மெல்லிய காதல் பூக்கும் P13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
20190904_224751.jpg

அடுத்து நாம பாக்க போறது மும்பையில் பெருகி வரும் எச்.ஐ.வி யும் விபச்சாரமும்.

மும்பை......

சனத்தொகையில் இரண்டாவது இடத்தை பிடித்து வேடிக்கை, காளியாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் விளங்கும் நகரம். அது மட்டுமா? அரசு அனுமதி பெற்று சிவப்பு விளக்கு பகுதியும் சிறப்பாக நடைபெறும் நகரம். பெண்களை பலவந்தமாக பாலியலில் ஈடுபடுத்துவது போய் இன்று கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம் பெண்களும் பகுதி நேர வேலையாக விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அதிர்ச்சியான புள்ளிவிபரங்கள் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் படித்து பட்டம் பெற்று பொறுப்பான வேலையில் இருக்கும் பெண் ஒருவர் விபச்சாரத்தை தொழிலாக கொண்டதால் எச்.ஐ.வியால் பாதிக்கப் பட்ட உண்மை சம்பவத்தைத்தான் இன்று நாம் உங்களுக்கு சொல்ல போகிறோம்.





தொலைக்காட்ச்சியில் பரப்பான நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்க, இன்று சமூகவலைத்தளத்தில் இந்த செய்தியே! பிராதான செய்தியாக வந்து கொண்டிருந்தது. எந்த அலைவரிசையை திருப்பினாலும் இதே செய்தி ஓட வேறு வழியில்லாது பார்வதி பாட்டி தமிழில் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.



ஸ்ரீராமை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு கயலோடு பேசியவாறே உள்ளேவந்த தியா பாட்டியின் அருகில் அமர்ந்துக்கொள்ள இருவரின் பார்வையும் தொலைக்காட்ச்சியில் நிலைத்தது.



images (12).jpg

இதோ இந்த பெண்ணின் பெயர் மதுரிகா, பிரபல நகைக் கடையொன்றில் உதவியாளராக ஐந்து வருடங்களுக்கு முன் பணிபுரியும் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதாகி சிறையில் இருந்து வந்தபின் முழுநேர தொழிலாக விபச்சாரம் செய்து கொண்டிருந்தவர் சமீபகாலமாக மருத்துவமைக்கு வந்து செல்வதை கண்டு கொண்டு அவரை பின் தொடர்ந்ததில் அப்பட்டமான உண்மைகள் வெளிவந்துள்ளன.



தொலைக்காட்ச்சியில் மதுரிகாவின் பெரியதொரு புகைப்படத்தை பிரசுரித்தவாறே ஒளிபரப்ப



"நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்குறப்போ எதுக்கு இந்த ஈனப் பொழப்பு" பாட்டி கண்டமேனிக்கு திட்ட ஆரம்பிக்க



"அழகா இருக்குற திமிரு, உடம்புல கொழுப்பு கூடிப் போச்சு. அதான் கடவுள் வச்சிட்டான் ஆப்பு" கயல் கருவ



"இவளுங்க கூட போற ஆம்பிளைகளை சொல்லணும்" மனதில் அனல் பறக்க தியா மொழிந்தவாறே தொலைக்காட்ச்சியில் கவனமானாள்.





தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு அஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரிகா என்ற இவருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்றியுள்ளதாக மருத்துவர் கூறிய போது அமைதியாக, நோயாளிகளுக்கு தொந்தரவில்லாமல் இருக்க வேண்டிய மருத்துவமனையில் இவர் நடந்துக்க கொண்ட விதத்தை பாருங்க....



மருத்துவமனையின் சீசீடிவி காட்ச்சிகள் சில ஒளிபரப்பு செய்யப்பட அதில் மதுரிகா மருத்துவமனை பொருட்களை உடைத்தவாறு கத்துவது தெரிந்தது.



"இது.... மதுரிகா இல்ல" ரிஷியின் குரல் பின்னால் கேட்கவே மூவரும் திரும்ப "இவ என் பி. ஏ வாக வேல பாத்தவ. என்ன பிரச்சினை" யோசனையாக தொலைக்காட்ச்சியை ஏறிட்டவாறே கயலின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.



நீ மட்டும் என் வாழ்க்கைல வரலைனா? இந்த மாதிரி ஒரு நிலைமைதான் வந்திருக்கும்" தொலைக்காட்ச்சியில் பெரிதாக எச்,ஐ.வி என்று மின்னிக் கொண்டிருப்பதைக் காட்டியவாறே சொல்ல தியா முற்றிலும் உடைத்துப் போனாள்.

8 (2).jpg

பதில் எதுவும் சொல்லாது அலைபேசியை துண்டித்த பிரதீபன் மனைவியின் மீதிருந்த பார்வையை நீக்காது காபியை அருந்தலானான்.



"என்னடா... கட்டின பொண்டாட்டியையே இப்படி சைட் அடிக்கிற? டெக்னோலஜி வளர்ந்ததுல பிரைவசி என்பதே இல்லாம போச்சு" அறைக்கதவை மூடிவிட்டு வந்த அமுதன் ப்ரதீபனருகில் கதிரையை போட்டு அமர



"அவ இன்னும் கொஞ்சம் நேரத்துல கண்ணு முழிப்பா"



"மலர எதுக்கு கடத்தின?" அமுதன் புரியாது ப்ரதீபனை ஏறிட



"அத அவகிட்ட கேக்கும் போது தெரிஞ்சிக்க" புன்னகைத்தான் பிரதீபன்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ஜான்சிராணி மலர்விழியை பிரதீபன்தான் கடத்தியிருப்பான்னு நினைச்சேன்
அது சரியாக இருக்கே
கேடி பில்லா கில்லாடி ரங்கா
பணப் பேராசை பிடித்த மதுரிகாவுக்கு தேவையான சரியான தண்டனைதான் கிடைச்சிருக்கு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top