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே......
படிச்சதும் மூச்சு வாங்குது ...சோடா ப்ளீஸ் ....
அருமை பா....Hats off Jo ...:D
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,


வெற்றிக்கு முதல் படி - தோல்வி!

வீட்டில் தோற்பவன்(ள்)
நாட்டில் ஜெயிப்பான்(ள்)!

வாழ்க்கை என்பது
காதலில் அழகு...
வாழ்க்கை என்பது
அன்பினில் மிக அழகு....
வாழ்க்கை என்பது
பண்பினில் மிக மிக அழகு...
வாழ்க்கை என்பது
கொடுப்பதில்...
விட்டுக் கொடுப்பதில் பேரழகு!


வாழ்த்துக்கள் மல்லி, இப்படி ஒரு வித்தியாசமான வாழ்க்கை நீதி சொன்ன அழகிய காவியத்திற்கு, நன்றி
Super:)
 

Sundaramuma

Well-Known Member
ரொம்ப பிடித்தது........ ரசித்தது.......... கடுப்பேற்றியது..........

பாட்டி-பேத்தி........:mad::cool:
என்ன இது சத்தமா சிரிக்கிற பழக்கம் பொம்பள பிள்ளைக்கு..........
அது கிடக்குதும்மா old lady...
இப்ப்டி இருந்த உறவு
துளசி தான் திருவின் உலகம் என்று தெரிந்து தன்னையே மாற்றி கொள்ளும் அகில்........
பேய்க்கதை சொல்ல போறேன்..... ஒரு பேயே பேய் கதை சொல்கிறதே...........
அடித்த அப்பாவை பாட்டி தள்ளியதாக அம்மாவிடம் சொல்லுமிடம்........
அம்மாவை அதட்டும் பாட்டியை அதட்டுமிடம்........
உங்கப்பாவை கொஞ்சுவாங்களா??? எங்கம்மா கொஞ்சிக்குவாங்க.........
உங்கப்பா முகத்துல தாடி தான் இருக்கு........
என்னை நல்லா பார்த்துப்பானு அவளோட சரியாகிவிட்டேன்......

மீனு-சித்தப்பா.........:D:D:D
தூக்கி கொஞ்சுறது.....
சித்தி பாட்டியை கலாய்க்கிறது..........
வளைகாப்பு போட்டோ scenes
2/4 wheeler driving பற்றி புலம்புறது.......
Me recalling those days........... ever loving & everlasting memories.........

திரு-ராதா-வெங்கி.........:D:D:D
ரொம்ப attachment.......
எத்தனை உறவு வந்தாலும் இந்த உறவு எப்போவும் தனி தான்........
அதுவும் திரு வெங்கி.......... Awesome.....
வண்டி ஓட்ட கத்துக்குடுத்தா எப்பப்போ தோணுதோ அப்பெல்லாம் கூப்பிட்டு திட்டுவான்.....:D
முறைச்சுகிட்டே romance பண்ணுற......:p

வெங்கி கூஜா தூக்கும் moments.........:p:p:p
நீங்க என் எப்பவும் இவங்ககிட்டேயே என்ன செய்யணும்னு கேட்கிறீங்க............. சோபனா கிட்ட கேட்கிறதில்லை........
எல்லோரும் இருக்கிறாங்க............ நீ தூங்குற.......... உன்னை அப்புறம் தாளிச்சு எடுப்பாங்க..........
ஒரு கணவனான மனைவியை சரியாக்க தெரிந்தவன்......
சோபனாக்கும் வாழ்க்கையை கற்று கொடுத்தவன்......

திரு cousin Bros MV........:p:p:p
அவர் பைத்தியக்காரர்........ இவ்வளவு அழகான பொண்டாட்டி இருக்கும் போது வீட்டுக்கு வராம மில்லுல இருக்கார்........

திரு attack.......o_Oo_Oo_O
உங்களை எல்லாம் பார்த்து என் பொண்ணும் வீணா போய்டுவா போல............:eek::eek::eek:

திரு-துளசி.......:mad:.:p:p:p
கடுப்பேற்றும் பல/சிரிக்க வைக்கும் சில scenes இருந்தாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது..........
மசால் வடை வச்சி எலியை பொறிக்குள் சிக்க வைப்பது போல் தண்ணி வேணும்-னு சத்தமா கேட்டு துளசி தண்ணியோட வந்ததும் கதைவடைக்கும் scene..........
அதான் துளசியின் காலையை திருநீர்வண்ணமயமாக்கிய நாள்......:D

துளசி........:cool::cool::cool:
திரு என்ற ஒற்றை வார்த்தையே அவளை வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வைக்கும்.........
காதல் அது இளம் பெண்களுக்கு தான் வரும் என்று யார் சொன்னது............ பெண்களுக்கு அதனை கடந்து வாழும் போதும், அதனையும் விட வாழ்ந்து முடிக்கும் போதும் இருப்பது தான் அதீதம்......... real words.......
கடை வரைக்கும் குதிக்க தான் வச்சீங்க......:D

திரு மீசை.........:p:p:p
இந்த மீசை பட்ட பாடு........

திருவின் சந்நியாசம்........:p:p:p
"Site அடிக்கிறா....... ஆனா கொஞ்சமாட்டா இவ .......... இவ கொஞ்சாம நான் இனி இவ பக்கத்துல போகவே மாட்டேன்........ சந்நியாசம் வாங்கற நிலைமை வந்தாலும் சரி.......... பார்ப்போம் இவளா நானான்னு.............. steady-யா இருக்கணும் திரு......... அவ பக்கத்துல நீ போயி நாலு மாசம் ஆச்சு......... தடுமாறிடாதே......... சொல்லியும் அவ உன் பக்கத்துல கூட வரலை.........." Epi 18..........
மல்லி எப்போவும் நமக்கு bulb குடுப்பாங்க...........
இப்போ terror திருவுக்கே..........

துளசி's third law proposed by திரு........;););)
"நீ என் பக்கத்துல வரவேண்டாம்........ கொஞ்ச வேண்டாம்......... எதுவும் வேண்டாம்.......... எப்பவும் போல இரு....... எப்போவாவது வா........... இல்லைனா கூட ஒண்ணுமில்லை... நானே வர்றேன்..... நானே உன்னை கொஞ்சுக்குவேன்........." Epi 20/2

இதோடு...........
துளசியால் திருவை பிடித்து வைக்க முடியும்னு நம்புன ஒரே ஜீவன் மேகநாதன்........

வெகு யதார்த்தமான துளசி குடும்பம்........ அப்பா அம்மா..... பிரசன்னா....... மீரா......
தகுதிக்கு மீறி பொண்ணு கொடுத்தால் என்னாகும் என்பதற்கான எடுத்துக்காட்டு.......

இன்னமும் பணத்தையே மதிக்கும் நாதன் சகோதரர்கள்........
பணத்துக்கும் மேல படிப்பு அழகுன்னு விழும் நிரு-மேகலா........

எல்லாத்தையும் சொல்லி திரு அத்தைகள் சொல்லலைனா அதுக்கும் துளசியை தான் காரணம் சொல்வாங்க........... பஞ்சாயத்து வைப்பாங்க.........
எனக்கு பிடிக்காத characters ரெண்டு இந்த கதையில்........
தன்னோட அண்ணன் வீடுன்னு இத்தனை உரிமை எடுக்கும் இவர்கள் அவங்க husband தங்கைகளுக்கும் இதே உரிமை கொடுக்கிறார்களா???

மொத்தத்தில்.........:cool::cool::cool:
ஒரு பெரிய family environment........... மிகவும் ரசித்தேன்..........

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்........... திரு-வெங்கி.......
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்........... திரு-நாகேந்திரன்........ திரு-தருண்.......

எப்பவும் 10000வாலா heroine பார்த்து விட்டு பேசாமலே சாதித்த துளசி பார்த்து சிரிப்பு தான் வருது.....

குழந்தை குட்டியோடு சந்தோஷமான திருவை பார்த்த சந்தோசம்....
என்னமோ நம் வீட்டில் நடந்தது போல....

Book எப்போ வருதுன்னு inform பண்ணுங்க......
Awesome ....எப்படி இப்படி.....இப்போ எங்க இருக்கீங்க ஜோ ....ஊரில் இருந்து வந்துடீங்களா .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top