Naan Ini Nee - Precap 21

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மிதுன் நீ செய்யற துரோகம் தீபனுக்கு தெரிஞ்சா. அது தான் அவன முழுசா பாதிக்கும் .. ஷர்மா ராகா வ விட இது தான் கொடுமை.... ப்ரோக்கப் ராஜா இப்ப செம டோஸ் வாங்க ரெடியா இருக்கார்... தன்னோட டைட்டன்கிட்ட...
 

eanandhi

Well-Known Member
super
ஒரே தினத்தில் இரு விசயங்கள்..!! இரண்டுமே தீபனை நிலைகுலைய செய்யும் என்று நன்கு தெரியும்.. ஷர்மா என்பவன் தீபனின் பிடியில் இருக்கும் வரைக்குமே அவனின் ஆட்டம்.. அதே போல் அனுராகா... அவளின் காதல்.. அவள்மீது தீபனுக்கு இருக்கும் பிடித்தம்.. மோகம்.. ஆசை எல்லாம் எல்லாமே தீபனை ஒன்றும் இல்லாது செய்ய்துவிடும் என்று மிதுன் நன்கு அறிந்துகொண்டான்..

பெண்ணாசை...!! யாரை வீழ்த்தும்.. யாரை வாழ்த்தும் என்று யாருக்குத் தெரியும்..

மிதுனோ.. தீபனோ.. இருவருமே அனுராகா பற்றி இன்னும் சரியாய் அறியவில்லை.. அதுமட்டுமே நிஜம்..

மிதுன் எப்போது எப்போது என்று அந்த பூஜை தினத்திற்காக காத்திருக்க, அவன் ஏற்பாடு செய்திருந்த மாவட்ட செயலாளர்கள் விருந்தோ தடபுடலாய் நடந்துகொண்டு இருந்தது..

சக்ரவர்த்தியும் இல்லை.. தீபனும் இல்லை..

ஆனால் அனைவரும் கேட்டது “தம்பி இல்லைங்களா??!!” என்பதுதான்..

அதுவே மிதுனை மேலும் மிருகமாக்கியது..

-------------------------


ஆர்த்தி...!! இவள் எங்கே இங்கே வந்தால் என்றுதான் பார்த்தனர் தேவ் மற்றும் புனீத்..

நிஜமாகவே அவளை எதிர்பார்க்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இவள் இருக்கும்போது தீபன் வேறு வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் முழித்தனர் இருவரும்..

“ஹேய்..!!!! என்ன ரெண்டுபேரும் இப்படி முழிக்கிறீங்க??!! என்னங்கடா எனக்குத் தெரியாம எதுவும் இங்க நடக்குதா என்ன??!!” என்று இருவரின் தோளையும் செல்லமாய் தட்டி ஆர்த்தி கேட்க,

“ஹா..!!! வா.. வா ஆர்த்தி.. திடீர்னு உன்னை பார்க்கவும்..” என்று தேவ் இழுக்க,

“ஹா ஹா ஹா...!! திடீர்னா... நான் சொல்லிட்டுத் தானே போனேன் த்ரீ மன்த்ஸ்ல வருவேன்னு...” என்றவள்,

“எங்க நம்ம ப்ரேக் அப் ராஜா...??!! எலெக்சன்னு அலையுறானா??! இல்ல...” என்று சந்தேகமாய் கேட்க,

-----------------------------------------------

தாராவின் முகம் பார்த்து அனுராகா அமைதியாய் இருக்க, தாராவோ எதுவுமே பேசாது இருக்க,

“ம்மா...” என்றாள் மெதுவாய்..

“ம்ம்...”

“சைலெண்ட்டா இருக்க...”

“வேற என்ன சொல்ல??!!! முதல்லயே என் மனசுல ஒரு சந்தேகம் இருந்தது.. லவ் இஸ் நாட் எ சின்.. பட்.. அது யார பண்றோம்.. அந்த லைப் எப்படி இருக்கும் இதெல்லாம் யோசிக்கணும்.. அதுவும் என் பொண்ணுன்னு வர்றபோ நான் ரொம்ப யோசிப்பேன்..” என்றவரிடம்,

“ம்மா தீப்ஸ் விட எனக்கு...” என்று அனுராகா சொல்லும்போதே,

“நோ...!! தீபன் உனக்கு சரியா செட்டாகாது..” என்றார் உறுதியாய்..

------------------------------------------


அனுராகா கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேலே தீபனுக்கு அழைத்துப் பார்த்துவிட்டாள், அவனோ எடுக்கவேயில்லை.. அம்மா இப்படி சொன்ன பிறகு நிச்சயமாய் தீபனோடு கலந்து பேசவேண்டும், அவசரப்பட்டு எதுவும் செய்திட கூடாது என்று..

அதைப்பற்றி அவனோடு பேச அழைத்தால், அவனோ ம்ம்ஹும் அதற்கான சந்தர்ப்பமே கொடுத்தான் இல்லை..

எத்தனை முயற்சித்தும் அவனைப் பிடிக்க முடியாது போக, தேவ்விடம் அழைத்துக் கேட்க,

அவனோ “அது... அவங்க தொகுதில நாளைக்கு இருந்து பிராச்சாரம்..” என,

“அதுக்கு..??!!!” என்றாள் கோபத்தை அடக்கி..

கோபம் தான் வந்தது அவளுக்கு.. இத்தனை முறை ஒருத்தி அழைக்கிறாள் என்றால் என்னவென்று கேட்க வேண்டாமா...??!! பொறுப்புகள் என்றால் அது எல்லாத்திலும் தானே உண்டு.. கட்சியானால் என்ன காதலியானால் என்ன??!!

அவன் எங்கிருக்கிறான் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு காரை அங்கே செலுத்தினாள்.
supera iruku mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top