Exactly. கண்ணன் அம்மா, அப்பா, தங்கை,
சித்தப்பா குடும்பம் என எல்லோரோடும் சேர்ந்து வளர்ந்தவன். அதோடு வேலைக்குப் போய் பலரோடும் பழகியவன். சுந்தரி அப்படியில்லையே. அவள் கண்ணனால் ஒதுக்கப்பட்டு ஊரின் முன் அவமானப்பட்டு தந்தையை பறி கொடுத்து குழந்தை பெற்று ஒரு வயதான பாட்டியோடு வாழும் ஒரு கைத்தொழில் செய்யும் தன்மானமுள்ள ஒரு இளம் பெண். குடும்பம், கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் சாதாரண சின்ன சண்டைகள், எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் எப்போது இழுத்துபிடிக்க வேண்டும் என்ற சூட்ச்சுமங்கள் தெரியாதவள். கண்ணன் தன் பக்க நியாயத்தைப் பற்றி மட்டும் யோசிக்காமல் சுந்தரியை அணைத்துச் செல்ல வேண்டும். அதை விட்டு எதற்கெடுத்தாலும் பிரியலாம், கொஞ்ச நாளைக்கு என்று சொல்லுவது சுயநலம். அவளுடைய உ ணர்வுகளைப் புரிந்து கொள்ளாத புரிய முயற்ச்சிகாத அவனது குணம் தான் பிரச்சனைகளைப் பெரிதாக்குகின்றது (His lack of empathy is simply pure selfishness and shows he is not willing to put more time to make things right between them).
ஆம்பளைக்கு என்ன
அவன் கேட்டது கிடைக்கலேன்னா ஒண்ணு தம்மடிப்பான்
இல்லாட்டி தண்ணியடிப்பான்
இந்த பழக்கமெல்லாம் இல்லாத நல்லவனா இருந்தா இப்படி துரையைப் போல வண்டியை எடுத்துக்கிட்டு பொண்டாட்டிக்கிட்ட சொல்ல துப்பில்லாமல் அப்பன்கிட்டே மட்டும் சொல்லிட்டு ஏற்காட்டுக்கும் போவான் எலிப் பொந்துக்கும் போவான்
ஆனால் இப்படி டீயை மேலே கொட்டி நான் பார்த்ததில்லை
வாழ்வின் நெளிவு சுளிவுகள் தெரியாத சொல்லித் தர தாயில்லாத பாவப்பட்ட இருபது வயசுப் பொண்டாட்டி பொண்ணு இவனைக் காணோமுன்னு அலறணும்
ப்ரெண்ட்ஸ் கூட நல்லா ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு ஆசுவாசமாய் வந்து நாம் பிரிந்து விடலாம்ன்னு கூலாய் இவன் சொல்லுவான்
அந்த பொண்ணு சரி ராசா மவராசனா போயிட்டு வான்னு சொல்லணுமோ?
என்ன கொடுமையடா இது சரவணா?
ஏன்?
இவனோட ஆத்தாக்காரி விமலா கமலா ஆரஞ்சு வூட்டுக்குள்ளாற உட்கார்ந்து என்ன பண்ணுறாள்?
தன் மகளாட்டம் நினைச்சு சுந்தரிக்கு வாழ்க்கையை கொஞ்சம் சொல்லித் தர்றது?
வெட்டி ரோஷம் வந்து கிணற்றில் குதிக்க மட்டும் தெரியுதில்லே
அந்தம்மாவுக்கு இரண்டு மூணு பிள்ளைகள் இருக்குதானே
அதைப் போல் மகனும் நல்லா வாழ்ந்து இன்னொரு பேரனோ பேத்தியோ வரணும்ன்னு விமலா கமலா நினைக்க மாட்டாளோ?
யாருதான் பூனைக்கு மணி கட்டுவாங்களோ?