மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அந்த தமிழ்ச்செல்வி சத்யா ஸ்டோரியைப் போல
இந்த ஸ்டோரியும் ரொம்பவே நல்லாயிருந்தது, பஸ்மிலா டியர்
குடும்பம் சகோதரன் சகோதரின்னு விட்டுக் கொடுத்து வாழ்ந்த ஸ்ரீநிவாசன் கெட்டு போகவில்லை
மனைவி மூன்று குழந்தைகள் வீடு வாசல் கடை சொத்து பணம்ன்னு அவனுடைய நல்ல மனசுக்கு ஏற்றாற்போல் எல்லாமே நல்லதாக அமைந்துள்ள அருமையான வாழ்க்கை வாழும் முழுமையான மனிதன், வாசன்
சித்தி மூதேவி செய்த சதிவேலையால் அன்னையைப் பிரிந்து பிறந்த வீட்டில் கஷ்டப்பட்டாலும் கொஞ்சம் தாமதமாக கல்யாணம் ஆனாலும் மனைவியை மகாராணியைப் போல தாங்கும் ஸ்ரீநிவாசனின்
காதல் மனைவியாகி வாழ்வில் எல்லாம் பெற்று இன்பமாக வாழும் வாசுகி
தன் மீது பொறாமை கொண்டு கூமுட்டை தங்கை கூறுகெட்டத்தனமாக செய்த வேலையால் கொஞ்சம் கஷ்டப்பட்டு ராஜேந்திரன் போல ஒரு சகோதரனின் துணை உதவியுடன் வாழ்க்கையை ஜெயித்து
மீண்டும் மகளுடன் சேர்ந்த அன்னை அபர்ணா
தேவகி சரளாவின் வயிற்றில் பிறந்தாலும் யசோதை போல தன்னை வளர்த்த அம்மும்மா அபர்ணாவிற்காக உயிரையே கொடுக்க தயாராக இருந்த வாசனின் இன்னொரு அன்புத் தம்பி ரோஹன்
(முதலில் வில்லன் மாதிரி வந்துட்டு அப்புறம் ஹீரோவானவர்)
பொறுமையின் சிகரமான அன்பான அருமையான சகோதரி நித்யா
ரத்தம் சூடாக இருக்கும் பொழுது மனைவி பிள்ளைகளை நேசிக்காமல் நேரம் செலவழித்து அவர்களுடன் சந்தோஷமாக வாழாது நல்ல வாழ்க்கையை வீணடித்த ஆத்மநாதன்
அன்பான அப்பா ராமநாதன்
இன்னும் வாசுகியின் அப்பா நாதன் தங்கைகள்
சந்திரா மந்த்ரா வில்லிகள் பூர்ணா, புஷ்பா பத்மா
and சத்யா, ரமேஷ் ஸ்ரீராம் ஸ்ரீவத்சன் பாவப்பட்ட மனிதன் குருமூர்த்தி ராஜம் எல்லோருமே சூப்பர்
முக்கியமாக சஹானா அக்ஷரா ஆதி இவங்கதான்
First சூப்பர்
நல்லதொரு அழகான அருமையான குடும்ப நாவலைத் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், பஸ்மிலா டியர்
உங்களுடைய மகனின் தேர்வுகள் முடிந்து மகனின் சிறப்பான வெற்றிகளுடன் மீண்டும் இதே போல்
ஒரு அழகு நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா