ப்ரதீபன் பெண்களை ஏறிட்டும் பார்க்க மாட்டான், சின்ன தவறு நேர்ந்தாலும், குதறி எடுத்து விடுவான், குடி பழக்கமும் அவனுக்கு இல்லை என்றிருக்க அவனை போல் ஒருவனை கணவனாக அடைவது எதோ தனக்கு கிடைக்கும் வரம் என்று கருதி அவனை அடைய முடிவு செய்து அவன் வரும் வழியில் எதிர் புறம் நடந்தவள் அவன் அருகில் வரும் பொழுது உயர் குதிகால் காலணி பிசறியது போல் சாய அவனோ அவளை தாங்காது விலகியதால் கீழே விழுந்தது மாத்திரமல்லாது, காலும் பிசகி விட்டது.
பிரதீபன் அவளை தொடாதது கூட அவன் மேல் நல்லெண்ணத்தை வளர்த்திருக்க அடுத்த திட்டமாக அவனோடு ஒருவரை சந்திக்க சென்ற இடத்தில் மயங்கி விழ செய்வதறியாது அவளை தூக்கிக் கொண்டு டாக்டரிடம் சென்றவன் மருந்தும் வாங்கி கொடுத்து அவள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் வாசலிலையே இறக்கி விட தன் திட்டப் படி தான் எல்லாம் நடக்கின்றது என்ற இறுமாப்பில் இரண்டு நாள் கழித்து அதையே காரணம் காட்டி அவனுக்கு நன்றி சொல்ல ப்ரதீபனின் கையை பிடிக்க அவனோ அவளின் கன்னம் சிவக்க அறைந்திருந்தான்.
ரிஷி பெண்களோடு பழகுவது பிரதீபன் அறிந்திருந்த படியால் அவனுக்கு பெண்களால் எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாதென்று ரிஷி அறியாமளையே அவனை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த மதுரிகா ரிஷியிடம் நடந்து கொண்ட விதம் உடனே தெரியவர அவளை பழிவாங்க சந்தர்ப்பம் பாத்திருந்தவன் அவள் ஒருவனோடு ஹோட்டல் அறையில் தாங்கும் நேரம் பார்த்து போலீசில் மாட்டி விட்டு டிவி, பத்திரிக்கையென்று அவளின் மானத்தையும் காற்றில் பறக்க விட்டான்.
அவள் கைதாகி வெளியே வரும் பொழுது அவளை கேவலமாக பாத்திருந்த ப்ரதீபனை கண்டு அவளின் மானம் பறிபோக பிரதீபன் தான் காரணம் என்று புரிந்துக் கொண்டவள் வன்மத்தோடு அவனை பார்த்து விட்டே அகன்றாள்.
இன்று பிரதீபன் சிரித்து பேசி ஒரு பெண்ணோடு கொஞ்சிக் கொண்டிருப்பதைக் காணக் காண தான் ஜெயிலுக்கு செல்ல பிரதீபன் காரணம் அவன் சந்தோசம் நிலைக்காக கூடாதென்று என்ன செய்யலாம் என யோசித்தவள் தனக்கு தெரிந்தவரிடம் கேட்டு அவனோடு அமர்ந்திருக்கும் பெண் அவனுடைய மனைவி என்று அறிந்துக் அவனை தன்னால் அடைய முடியாத குரோதமும் தலைத்தூக்க தியாவை பின் தொடர்ந்தாள்.