Kaathal Sindhum Thooral - Precap 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...

நானே.. நானே... ஆடிய காலும் படிய வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்றது போல எழுதிய கையும் கூட சும்மா இருக்க முடியாது போல.. நானே நினைச்சாலும் எழுதாம இருக்க முடியலை.. அதோட பலன் இதோ உங்களை தொல்லை செய்ய வந்திட்டேன்..

அடுத்த கதை " காதல் சிந்தும் தூறல்...." ஷார்ட் நாவலான்னு தெரியலை.. ஆனா ரொம்பவும் சின்னதா இருக்காது..

கண்டிப்பா "நான் இனி நீ.." அடுத்த மாத தொடக்கத்துல இருந்து கொடுத்திடுவேன்.. சோ இப்போ இன்னைல இருந்து தூறல்ல நனைய வாருங்க...

“அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி...”


தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள் “டூ மினிட்ஸ்...” என்று பதில் சொல்லியபடி நடந்தாள்..

சென்னையின் ஜன சந்தடிகளுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதிருந்தது அடையாரின் அந்தத் தெரு. சிறிதும் பெரிதுமாய் காம்பவுண்ட் சுவருடன் கூடிய தனி தனி வீடுகளும், கண்மணி வேக வேகமாய் நடந்துவந்து கொண்டு இருந்தாள்..
----------------------------------------------------------------------------------------------------
ஆனால் அம்மாவின் இந்த கேள்விக்கு என்ன சொல்ல??? எதையும் முயன்றால் தானே தெரியும்..

“ம்மா கண்டிப்பா நல்லபடியா செய்வேன்..” என்ற வாக்குறுதி மட்டுமே அவன் கொடுக்க முடிந்தது..

ஆனால் இப்போது அதை செயலிலும் காட்டியிருந்தான்.. நிஜமாகவே அவன் எதிர்பார்த்ததை விட நல்லபடியாகே அனைத்தும் நடந்தது.. அதிலும் கை கடிகார் வடிவமைப்பு.. மிக மிக நன்றாகவே நடந்தது.. தொழில் நல்லமுறையில் அமைந்துவிட்டது, அடுத்தது என்ன திருமணம் தானே.. இதோ அந்த பேச்சும் ஆரம்பித்துவிட்டது.

---------------------------------------------------------------------------------------------------

இப்போதும் அதே சிரிப்போடு, “தீப்ஸ் நீ சொன்னது ஹோட்டலுக்கு போய் சாப்பிட வந்திருக்கோம்னு சொன்னது போல இருந்தது... அதான்..” என்று அன்றைய நாளின் தன் நீண்ட வாக்கியத்தை பேசினாள் கண்மணி..

அவளோ ‘நீயா பேசினது....’ என்று பார்க்க, அதிரூபனுக்கும் கண்மணி சொன்னது கேட்டது சின்னதாய் ஒரு புன்னகை..

‘ஆள் அமைதின்னு நினைச்சு ஒரு நிமிஷம் ஆகலை... அதுக்குள்ள....’ என்று எண்ணியபடி அவர்கள் முன் கேட்லாக் வைக்க, தீபா டிசைன்கள் பார்க்கத் தொடங்க, கால் மணி நேரத்திற்கும் மேலானது தான் மிச்சம்.. அவளுக்கு ஒன்றும் புரிவதாகவும் இல்லை பிடித்ததாகவும் தெரியவில்லை..

-------------------------------------------------------------------------------

அதே நேரம், “ஹே கண்ஸ்....!!!!!” என்று சத்தமான அழைப்பு கேட்டு அனைவருமே பார்க்க, அங்கே நிவின் இருந்தான்..

“நிவின்.....” என்று கண்மணியின் உதடுகளும் முணுமுணுக்க, “நீ எங்க இங்க???” என்று வந்த நிவின்,

“அண்ணா அம்மா கொடுத்து விட்டாங்க...” என்று ஒரு கவரை நீட்டியவன், “அண்ணா.. ஷி இஸ் மை கிளாஸ் மேட்...” என்று கண்மணியை அறிமுகம் செய்தவன் “ஹி இஸ் மை அண்ணா....” என்று அதிரூபனையும் சொல்ல, சிநேகமாய் ஒரு சிரிப்பு அவளின் முகத்தினில் அவ்வளவே.

அடுத்து நிவினையும் கண்மணி தீபாவிற்கு அறிமுகம் செய்துவைத்துவிட்டு, “வாட்ச் வாங்க வந்தோம்...” என்றுசொல்ல,
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய இந்த, புதிய
"காதல் சிந்தும் தூறல்"-ங்கிற
அழகான, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
 
Last edited:

Nachu

Well-Known Member
Wow new story ah sakthi ka?
Title chumma romantic ah irukke......
Thooral saaral mazhaiyaga pozhiyattum :cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top